search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நூதன முறையில் கிரிக்கெட் பேடில் ஹெராயின் கடத்திய நைஜீரிய வாலிபர் கைது
    X

    நூதன முறையில் கிரிக்கெட் பேடில் ஹெராயின் கடத்திய நைஜீரிய வாலிபர் கைது

    டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் ஹெராயின் போதைப் பொருளை கிரிக்கெட் பேடில் தைத்து நூதன முறையில் கடத்த முயன்ற நைஜீரிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    புதுடெல்லி :

    டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகப்படும்படி இருந்த நைஜீரிய வாலிபரின் உடைமைகளை பரிசோதனை செய்ததில், 24 கிலோ எடையுடைய ஹெராயின் போதைப் பொருளை கிரிக்கெட் பேடில் தைத்து மறைத்து வைத்திருந்ததை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.

    இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட நைஜீரிய வாலிபர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். 

    நூதன முறையில் கிரிக்கெட் பேடில் ஹெராயின் கடத்திய நைஜீரிய வாலீபரால் டெல்லி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×