என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நூதன முறையில் கிரிக்கெட் பேடில் ஹெராயின் கடத்திய நைஜீரிய வாலிபர் கைது
Byமாலை மலர்12 Aug 2018 5:46 PM GMT (Updated: 12 Aug 2018 5:46 PM GMT)
டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் ஹெராயின் போதைப் பொருளை கிரிக்கெட் பேடில் தைத்து நூதன முறையில் கடத்த முயன்ற நைஜீரிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி :
டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும்படி இருந்த நைஜீரிய வாலிபரின் உடைமைகளை பரிசோதனை செய்ததில், 24 கிலோ எடையுடைய ஹெராயின் போதைப் பொருளை கிரிக்கெட் பேடில் தைத்து மறைத்து வைத்திருந்ததை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட நைஜீரிய வாலிபர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
நூதன முறையில் கிரிக்கெட் பேடில் ஹெராயின் கடத்திய நைஜீரிய வாலீபரால் டெல்லி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X