search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Completion"

    • தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் நிறைவு விழா நடத்தப்படாமல் பொருட்காட்சி முடிவடைந்தது.

    சென்னை:

    தமிழக அரசின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 48-வது சுற்றுலா பொருட்காட்சி சென்னை தீவுத்திடலில் கடந்த ஜனவரி மாதம் 12-ந்தேதி தொடங்கியது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


    இந்த பொருட்காட்சியில், 51 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அரங்குகளில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இவை தவிர கடைகள், பொழுதுபோக்கு வளாகம் ஆகியவையும் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், 32-க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்கள், ராட்சத சாகச விளையாட்டு சாதனங்கள், நவீன கேளிக்கை சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றி ருந்தன. அரசு பள்ளி மாண வர்களின் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தினந்தோறும் பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக சென்று சுற்றுலா பொருட்காட்சியை கண்டு களித்தனர். சுமார் 70 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த சுற்றுலா பொருட்காட்சி நேற்று முடிவடைந்தது. இந்த பொருட்காட்சியை மொத்தம் 5.86 லட்சம் பேர் கண்டு களித்துள்ளனர். இவர்களில் 4,91,361 பேர் பெரியவர்கள், 94,637 பேர் குழந்தைகள் ஆவர். பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடப்பதால் கடந்த வாரம் பொது மக்களின் வருகை குறைந்து காணப்பட்டது.

    தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் நிறைவு விழா நடத்தப்படாமல் பொருட்காட்சி முடிவடைந்தது. சிறந்த அரங்குக்கான விருது ஜூன் மாதம் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • நெட்டப்பாக்கம் கருணாலயம் கிராம நல சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
    • அனைவரையும் கருணால–யம் கிராம நலச்சங்க அலு–வலர் சவிதா வரவேற்று பேசினார்.

    புதுச்சேரி:

    கருணாலயம் கிராம நலச்சங்கம் புதுச்சேரி கணினி பயிற்சி முடித்த–வர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நெட்டப் பாக்கம் கருணாலயம் கிராம நல சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு கருணா–லயம் கிராம நலச்சங்க இயக்குனர் அங்காளன் தலைமை தாங்கி நோக்கஉரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநில செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் டாக்டர் லட்சுமிபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி னார்.

    நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட பயிற்சி முடித்த–வர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக அனைவரையும் கருணால–யம் கிராம நலச்சங்க அலு–வலர் சவிதா வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சி முடிவில் கருணாலயம் கணினி பயிற்சி மைய ஆசிரியை வனராஜா நன்றி கூறினார்.

    • குடிநீர் திட்டப்பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் குமாா் நகரில் உள்ள வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • இப்பணிகளை செப்டம்பா் மாத இறுதிக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்

    திருப்பூர்,

    குடிநீர் திட்டப்பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் குமாா் நகரில் உள்ள வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு திருப்பூா் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் தலைமை வகித்தாா்.

    இதில் அவா் பேசியதாவது:-

    திருப்பூா் வடக்கு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூா் ஒன்றியம் பட்டம்பாளையம், சொக்கனூா், மேற்குபதி, வள்ளிபுரம், தொரவலூா், ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லூா், காளிபாளையம், கணக்கம்பாளையம், பொங்குபாளையம் ஆகிய 10 ஊராட்சிகளுக்கு அன்னூா்-மேட்டுப்பாளையம் குடிநீர் திட்டப்பணிகள் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டன.

    இப்பணிகளை செப்டம்பா் மாத இறுதிக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.

    கூட்டத்தில் ஒன்றியக்குழுத் தலைவா் சொா்ணாம்பாள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வேலுசாமி, ஜோதிநாத், ஒன்றிய உதவிப்பொறியாளா்கள் கற்பகம், மகேஸ்வரி, ஒன்றியக்குழு உறுப்பினா் ஐஸ்வா்ய மகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது.
    • 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    கீழக்கரை

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ராமநாதபுரம் வேலுமாணிக்கம் ஆக்கி விளையாட்டு மைதானத்தில் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது.

    ஹாக்கி பயிற்றுனர் மணிகண்டன் கடந்த 15 நாட்களாக மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். இந்த நிலையில் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கணேஷ் தலைமை தாங்கினார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி துணைத்தலைவர் ஜெயக்குமார் வாழ்த்திப் பேசினார். இதில் தடகளம், ஓட்டப்பந்தயம், குழு விளையாட்டுப் போட்டிகள், கைப்பந்து என பல பயிற்சிகளில் கலந்து கொண்ட 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    • கரியகோவில் அணைக்கு தினமும் 50 கன அடி நீர் கூடுதலாக கிடைக்கும் கைக்கான்வளவு திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது.
    • இதில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பாப்பநாயக்கன்பட்டியில் 188.76 ஏக்கரில் கரியகோவில் அணை கட்டப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழ்நாட்டில் மேட்டூர், பவானிசாகர், அமராவதி, பாபநாசம், பெருஞ்சாணி, சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, முல்லைப் பெரியாறு, திருமூர்த்தி, வைகை உள்பட 100-க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. இந்த அணைகள் தமிழகத்தின் நீர்வளத்தை பாதுகாக்கின்றன.

