search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்தர்வகோட்டையில் மாவட்ட தி.மு.க. சார்பில் மாரத்தான் போட்டி
    X

    கந்தர்வகோட்டையில் மாவட்ட தி.மு.க. சார்பில் மாரத்தான் போட்டி

    • கந்தர்வகோட்டையில் மாவட்ட தி.மு.க. சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
    • போட்டியை வடக்கு மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை வடக்கு தி.மு.க. கழகம் சார்பில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை எளியோர் எழுச்சி நாளாக கொண்டாடும் வகையில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை வடக்கு மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பரமசிவம், நகரச் செயலாளர் ராஜா, ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராணி முருகேசன், கவிதா மணிகண்டன், தெற்கு ஒன்றியம் இளைஞர் அணி அமைப்பாளர் கலையரசன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை அமைப்பாளர் வெங்கடேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், இளைஞர்கள் கலந்து கொண்டு ஓடினார்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சீருடை வழங்கப்பட்டது.


    Next Story
    ×