search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
    X

    பண்ருட்டி அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

    • இது குறித்து மாணவியின் பெற்றோர் புதுப்பேட்டை போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.
    • பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி விசாரணை நடத்தினார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த குடுமியான்குப்பம் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, வடலூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். பக்கத்து ஊரில் வசிக்கும் விஜயராம் (வயது 21) என்ற வாலிபர், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் புதுப்பேட்டை போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இதனை பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றி புதுப்பேட்டை போலீசார் பரிந்துரை செய்தனர்.

    அதன்படி பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி விசாரணை நடத்தினார். இதில் மாணவியை கடத்தி சென்ற விஜயராம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×