search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரத்தான்"

    • 2017-ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்தவர் ஆசிய மாரத்தானில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
    • அதன்பின் தற்போது 2-வது நபராக மான் சிங் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

    ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப்ஸ் போட்டி ஹாங் காங்கில் நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 34 வயதான மான் சிங் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இவர் பந்தய தூரத்தை 2 மணி 16 நிமிடம் 58 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இதற்கு முன்னதாக 2 மணி 14 நிமிடம் 19 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்ததே அவரது சாதனையாக இருந்தது. மும்பையில் கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் கடந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளார்.

    சீனாவின் ஹுயாங் யோங்ஜாங் 2 மணி 15 நிமிடம் 24 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். கிர்கிஸ்தானின் தியாப்கின் 2 மணி 18 நிமிடம் 18 வினாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்தார்.

    மற்றொரு இந்தியர் ஏ.பி. பெல்லியப்பா 6-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அடைந்தார்.

    பெண்களுக்கான மாரத்தானில் அஷ்வினி மதன் ஜாதவ் 8-வது இடத்தை பிடித்தார். ஜோதி கவாதே 11-வது இடத்தை பிடித்தார்.

    2017-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப்ஸ் போடடியில் இந்தியர் கோபி தொனக்கல் தங்கப்பதக்கம் வென்றார். ஆசிய மாரத்தானில் சாம்பியன் தங்கம் வென்ற முதல் இந்தியர் இவர்தான். தற்போது மான் சிங் 2-வது இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

    மான் சிங் தங்கம் வெள்றாலும், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியான 2 மணி 8 நிமிடம் 10 வினாடிகள் என்ற இலக்கை அடைய முடியவில்லை.

    • கலங்கரை விளக்கம், மத்திய கைலாஷ், டைட்டல் பார்க் ஆகியவற்றை கடந்து கிழக்கு கடற்கரை சாலையை சென்றடைந்தது.
    • போட்டியையொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    சென்னை:

    சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் சென்னையில் ஆண்டு தோறும் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான 12-வது சென்னை மாரத்தான் இன்று நடந்தது. சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் பிரஷ் ஒர்க்ஸ் நிறுவனம் ஆதரவுடன் இந்த போட்டி நடந்தது. முழு மாரத்தான் (42.195 கிலோ மீட்டர்), பெர்பெக்ட் 20 மைலர் (32.186 கி.மீ.), அரை மாரத்தான் (21.097 கி.மீ.) மற்றும் 10 கிலோ மீட்டர் ஓட்டம் என 4 பிரிவுகளில் நடைபெற்றது.

    முழு மாரத்தான் பந்தயம் மெரீனா கடற்கரையில் உள்ள நேப்பியர் பாலத்தில் தொடங்கியது. கலங்கரை விளக்கம், மத்திய கைலாஷ், டைட்டல் பார்க் ஆகியவற்றை கடந்து கிழக்கு கடற்கரை சாலையை சென்றடைந்தது. பெர்பெக்ட் மைலர், 10 கிலோ மீட்டர் ஆகியவையும் நேப்பியர் பாலத்தில் இருந்துதொடங்கியது. அரை மாரத்தான் போட்டி எலியட்ஸ் கடற்கரை பகுதியில் இருந்து தொடங்கியது.

    4 பிரிவில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் 22 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த போட்டியையொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    • காவலர்களிடம் தகவல் தெரிவித்த பிறகே இவ்வாறு செய்தேன்.
    • காரில் வந்து பரிசு பெற்ற சம்பவம் சமூக பேசுபொருளாகி இருக்கிறது.

    பிரிட்டனில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் நண்பரின் காரை பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட வீரருக்கு தடை விதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கடந்த ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற்ற 50 மைல் மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் ஜோசியா சக்ரெவ்ஸ்கி கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தார்.

    இந்த நிலையில், பந்தயத்தின் போது அவர் தனது நண்பரின் காரில் சிறிது தூரம் கடந்து வந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். ஓட்டப்பந்தயத்தின் போது தனக்கு காயம் ஏற்பட்டதால், காவலர்களிடம் தகவல் தெரிவித்த பிறகே இவ்வாறு செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

    ஓட்டப்பந்தயத்தின் போது காரில் பயணித்து வெற்றி பெற்றதற்காக இவர் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்க 12 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான உத்தரவை பிரிட்டனை சேர்ந்த விளையாட்டு ஒழுங்குமுறை கூட்டமைப்பு பிறப்பித்து இருக்கிறது. ஓட்டப் பந்தயத்தின் போது காரில் வந்து பரிசு பெற்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. 

    • பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓட்டப்பந்தயம்
    • முனைவர் ஆல்பர்ட் எபினேசர் தலைமை தாங்கினார்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தனியார் கல்லூரி சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.

    முனைவர் ஆல்பர்ட் எபினேசர் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் அசோக்குமார் சின்னசாமி துவக்கி வைத்தார்.விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • எச்.ஐ.வி, எய்ட்ஸ் குறித்த அடிப்படை உண்மையை அதிகமாக தெரிந்து கொள்ளும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், உலக இளைஞர் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில், மாரத் தான் போட்டி தொடங்கியது. இதை உதவி கலெக்டர் பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட் டத்தில் உலக இளைஞர் திருவிழா 2023-24-ஐ கொண்டாடும் விதமாக திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடடு அலகின் சார்பில் இந்த மாரத்தான் போட்டி நடந்தது. இந்த மாரத்தான் போட்டி 5 கி.மீ தூரத்திற்கு நடத்தப்பட்டது.

    17 வயது முதல் 25 வயது வரை உள்ள கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காத்தான்பள்ளம் கொன்சாகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஓசூர் புனித வளனார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ் ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இந்த மாரத்தான் போட்டி புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி லண்டன்பேட்டை, தாலுகா அலுவலகம் வழியாக கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா வரை சென்று, மீண்டும் அதே வழியில் வனச்சரக அலுவலகம் வழியாக வந்து மாவட்ட விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது. இந்த போட்டியின் மூலம் போதை பொருள் தடுப்பையும், எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு சென்றடைய செய்யவும், இளைஞர் மத்தியில் பாதுகாப்பையும், பாலியல் ரீதியான சமூக பொறுப்பையும் ஊக்கப் படுத்தவும், எச்.ஐ.வி, எய்ட்ஸ் - பாலியல் நோய்களுக்கான சிகிச்சைக்கான வழிமுறை தெரியப்படுத்தவும், எச்.ஐ.வி, எய்ட்ஸ் குறித்த அடிப்படை உண்மையை அதிகமாக தெரிந்து கொள்ளும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட திட்ட மேலாளர் அருள், தாசில்தார் சம்பத், செஞ்சிலுவை சங்க செயலாளர் செந்தில்குமார், மாவட்ட எச்.ஐ.வி, எய்ட்ஸ் கூட்டமைப்பு தலைவர் குமார், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு பணியாளர்கள் மற்றும் தொண்டு நிறுவன பணியாளர்கள், ரெட் கிராஸ் அமைப்பினர், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி லத்துவாடி அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி சார்பில் மாரத்தான் போட்டி நாமக்கல்லில் நடைபெற்றது.
    • நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு மாரத்தான் தொடங்கியது.

    நாமக்கல்:

    கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி லத்துவாடி அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி சார்பில் மாரத்தான் போட்டி நாமக்கல்லில் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் ராஜா முன்னிலை வகித்தார். நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு மாரத்தான் தொடங்கியது. இப்போட்டியினை நாமக்கல் ரோட்டரி கிளப் தலைவர் ராகேஷ், நகராட்சி தலைவர் கலாநிதி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். ஆண்- பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

    5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற போட்டி, நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி கொண்டி செட்டி பட்டி வழியாக அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியை வந்தடைந்தது.

    இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக ரொக்கத்தொகை மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இப்போட்டியில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • தேசிய இளைஞர் தின திருவிழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக மாரத்தான் போட்டி நடந்தது.
    • நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கிய மாரத்தான் போட்டியை கலெக்டர் கிராந்திகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கோவை,

    தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக எச்.ஐ.வி, எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக, தேசிய, மாநில, மாவட்ட அளவிலான தேசிய இளைஞர் தின திருவிழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக மாரத்தான் போட்டி நடந்தது.

    கோவையிலும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.

    நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கிய மாரத்தான் போட்டியை கலெக்டர் கிராந்திகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த மாரத்தான் ஓட்டம் அவிநாசி சாலை, பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அண்ணா சிலை வழியாக 5 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் நேரு விளையாட்டு அரங்கிற்கு வந்தடைந்தது.

