search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கம்ப்யூட்டர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்
    X

    கருணாலயம் கிராம நல சங்கம் சார்பில் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    கம்ப்யூட்டர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்

    • நெட்டப்பாக்கம் கருணாலயம் கிராம நல சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
    • அனைவரையும் கருணால–யம் கிராம நலச்சங்க அலு–வலர் சவிதா வரவேற்று பேசினார்.

    புதுச்சேரி:

    கருணாலயம் கிராம நலச்சங்கம் புதுச்சேரி கணினி பயிற்சி முடித்த–வர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நெட்டப் பாக்கம் கருணாலயம் கிராம நல சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு கருணா–லயம் கிராம நலச்சங்க இயக்குனர் அங்காளன் தலைமை தாங்கி நோக்கஉரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநில செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் டாக்டர் லட்சுமிபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி னார்.

    நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட பயிற்சி முடித்த–வர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக அனைவரையும் கருணால–யம் கிராம நலச்சங்க அலு–வலர் சவிதா வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சி முடிவில் கருணாலயம் கணினி பயிற்சி மைய ஆசிரியை வனராஜா நன்றி கூறினார்.

    Next Story
    ×