search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப் பொருள்"

    • சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2.8 கிலோகிராம் ஹெராயின் பறிமுதல்.
    • இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள கிராமத்தில் இரண்டு உள்ளூர் இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பஞ்சாபைச் சேர்ந்த மூன்று போதைப்பொருள் கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2.8 கிலோ ஹெராயின் மீட்கப்பட்டது. அவர்கள் தர்ன் தரனைச் சேர்ந்த ஜக்தீப் சிங் (21), சதீந்தர்பால் சிங் மற்றும் அமிர்தசரஸைச் சேர்ந்த சன்னி குமார் (22) என அடையாளம் காணப்பட்டனர்.

    நேற்று முன்தினம் இரவு இரு தரப்பினருக்கும் இடையே நடந்த சண்டையின்போது இரண்டு இளைஞர்கள் மீது மூன்று குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டதாக சம்பா மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) பெனம் தோஷ் தெரிவித்தார்.

    இதுகுறித்து மேலும் அவர், ரங்கனூர் பேருந்து நிலையம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ராம்கர் செக்டரைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கடத்தல்காரர்களில் ஒருவரும் காயமடைந்தனர்.

    இவர்களுக்கு உள்ளூர் மருத்துவ வசதியில் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு சிகிச்சைக்காக ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மேலும், கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்களிடம் இருந்து, சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2.8 கிலோகிராம் ஹெராயின், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் சில ரவுண்டுகள், ₹ 93,200 மதிப்புள்ள பணம் மற்றும் நான்கு விலையுயர்ந்த மொபைல் போன்கள் பறிமுதுல் செய்யப்பட்டன.

    இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    • மனிதனை மிருகமாக மாற்றும் போதைப் பொருட்களில் மதுவுக்கு அடுத்து கஞ்சா பயன்படுத்துவோரின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.
    • குறிப்பிட்ட பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் பெண்களே ஈடுபடுகிறார்கள்.

    சென்னை:

    மதுவில் தொடங்கி விதவிதமான வழிகளில் கிடைக்கும் போதை பொருட்களை விளையாட்டாக பயன்படுத்த தொடங்கியவர்களே இன்று அதற்கு அடிமையாகி குற்றவாளிகளாகவும் மாறிப்போய் இருக்கிறார்கள்.

    உடலுக்குள் போதைப் பொருள் சென்றுவிட்டால் நாம் சொல்வதை உடல் கேட்காது என்றும் போதை என்ன சொல்கிறதோ... அந்த வழியில் மட்டுமே உடல் இயங்கும் என்றும் போலீசார் அடிக்கடி கூறுவதுண்டு.

    அதனை உறுதிப்படுத்தும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஏதோ ஒரு போதைப்பொருளை பயன்படுத்திய பின்னரே அதில் ஈடுபடுகிறார்கள் என்பதும் காவல்துறையினரின் கருத்தாக உள்ளது.

    இப்படி மனிதனை மிருகமாக மாற்றும் போதைப் பொருட்களில் மதுவுக்கு அடுத்து கஞ்சா பயன்படுத்துவோரின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.

    ஒரு காலத்தில் தேனி மலைப்பகுதிகளில் இருந்தே தமிழகம் முழுவதும் கஞ்சா சப்ளை ஆனது. கஞ்சா செடிகளை அங்கேயே பயிரிட்டு அறுவடை செய்து காயவைத்து தூளாக்கி பொட்டலம் பொட்டலமாக கட்டி வெளிமாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைத்தனர்.

    ஆனால் சமீப காலமாக தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் போலீஸ் பிடி இறுகியதை தொடர்ந்து கஞ்சா நடமாட்டம் தேனி மலை பகுதிகளில் குறைந்திருக்கிறது என்றே கூறுகிறார்கள்.

    இதனை ஈடுகட்டும் வகையில் ஆந்திர மாநிலத்தையும், தமிழகத்தையும் இணைக்கும் சென்னையையொட்டிய எல்லையோர பகுதிகள் கஞ்சா கடத்தல் களமாக மாறி இருக்கின்றன.

    ஆந்திர மாநிலத்தில் இருந்து டிராவல் பேக்குகளில் பயணிகள் போல பஸ்சிலேயே கஞ்சா பொட்டலங்களை கடத்தி வருகிறார்கள். கார், மோட்டார் சைக்கிள், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள், ஆட்டோக்களிலும் கடத்தப்படும் கஞ்சா திருவள்ளூர் மாவட்ட எல்லையை தாண்டியே சென்னை மாநகருக்குள் கால் பதிக்கிறது.

