search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்சியை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்லும் துரோகிகளை ஜெ.ஆன்மா மன்னிக்காது- வைத்தியலிங்கம் பேட்டி
    X

    கட்சியை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்லும் துரோகிகளை ஜெ.ஆன்மா மன்னிக்காது- வைத்தியலிங்கம் பேட்டி

    • கட்சியை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்லும் துரோகிகளை ஜெ.ஆன்மா மன்னிக்காது என்று வைத்தியலிங்கம் தெரிவித்தார்.
    • கட்சி பிரச்சனையில் கோர்ட் தலையிடுவது புதிதல்ல

    அரியலூர்:

    அ.தி.மு.க.வில் ஓபிஎஸ் ஆதரவாளரான துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் அரியலூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது,

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்து சட்டத்திற்கு உட்பட்டதில்லை. தேர்தல் ஆணையத்ைதயும், சுப்ரீம் கோர்ட்டையும் நாட வேண்டிய சூழ்நிலை இதுவரை ஏற்படவில்லை. இன்னும் 3 நாட்களுக்குள் கட்சியை எப்படி வழிநடத்திச் செல்வது என ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும். கட்சி பிரச்சனையில் கோர்ட் தலையிடுவது புதிதல்ல. ஏற்கனவே இது போன்ற வழக்குள் கோர்ட்டிலும், தேர்தல் ஆணையத்திடமும் கொண்டுசெல்லப்பட்டு அதற்கான தீர்வும் பெறப்பட்டுள்ளது.

    கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனது நம்பிக்கைக்குரியவரான ஒபிஎஸ்யை முதல்வராக்கினார். இப்போது கட்சியை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்லும் துரோகிகளை ஜெ.ஆன்மா மன்னிக்காது. சட்டத்திற்குட்பட்டு கட்சி விரைவில் மீட்கப்படும். சசிகலாவை சந்திப்பது குறித்து கேட்டபோது இந்த கேள்விக்கு தற்போது பதில் இல்லை என்றார்.

    Next Story
    ×