    இந்த மாரத்தான் ஓட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் திருநங்கைகள் என பலரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு ஓடினர்.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாராட்டு தெரிவித்து சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.

    • கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி மினி மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர்.

    கடலூர்:

    தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தால் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்றிலிருந்து காத்துக்கொள்ளும் திறனை வளர்ப்பதற்கும் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 26-ந் தேதி சர்வதேச இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கடலூரில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி மினி மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலரும், சுகாதார பணிகள் துணை இயக்குனருமான மீரா, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாரா செலின் பால், போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் வரவேற்றார். மாவட்ட திட்ட மேலாளர் செல்வம் திட்ட நோக்கவுரையாற்றினார். இதையடுத்து கடலூர் டவுன் ஹாலில் இருந்து தொடங்கிய போட்டியானது சில்வர் பீச் வரை சென்றது. இந்த மினி மாரத்தானில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர். தொடர்ந்து கல்லூரி மாணவர்களிடையே நாடகப்போட்டி, குரும்பட போட்டி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு வினாடி- வினா போட்டியும் நடத்தப்பட்டது.

    இதில் துணை இயக்குனர் (காசநோய்) கனகராஜ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவா, மாவட்ட குருதி பரிமாற்றுக்குழும அலுவலர் குமார், கடலூர் அரசு தலைமை மருத்துவமனை ஏ.ஆர்.டி. மைய முதுநிலை மருத்துவர் தேவ்ஆனந்த், விருத்தாசலம் அரசு மருத்துவமனை, ஏ.ஆர்.டி. மருத்துவ அலுவலர் சாமிநாதன் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை ஏ.ஆர்.டி. மைய மருத்துவ அலுவலர் ஸ்ரீதரன் நன்றி கூறினார்.

    • முதல் இடத்தை பிடித்தவருக்கு ரூ.1 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
    • 25 மாணவ- மாணவிவிகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தணுவர்சன் அறக்கட்டளை சார்பில் கல்வியே நாட்டின் முதல் அரண், போதை பொருள் தடுப்பு மற்றும் சிறுவர்- சிறுமியர் பாலியல் தடுப்பு விழிப்புணர்வுக்காக இன்று தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் 3-வது ஆண்டு தேசிய அளவிலான மாரத்தான் ஓட்டத்தை நடத்தியது.

    நிகழ்ச்சிக்கு தணுவர்சன் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் உலகநாதன், கவுரவத் தலைவர் டாக்டர் சாத்தப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இந்த மாரத்தான் போட்டியை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ( ஓபன் ) பிரிவில் 20 கி.மீ. தூரத்திற்கு மாரத்தான் ஓட்டமும், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தனி தனியாக 5 கி.மீ. தூரத்திற்கு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. 3 பிரிவுகளிலும் சேர்த்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர்.

    இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ( ஓபன் ) பிரிவில் முதல் இடத்தை பிடித்தவருக்கு ரூ.1 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

    இதேபோல் 2 முதல் 5-ம் இடத்தை பிடி த்தவர்களுக்கு முறையே ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. மேலும் 50 வீரர்- வீராங்கனைகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

    இதேபோல் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவர், மாணவிக்கு தலா ரூ.10 ஆயிரம், கோப்பை வழங்கப்பட்டன. 2 முதல் 5-வது இடங்களைப் பிடித்த மாணவ -மாணவிகளுக்கு முறையே தலா ரூ .6 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

    மேலும் 25 மாணவ- மாணவிவிகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார், ஆலோசகர் ரத்தினவேல் , போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பொ றியாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உடுமலை, மடத்துக்குளம் பகுதி பள்ளி விளையாட்டு ஆசிரியர்கள் வழி நடத்தினர்.
    • குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி, சிலம்ப போட்டி, சாக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

    உடுமலை:

    76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உடுமலை முன்னாள் ராணுவ வீரர் கள் சங்கம் , லெப்டினன்ட் சுபாஷ் ஐஏஎஸ்., அகாடமி , உடுமலை லேப் அண்ட் எக்ஸ்ரேஸ், பிரியா நர்சிங் கல்லூரி சார்பில் போதைப் பொருள் ,நெகிழி ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் கடைபிடிப்பது பற்றிய விழிப்புணர்வுக்கான மாரத்தான் போட்டி நடத்தியது. போட்டியை முன்னாள் ராணுவ வீரர் சங்க தலைவர் ராமலிங்கம் தொடங்கி வைத்தார். இதில் 500க்கும் மேற்பட்ட உடுமலை மற்றும் மடத்துக்குளம்,திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்முடன் கலந்து கொண்டனர்.