    இந்த கஞ்சா கடத்தலை சென்னையில் காலம் காலமாக பலர் செய்து வருகிறார்கள். குறிப்பிட்ட பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் பெண்களே ஈடுபடுகிறார்கள். இவர்களை காவல்துறை வட்டாரத்தில் 'கஞ்சா ராணி' என்றே அழைக்கிறார்கள்.

    அந்த சாலை மார்க்கமாக மட்டுமின்றி ஆந்திர மாநிலங்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள் மூலம் கஞ்சா கடத்தப்படுகிறது. ரெயில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தை நெருங்கும் வேளையில் கஞ்சா கும்பல் பக்கத்து ரெயில் நிலையமான பேசின் பிரிட்ஜ் அருகே கைமாற்றி விடுவதும் நடக்கிறது.


    ரெயிலில் இருந்து கஞ்சா மூட்டைகளை வெளியில் தூக்கி வீசிவிட்டு பின்னர் சென்று அவைகளை கைப்பற்றிக்கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. சென்னை மாநகரை பொறுத்த வரையில் கஞ்சா விற்பனை அனைத்து பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டே இருக்கிறது.

    போலீஸ் தரப்பில் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் கடத்தல் விற்பனை கட்டுக்குள் வராமலேயே உள்ளது. இது இன்று... நேற்றல்ல. எப்போதுமே கஞ்சா கடத்தலும் விற்பனையும் காவல்துறைக்கு கடுமையான சவாலாகவே இருந்து வருகின்றன.

    கஞ்சா கடத்தலில் பிடிபடுபவர்களில் 75 சதவீதம் பேர் இளைஞர்கள் என்பதும், இதில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டு வருவதும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகவே மாறிப்போய் உள்ளது.

    கடந்த 14 மாதங்களாக திருவள்ளூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் ஆய்வில் பள்ளி மாணவர் கள் பலர் பிடிபட்டு போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.

    திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளையொட்டி உள்ள இடங்களில் 24 போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த காவல் நிலைய எல்லைகளை தாண்டி... புழல், செங்குன்றம் வழியாகவே, கஞ்சா கடத்தல் ஆசாமிகள் பெரிய அளவில் கஞ்சா கடத்தலை அரங்கேற்றி வருகிறார்கள்.

    கடந்த 14 மாதத்தில் 164 கோடி மதிப்பிலான 1,426 கிலோ கஞ்சாவை திருவள்ளூர் மாவட்ட போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 366 வழக்குகள் போடப்பட்டு 367 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    கஞ்சா கடத்தலில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். இது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை போலீசார் தொடர்ந்து மேற் கொண்டு வருகிறார்கள். ஆனால் கஞ்சா விற்பனை செய்பவர்கள் அதனை கண்டுகொள்வதே இல்லை. திரும்ப திரும்ப அதே குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னையிலும் கஞ்சா வேட்டை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. போதை பொருட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதையடுத்து தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் கிலோ கணக்கில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும், பலர் கைது செய்யப்பட்டும் வருகிறார்கள். கஞ்சாவை சாக்லேட் வடிவிலும் விற்பனை செய்து வருகிறார்கள்.

    பீகாரை சேர்ந்த வாலிபர் ஒருவர் அண்ணாசாலை பகுதியில் கஞ்சா சாக்லெட்டுகளை பீடா கடையில் வைத்து விற்பனை செய்து வந்தார். அதனை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பறிமுதல் செய்தனர்.

    கஞ்சாவை போன்று கேட்டமின், ஹெராயின், யனஹண்டிரன், சீட்டிராய் டினைர் உள்ளிட்ட போதை பொருட்களும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டு சென்னயில் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன.

    கஞ்சா பொட்டலங்களை பொறுத்த வரையில் 50 கிராம், 100 கிராம் என தனித்தனி பண்டல்களாக போட்டு விற்பனை செய்து வருகிறார்கள். சென்னையில் கல்லூரி-பள்ளி மாணவர் களுக்கிடையே சமீபகாலமாக மதுப்பழக்கத்துடன் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களும் அதிகரித்து காணப்படுகின்றன.

    ஆரம்பத்தில் பணத்துக்காக கஞ்சா விற்பனையில் ஈடுபடும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதலில் அதனை ருசிபார்க்கத் தொடங்கி பின்னர் அதற்கு அடிமையாகிவிடுகிறார்கள். இதுபோன்று கஞ்சா போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்தான் இளம் வயதிலேயே செயின் பறிப்பு, திருட்டு உள்ளிட்ட குற்றங் களில் தொடங்கி பின்னர் பெரிய 'தாதா' நிலைக்கு சென்றுவிடும் ஆபத்தும் உள்ளது.

