என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி உழவர் சந்தையில் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
    X

    திருச்சி உழவர் சந்தையில் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

    • திருச்சி உழவர் சந்தையில் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது
    • இந்த மாரத்தானில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    திருச்சி:

    திருச்சி ரீகேப் இந்தியா சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் 16 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. மாதவிடாய் சுகாதாரம் விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற இந்த மாரத்தானில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ரீகேப் இந்தியா சாரிட்டபிள் டிரஸ்ட் இன் தலை–வர் தலைவர் மற்றும் அறங்காவலர் தலைமையில் நடைபெற்ற மாரத்தான் போட்டிக்கு, சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    இந்நிகழ்வில் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் சுப சோமு, மாவட்ட துணை தலைவர் மலைக்கோட்டை, ஜங்ஷன் கோட்டத் தலை–வர் பிரியங்கா பட்டேல், பிரிவு பஜார் மைதீன், வெல்லமண்டி பாலசுப்பிர–மணியன், வீரேஸ்வரம் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நந்தினி சக்திவேல் நன்றி கூறினார்.


    Next Story
    ×