என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு
- வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் நடந்தது
- துண்டு பிரசுரங்கள் விநியோகம்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமை தாங்கினார். திருப்பத்தூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தனலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
மேலும் ரெயில்வே போலீசார் நடத்திய போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரெயில் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனை அடுத்து கல்லூரி மாணவர்கள் மூலம் ரெயில் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் போதைப்பொருள் தடுப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்