search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்சோ"

    • காட்வின் மைக்கேல் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
    • தலைமறைவாக உள்ள டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோவை:

    கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு பாலாஜி கார்டனை சேர்ந்த டிரைவர் காட்வின் மைக்கேல் (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும் நேரில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர். ஆனால் காட்வின் மைக்கேல் மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்று மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

    கடந்த 1-ந் தேதி மாணவியின் வீட்டிற்கு சென்ற அவர் மாணவியை கட்டாயப்படுத்தி ஊட்டிக்கு அழைத்து சென்றார். காட்வின் மைக்கேலும், மாணவியும் சேர்ந்து சென்றபோது மாணவியின் உறவினர் ஒருவர் பார்த்துவிட்டார். அவர் 2 பேரையும் கண்டித்து போலீஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தி விடுவதாக கூறி எச்சரித்தார்.

    இதனால் பயந்த மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து காட்வின் மைக்கேல் அங்கு இருந்து தப்பிச் சென்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாணவியை உறவினர்கள் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் மாணவியை பரிசோதனை செய்த போது அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து பெரிய நாயக்கன் பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் பிளஸ்-1 மாணவியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய டிரைவர் காட்வின் மைக்கேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 12 வயது மகள் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
    • இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென வயிறு பெரிதானது. பெற்றோர் அவரிடம் கேட்டபோது சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 12 வயது மகள் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியில் வசிக்கும் முருகேசன் என்ற முதியவர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் உன் பெற்றோரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி இதுகுறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென வயிறு பெரிதானது. பெற்றோர் அவரிடம் கேட்டபோது சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது, அருகில் வசிக்கும் முருகேசன் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும், இதை வெளியே சொன்னால் உன் அப்பா, அம்மாவை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து முருகேசனை (52) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்து தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜ மாணிக்கத்தை கைது செய்தனர்.

    காடையாம்பட்டி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை பொன்னம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (50).

    இவர் தீவட்டிப்பட்டி அடுத்த நடுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் காடையாம்பட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் மாலை நேரங்களில் டியூஷன் நடத்தி வருகிறார்.

    இவரிடம் காடையாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவிகள் டியூஷன் பயின்று வருகின்றனர். இதில் 2 மாணவிகளை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆசிரியர் ராஜமாணிக்கம் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்து தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜ மாணிக்கத்தை கைது செய்தனர். 

    • படுகாயம் அடைந்த சிறுமியை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • கைதான கோபால் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பழவேற்காடு அடுத்த அரங்கம் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (38). இவர்அதே பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரின் 3 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்தார்.

    இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு திரண்ட அப்பகுதி மக்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோபாலை சுற்றிவளைத்து பிடித்து கயிற்றால் கட்டினர். பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கோபாலை மீட்டு கைது செய்தனர்.

    மேலும் படுகாயம் அடைந்த சிறுமியை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கைதான கோபால் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இது குறித்து மாணவியின் பெற்றோர் புதுப்பேட்டை போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.
    • பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி விசாரணை நடத்தினார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த குடுமியான்குப்பம் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, வடலூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். பக்கத்து ஊரில் வசிக்கும் விஜயராம் (வயது 21) என்ற வாலிபர், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் புதுப்பேட்டை போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இதனை பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றி புதுப்பேட்டை போலீசார் பரிந்துரை செய்தனர்.

    அதன்படி பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி விசாரணை நடத்தினார். இதில் மாணவியை கடத்தி சென்ற விஜயராம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • யுவராஜ் கோழிப் பண்ணையில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.
    • புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக கூறி வாலிபர் ஒருவர் பாலியல் சீண்டல்கள் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி இது குறித்து அவரது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்த போது சிறுமி க்கு பாலியல் தொல்லை கொடுத்தது பல்லடம் அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்த யுவராஜ் என்பது தெரிய வந்தது. இவர் அந்தப் பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து தனது பாட்டியிடம் கூறினார்.
    • போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ஸ்ரீனுவை கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், கடபராஜி பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீனு (வயது 21). கூலி தொழிலாளியான இவர் மது போதைக்கு அடிமையானார்.

    அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி. தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று முன் தினம் இரவு சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஸ்ரீனு சிறுமியிடம் நைசாக பேசி ஊருக்கு வெளியே உள்ள ஓடை பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

    மறைவான இடத்தில் வைத்து சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். பின்னர் சிறுமியை அருகில் இருந்த குளத்தில் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு சிறுமி உயிர்த் தப்பி குளத்தில் இருந்து வெளியே வந்தார். பின்னர் வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து தனது பாட்டியிடம் கூறினார்.