    ஜூனியர் ,சீனியர், சூப்பர் சீனியர் மற்றும் மூத்த குடிமக்களுக்கான இந்த மாரத்தான் போட்டியில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். முன்னதாக அறக்கட்டளை வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தேசிய கொடியை ஜிவிஜி., கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் கேப்டன் கற்பகவல்லி ஏற்றி வைத்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார். இதில் கேப்டன் வெள்ளியங்கிரி, நாயப் சுபேதார் நடராஜ் கலந்து கொண்டனர். பின்னர் லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை வளாகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று ராகல்பாவி பிரிவிலிருந்து போட்டி ஆரம்பித்து மாரத்தான் ஓடினர்.

    மாரத்தான் போட்டிகளுக்கு உடுமலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். உடுமலை ,மடத்துக்குளம் பகுதி பள்ளி விளையாட்டு ஆசிரியர்கள் வழி நடத்தினர். தொடர்ந்து மூன்று இடங்களை பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை கேப்டன் வெள்ளியங்கிரி, உடுமலை ஜிவிஜி., மகளிர் கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் கற்பகவல்லி, லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை டிரஸ்டி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி, சிலம்ப போட்டி, சாக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம், செயலாளர் சக்தி ,பொருளாளர் சிவக்குமார், விளையாட்டு இயக்குனர் வெள்ளைச்சாமி (பணி நிறைவு), சுபாஷ் ஐஏஎஸ்., அகாடமி நிறுவனர் செல்வராஜ், டிரஸ்டிகள் கணேசன் , என்ஜினீயர் பாலமுருகன் மற்றும் பிரியா நர்சிங் கல்லூரி தவசு மணி செய்திருந்தனர். நிகழ்ச்சிகளை சைனிக் பள்ளி ஆசிரியர் இளமுருகு தொகுத்து வழங்கினார்.

    • பரமக்குடியில் புத்தக திருவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடந்தது.
    • துப்புரவு பணியாளர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பரமக்குடி

    பரமக்குடியில் உள்ள மக்கள் நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் இணைந்து இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை புத்தக கண்காட்சி திருவிழாவை நடத்துகின்றனர். இதில் 20-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் கலந்து கொள்கின்றன. மேலும் புத்தக கண்காட்சியில் தினந்தோறும் மாணவ மாணவிகள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பிரபலங்கள் பங்கேற்கும் பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன. புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை துப்புரவு பணியாளர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பரமக்குடி தனியார் மெட்ரிக் பள்ளியில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி சுமார் 7 கிலோமீட்டர் தூரம் கடந்து பரமக்குடி பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்தை திடலில் முடிவடைந்தது. இதில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த போட்டியினை புத்தகக் கண்காட்சி வரவேற்பு குழு தலைவர் சேகர் செயலாளர் வழக்கறிஞர் பசுமலை,ஒருங்கிணைப்பாளர்கள் சந்தியாக பெருமாள் ராஜா உள்ளிட்ட புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பு குழுவினர் கலந்து கொண்டனர்.

    • பரமக்குடியில் புத்தக திருவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடந்தது.
    • துப்புரவு பணியாளர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பரமக்குடி

    பரமக்குடியில் உள்ள மக்கள் நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் இணைந்து இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை புத்தக கண்காட்சி திருவிழாவை நடத்துகின்றனர். இதில் 20-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் கலந்து கொள்கின்றன. மேலும் புத்தக கண்காட்சியில் தினந்தோறும் மாணவ மாணவிகள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பிரபலங்கள் பங்கேற்கும் பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன. புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை துப்புரவு பணியாளர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பரமக்குடி தனியார் மெட்ரிக் பள்ளியில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி சுமார் 7 கிலோமீட்டர் தூரம் கடந்து பரமக்குடி பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்தை திடலில் முடிவடைந்தது. இதில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த போட்டியினை புத்தகக் கண்காட்சி வரவேற்பு குழு தலைவர் சேகர் செயலாளர் வழக்கறிஞர் பசுமலை,ஒருங்கிணைப்பாளர்கள் சந்தியாக பெருமாள் ராஜா உள்ளிட்ட புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பு குழுவினர் கலந்து கொண்டனர்.

    ×