    இதுபோன்ற இளம் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை நல்வழிப்படுத்த போலீசார் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதற்கு பலன் கிடைத்தாலும் பலர் கட்டுக்கடங்காமல் எல்லை மீறி போகும் சூழலும் நிலவுகிறது.

    இப்படி இளம் தலை முறையினரிடையே புற்று நோய்போல பரவி கிடக்கும் போதை பழக்கம் அவர் களிடம் இருந்து எப்படி விலகப்போகிறது? என்பது விடை தெரியாத கேள்வி யாகவே மாறி இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

    • வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் நடந்தது
    • துண்டு பிரசுரங்கள் விநியோகம்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமை தாங்கினார். திருப்பத்தூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தனலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    மேலும் ரெயில்வே போலீசார் நடத்திய போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரெயில் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதனை அடுத்து கல்லூரி மாணவர்கள் மூலம் ரெயில் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் போதைப்பொருள் தடுப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
    • இந்த சட்டம் நேற்று முதல் இலங்கையில் அமலுக்கு வந்துள்ளது.

    கொழும்பு:

    போதைப் பொருள் வைத்திருப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் நேற்று முதல் இலங்கையில் அமலுக்கு வந்துள்ளது.

    5 கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருந்தாலோ அல்லது விற்பனையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    நேற்று முதல் இந்த புதிய சட்டத்தின் கீழ் குற்றம்புரிந்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.

    கடந்த அக்டோபர் 19-ம் தேதி நச்சுப்பொருள், அபின், அபாயகர மசோதா சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குறித்த மசோதாவில் கையொப்பமிட்டு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிமுகப்படுத்தினார்.

    • போதைப் பொருள் அடங்கிய சோப்பு கவர்களை பறிமுதல் செய்தனர்.
    • தப்பியோடிய வாகன ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.

    அசாம் மாநிலம் கரிம்கஞ்ச் மாவட்டம் பதர்காண்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அஷிம்கஞ்ச் பகுதியில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த வாகனத்தை போலீசார் சோதனையிட்டபோது, அந்த வாகனத்தின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பினார்.

    பின்னர் வாகனத்தில் இருந்து 676 கிராம் ஹெராயின் என்கிற போதைப் பொருள் அடங்கிய சோப்பு கவர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சோப்பு கவர்களில் ஹெராயினை அடைத்து அவற்றை, ஸ்பீக்கர் பாக்சுக்குள் மறைத்து வைத்திருந்தனர்.

    கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் சந்தை மதிப்பு ரூ.5 கோடி எனவும், மிசோரமில் இருந்து பதர்கண்டி நோக்கி வாகனம் சென்று கொண்டிருந்தபோது பிடிபட்டது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய வாகன ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

    • மும்பை விமான நிலையம் வழியாக போதை பொருள் கடத்த இருப்பதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கைது செய்த அதிகாரிகள், போதை பொருள் கடத்தலில் பினு ஜானுக்கு மேலும் பலருடன் தொடர்பு இருக்கலாம் என கருதுகிறார்கள்.

    நாடு முழுவதும் போதை பொருள் கடத்தலை தடுக்க வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விமான நிலையங்களிலும் பயணிகளின் உடமைகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டன.

    இந்நிலையில் மும்பை விமான நிலையம் வழியாக போதை பொருள் கடத்த இருப்பதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அதிகாரிகள் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது விமானத்தில் வந்த பயணி ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடமைகளை சோதனை செய்தபோது அதில் எதுவும் இல்லை.

    இதையடுத்து அந்த வாலிபரின் டிராலி பேக்கை கைப்பற்றி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 16 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.80 கோடி ஆகும்.

    இதனை கடத்தி வந்த வாலிபர் கேரள மாநிலத்தை சேர்ந்த பினு ஜான் என தெரியவந்தது. அவரை கைது செய்த அதிகாரிகள், போதை பொருள் கடத்தலில் பினு ஜானுக்கு மேலும் பலருடன் தொடர்பு இருக்கலாம் என கருதுகிறார்கள்.