    சிறுமியின் பாட்டி இதுகுறித்து போர்னாலா போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ஸ்ரீனுவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

    விருதுநகர்

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள மெய்யனூத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(வயது75). இவரது 17 வயது பேத்தி திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் 2 மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

    பெரியசாமி அவரிடம் விசாரித்தபோது காரியா பட்டியில் நடந்த பங்குனி பொங்கல் திருவிழாவுக்காக உறவினர் வீட்டுக்கு சென்ற போது கீழஉப்பிலிக்குண்டு பகுதியை சேர்ந்த பால் பாண்டி என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.

    இதையடுத்து பால்பாண்டியிடம் சிறு மியை திருமணம் செய்து கொள்ளுமாறு உறவி னர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அவர் திருமணத்திற்கு மறுத்தார். இதைத்தொடர்ந்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெரியசாமி புகார் செய்தார். போலீசார் பால்பாண்டி மீது போக்சோ வில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    விருதுநகரில் கிழக்கு பகுதியில் உள்ள குடி யிருப்பை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சிறுமிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து பெற்றோர் கள் சிறுமியிடம் விசாரித்த போது, அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பவருடன் ஒரு வருடமாக பழக்கம் இருப்பதாகவும், அவர் அங்குள்ள தியேட்டர் பகுதிக்கு அழைத்து சென்றும் பெற்றோர் வெளியே செல்கிறபோது வீட்டிற்கு வந்தும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.

    இதையடுத்து சிறுமி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமிக்கு பாலியல் தொல்லை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்
    • பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்

    கரூர்,

    கரூர் ரத்தினம் சாலை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சூர்யா காந்தி, (வயது 32) இவர் அதே பகு தியை சேர்ந்த, 13 வயது பள்ளி எட்டாம் வகுப்பு பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து புகார்படி, கரூர் மகளிர் போலீசார், சூர்யா காந்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 20 வயதான இளம்பெண் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காங்கேயம் அடுத்துள்ள கல்லெறி என்ற ஊரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
    • திண்டுக்கல்லை சேர்ந்த கூலி தொழிலாளி சதிஷ்குமார்(40) அங்கு தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

    காங்கேயம்:

    காங்கேயம் அருகேயுள்ள பாப்பினி கிராமத்தை சேர்ந்த 20 வயதான இளம்பெண் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காங்கேயம் அடுத்துள்ள கல்லெறி என்ற ஊரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு திண்டுக்கல்லை சேர்ந்த கூலி தொழிலாளி சதிஷ்குமார்(40) தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

    இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து அவர் பெற்றோரிடம் கூறினார். பெற்றோர் காங்கயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த சதிஷ்குமார் தலைமறைவானார்.

    இந்தநிலையில் நேற்று முன் தினம் வெள்ளகோவில் அருகேயுள்ள முத்தூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சதிஷ்குமாரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா மல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
    • சிறுமியிடம் சீனிவாசன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா மல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 30). இவர் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சீனிவாசன் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் சீனிவாசனை கண்டித்துள்ளனர். இதனையடுத்து சீனிவாசன் மாணவிக்கு செல்போன் வாங்கி கொடுத்து பெற்றோருக்கு தெரியாமல் மீண்டும் பழக ஆரம்பித்தார்.

    இந்த நிலையில் சிறுமியிடம் சீனிவாசன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சீனிவாசன் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் சாரதா ஆகியோர் சீனிவாசன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கூடத்திற்கு திரண்டு வந்தனர்.
    • தலைமை ஆசிரியர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் கருங்கல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இங்கு சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 144 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மேட்டூர் மாதையன்குட்டை ஜீவா நகரை சேர்ந்த ராஜா (51) என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார்.

    இவர் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கு மாணவி களை தனது அறைக்கு அழைத்து தினமும் கை, கால்களை அமுக்கிவிட்டு தலையை மசாஜ் செய்து விடுமாறு வற்புறுத்தி உள்ளார்.

    இதுகுறித்து மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கூடத்திற்கு திரண்டு வந்தனர்.

    பின்னர் தலைமை ஆசிரியர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்து கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அப்போது சிலர் கற்களை வீசி தலைமை ஆசிரியர் ராஜாவை தாக்க முயற்சி செய்தனர். இதையடுத்து போலீசார் ராஜாவை அருகில் உள்ள வகுப்பறைக்குள் பூட்டி பாதுகாத்தனர்.

    இதை தொடர்ந்து ராஜாவை கைது செய்யக்கோரி மேட்டூரில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அங்கு வந்த மேட்டூர் ஆர்.டி.ஓ தணிகாசம், தாசில்தார் முத்துராஜா, டி.எஸ்.பி.மரியமுத்து, கொளத்தூர் வட்டார கல்வி அலுவலர் சின்னராசு ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதன்பேரில் சமாதானம் அடைந்த பெற்றோர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புடன் மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு ராஜாவை அழைத்து சென்றனர்.

    தொடர்ந்து பாதிப்புக்குள்ளான மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

    பின்னர் தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். முன்னதாக கல்வித்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி ராஜாவை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

    ×