search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SOUL"

    • ஒ.பி.எஸ். மூன்று முறை முதல்வராக இருந்தவர், இன்று கட்சியின் வேட்டியை கூட கட்ட முடியவில்லை.
    • அம்மாவின் ஆன்மா இந்த தேர்தல் முடிந்த பின் அரசியலை விட்டே போகும் நிலைக்கு செல்லும் நிலையை உருவாக்கும்.

    திருமங்கலம்:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் உசிலம் பட்டியில் இன்று நடந்த கூட்டத்தில் பேசியதாவது:-

    தாய்மார்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் என்ற அ.தி.மு. க.வின் தேர்தல் அறிக்கை இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. நீங்கள் அதே அறிவிப்பை வெளியிட்ட போது எந்த இடத்திலும் பேசப்படவில்லை. ஏனென்றால் பொய்யான வாக்குறுதியை அளிப்பார்கள் என மக்கள் நம்பவில்லை. ஆனால் அ.தி.மு.க. அதே அறிவிப்பை கொடுக்கும் போது பேசப்படுகிறது.

    ஒ.பி.எஸ். மூன்று முறை முதல்வராக இருந்தவர், இன்று கட்சியின் வேட்டியை கூட கட்ட முடியவில்லை, கட்சி பெயரை பயன்படுத்த முடியவில்லை. என்ன பாவம், என்ன துரோகம் செய்துள்ளார் என யோசித்து பார்த்தபோது அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அப்போது முதல்வராக இருந்தவர் அதிகாரத்தை கையில் வைத்திருந்தவர் வெளிநாட்டிற்கு கூட கொண்டு சென்று காப்பாற்றி இருக்கலாம். ஆனால் மவுன சாமியாராக இருந்துவிட்டார்.

    அதனாலேயே பாவம் ஏற்பட்டு அம்மாவின் ஆன்மா வஞ்சிக்கிறதோ என தெரிகிறது. எம்.ஜி.ஆர்., அம்மா என முதல்வராக இருந்த யாருக்கும் இந்த நிலை இல்லை. இன்று வீதியில் நின்று ஒரே ஒரு சீட்டுக்காக சென்றிருக்கிறார். சின்னத்திற்காக அது வேண்டும், இது வேண்டும் என கேட்கிறார்.

    அம்மா உயிர் பறிபோக நீங்கள் தான் காரணம். அம்மாவின் ஆன்மா இந்த தேர்தல் முடிந்த பின் அரசியலை விட்டே போகும் நிலைக்கு செல்லும் நிலையை உருவாக்கும். ஜெயலலிதாவின் ஆன்மா ஓ.பி.எஸ்.சை வஞ்சிக்கிறது. அமைச்சர் மூர்த்திக்கு பயம் வந்துவிட்டது. இந்த தேர்தலில் தோற்றால் அமைச்சர் பதவியையும், மாவட்ட செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன் என சொல்கிறார். தேர்தல் ரிசல்ட் வரை வேண்டாம் நாளைக்கே ராஜினாமா செய்யுங்கள். நீங்கள் வெற்றி பெற போவது இல்லை. துரோகம் செய்தவர்களுக்கு தக்க பாடத்தை தொண்டர்கள் காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கட்சியை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்லும் துரோகிகளை ஜெ.ஆன்மா மன்னிக்காது என்று வைத்தியலிங்கம் தெரிவித்தார்.
    • கட்சி பிரச்சனையில் கோர்ட் தலையிடுவது புதிதல்ல

    அரியலூர்:

    அ.தி.மு.க.வில் ஓபிஎஸ் ஆதரவாளரான துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் அரியலூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது,

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்து சட்டத்திற்கு உட்பட்டதில்லை. தேர்தல் ஆணையத்ைதயும், சுப்ரீம் கோர்ட்டையும் நாட வேண்டிய சூழ்நிலை இதுவரை ஏற்படவில்லை. இன்னும் 3 நாட்களுக்குள் கட்சியை எப்படி வழிநடத்திச் செல்வது என ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும். கட்சி பிரச்சனையில் கோர்ட் தலையிடுவது புதிதல்ல. ஏற்கனவே இது போன்ற வழக்குள் கோர்ட்டிலும், தேர்தல் ஆணையத்திடமும் கொண்டுசெல்லப்பட்டு அதற்கான தீர்வும் பெறப்பட்டுள்ளது.

    கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனது நம்பிக்கைக்குரியவரான ஒபிஎஸ்யை முதல்வராக்கினார். இப்போது கட்சியை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்லும் துரோகிகளை ஜெ.ஆன்மா மன்னிக்காது. சட்டத்திற்குட்பட்டு கட்சி விரைவில் மீட்கப்படும். சசிகலாவை சந்திப்பது குறித்து கேட்டபோது இந்த கேள்விக்கு தற்போது பதில் இல்லை என்றார்.

    ×