    இது தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மும்பை விமான நிலையத்தில் ரூ.9.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தி வந்த நபரை சுங்கத்துறையினர் கைதுசெய்தனர்.
    • போதைப்பொருள் மதிப்பு 9.8 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அடிஸ் அபாபாவில் இருந்து மும்பை வந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது அவர் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த 980 கிராம் கோகோயின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இதையடுத்து அவரிடம் இருந்த போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்து கைது செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மதிப்பு 9.8 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நபர் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    • போதைப் பொருள் தடுப்பை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

    மதுரை

    மதுரையில் போதைப் பொருள் தடுப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று காலை பினாக்கிள் ஹாப் மாரத்தான் ஓட்டம் நடந்தது.

    இதனை மதுரை மாநகர காவல்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் 'யங் இந்தியன்ஸ்' அமைப்பு ஆகியவை இணைந்து நடத்தியது. 'மாற்றத்திற்காக ஓடுங்கள்' என்ற தாரக மந்திரத்தின் மூலம், ஆரோக்கிய வாழ்க்கை முறை, சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் அமைந்த மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரஜித்சிங்காலோன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்- பெண், சிறுவர்- சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    ரேஸ் கோர்ஸ் சாலை, எம்.ஜி.ஆர். ஸ்டேடியத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம், அழகர்கோவில் மெயின் ரோடு, புதூர் போலீஸ் நிலையம், கடச்சனேந்தல் வழியாக சென்றது. மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

    • போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு போட்டியில் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவிகள் வெற்றி பெற்றனர்.
    • அவர்களுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் சாத்தூர் வருவாய்க் கோட்டாட்சியர் வழிகாட்டுதலின்படி கோட்ட அளவிலான போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருள் விளைவுகள் குறித்து கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களுக்கிடையே போட்டிகள் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

    இதில் விளக்க காட்சி வழங்குதல், கதை எழுதுதல், கவிதை கூறுதல், சுவரொட்டி தயாரித்தல் மற்றும் ரங்கோலி கோலப்போட்டி ஆகிய போட்டிகள் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடந்தது. விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 25 பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை கல்லூரிகளை சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த போட்டிகளில் பங்கேற்றனர்.

    ரங்கோலி கோல ேபாட்டியில் 23 அணிகள் பங்கேற்று, '' போதையில்லாத உலகம், போதையில்லாத பாதை'' போன்ற

    கருத்துகளை கோலங்கள் வாயிலாக வெளிப்படுத்தினர்.

    பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னனுவியல் பொறியியல் துறையின் 3-ம் ஆண்டு மாணவிகள் பிரிஸ்கில்லா மெர்வின், ஜீவ கிருத்திகா ஆகியோர் ரங்கோலி போட்டியில் 2-ம் பரிசு பெற்றனர். விருதுநகரில் நடந்த 75-வது சுதந்திர தினவிழாவின் போதுகலெக்டர் மேகநாத ரெட்டி, வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.

    வெற்றி பெற்ற மாணவிகளை பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி, கல்லூரி இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார், முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி, மின்னியல் மற்றும் மின்னனுவியல் பொறியியல் துறைத்தலைவர் முனிராஜ் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

    • மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 122.22 கிராம் போதைப் பொருள் மற்றும் ரூ.5000 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
    • பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் சர்வதேச சந்தையில் சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்பு.

    அசாம் மாநிலத்தில் உள்ள கர்பி அங்லாங் மாவட்டத்தில் கிட்டதட்ட 80 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார்.

    டோகோக என்ற இடத்தில் நேற்று மாலை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நாகாலாந்தின் டியாம்பூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடமிருந்து சோப்புப் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 122.22 கிராம் போதைப் பொருள் மற்றும் ரூ.5000 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    கைது செய்யப்பட்ட நபர் பீகாரின் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் மற்றோருவர் அசாமின் மோரிகான் மாவட்டத்தில் உள்ள புராகான் பகுதியைச் சோர்ந்த பெண் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் சர்வதேச சந்தையில் சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்பாகும் என போலீசார் தெரிவித்தனர்.

    டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் ஹெராயின் போதைப் பொருளை கிரிக்கெட் பேடில் தைத்து நூதன முறையில் கடத்த முயன்ற நைஜீரிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    புதுடெல்லி :

    டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகப்படும்படி இருந்த நைஜீரிய வாலிபரின் உடைமைகளை பரிசோதனை செய்ததில், 24 கிலோ எடையுடைய ஹெராயின் போதைப் பொருளை கிரிக்கெட் பேடில் தைத்து மறைத்து வைத்திருந்ததை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.

    இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட நைஜீரிய வாலிபர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். 

    நூதன முறையில் கிரிக்கெட் பேடில் ஹெராயின் கடத்திய நைஜீரிய வாலீபரால் டெல்லி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    ×