    குறிப்பாக சேலம் மாவட்டத்தில் மேட்டூர், கரியகோவில், ஆனைமடுவு உள்ளிட்ட முக்கிய அணைகள் உள்ளது. இதில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பாப்பநாயக்கன்பட்டியில் 188.76 ஏக்கரில் கரியகோவில் அணை கட்டப்பட்டுள்ளது. அதன்மூலம் சுற்றுவட்டார கிராமங்களில் 3,600 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    அணைக்கு கூடுதல் தண்ணீர் பெற 2020-ல் கைக்கான்வளவு நீரோடை திட்டம் அமைப்பது குறித்து அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். ெதாடர்ந்து 7.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பணியை 18 மாதங்களில் முடிக்க அரசு அறிவுறுத்தியது.

    மதகுகள் அமைப்பு

    அதன்படி 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பணி தொடங்கப்பட்டது. செப்டம்பர் பருவ மழைக்கு பின், 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மீண்டும் பணி தொடங்கப்பட்டது. கரியகோவில் அணைக்கு கைக்கான்வளவு நீரோடையில் இருந்து புதிதாக ஓடை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. அங்கு மதகுகள் அமைத்து, அைணக்கு தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விவசாயிகள் மகிழ்ச்சி

    தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் (நீர்வளம்) கூறியதாவது:-

    கைக்கான்வளவு திட்டத்தில் சீரான இடைவெளியில் 8 தொட்டிகள் அமைத்து, அங்கிருந்து நீர் வர, 295 மீட்டர் தூரம் கான்கிரீட் கால்வாய் அமைக்கப்படுகிறது. கால்வாய் கட்டுமானப்பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. குறிப்பாக 90 சதவீத பணி முடிந்துள்ளது.

    நவம்பரில்...

    நவம்பரில் இத்திட்டம் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது. இதன் மூலம் கரியகோவில் அணைக்கு பருவ மழையின்போது தினமும் 50 கன அடி நீர் கூடுதலாக கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
    • நகர்மன்ற தலைவர் ஆனந்த், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் ஆய்வ செய்தனர்.

    சிவகங்கை நகராட்சியில் கட்டப்பட்டுவரும் அறிவுசார் மையம், செட்டியூரணியில் கரைகளை பலப்படுத்தும் பணி, வாரசந்தை, தெப்பக்குளம், ராணி ரெங்க நாச்சியார் பஸ் நிலையம் ஆகியவற்றில் நடக்கும் பணிகளை ஆய்வு செய்த அவர்கள் இதுதொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

    அதன்பின் நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா கூறியதா வது:-

    சிவகங்கை நகராட்சி யில் போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்க ளுக்கு பயிற்சி வழங்க ரூ.1.85 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் கட்டப்பட்டு வரு கிறது. ெசட்டியூரணியை அதிக ஆழப்படுத்தி கரையை பலப்படுத்தும் பணியும், அதனை சுற்றி வேலி அமைக்கும் பணியும், நடை பாதை ஏற்படுத்தவும் பணிகள் நடந்து வருகிறது.

    சிறுவர்களுக்கான விளை யாட்டு உபகரணங்களுக்காக ரூ.1.60 கோடி ஒதுக்கீடு ெசய்யப்பட்டுள்ளது. சாலையோர கடைகளை ஒழுங்குப்படுத்தவும், வாரசந்தையில் கூடுதல் கடைகள் அமைக்கவும் ரூ.3 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன. ராணி ரெங்கநாச்சியார் பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. மேற்கண்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது நகர்மன்ற தலைவர் ஆனந்த், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வனவிலங்குகள் குறித்து ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் என இரு முறை வனவிலக்கு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவது வழக்கம்.
    • வனவிலங்கு கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் சென்னை தலைமை வன பாதுகாப்பு அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், டி. என். பாளையம், கடம்பூர், தலமலை, விளாமுண்டி, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரகள்ளி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன.

    இதில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    வனவிலங்குகள் குறித்து ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் என இரு முறை வனவிலக்கு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவது வழக்கம்.

    அதன்படி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழை காலத்திற்கு முந்திய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி கடந்த ஜூன் 27-ந் தேதி தொடங்கியது.

    10 வனச்சரகங்களில் பணிபுரியும் 300-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் 76 குழுக்களாக பிரிந்து வனவிலங்கு கணக்கெடுப்பு பணி மேற்கொண்டனர்.

    இதில் வன விலங்குகளில் எச்சம், கால்தடம் உள்ளிட்டவைகளை அடிப்படையாகக் கொண்டு ஜி.பி.எஸ். கருவி, காம்பஸ், வியூ பைன்டர், ரேஞ்ச் பைன்டர் உள்ளிட்ட பல்வேறு கருவிகளை பயன்படுத்தி கணக்கெடுப்பு பணி நடந்து வந்தது.

    மொத்தம் 6 நாட்கள் நடந்த கணப்பு எடுப்பு பணி நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து வனவிலங்கு கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் சென்னை தலைமை வன பாதுகாப்பு அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×