என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புகைப்படம்"
- ஊருக்கு செல்வதற்காக ஒரத்தநாடு பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
- பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணை ராமன் என்பவர் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கூர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது பட்டதாரி பெண் தமிழக அரசு அறிவித்துள்ள மகளிர் கலைஞர் உரிமை திட்டத்தின் பயிற்சிக்காக ஒரத்தநாடு யூனியன் அலுவலத்திற்கு வந்துள்ளார்.
பின்னர் பயிற்சி முடித்துவிட்டு ஊருக்கு செல்ல பஸ்சுக்காக ஒரத்தநாடு பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த தென்னமநாடு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ராமன் (வயது46) மேடை பாடகர்.
என்பவர் பஸ்சுக்காக காத்திருந்த பட்டதாரி பெண்ணை செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.
இதற்கு அந்த பட்டதாரி பெண் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு ராமன் வைத்திருந்த செல்போனை பறிமுதல் செய்து ஒரத்தநாடு மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் ராமரை ஒரத்தநாடு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படத்தி சிறையில் அடைத்தார்.
- எங்களுக்கு அவரை மிகவும் பிடிக்கும், அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும்.
- பெற்றோர்கள் தேடுவார்கள் உடனடியாக வீட்டிற்கு செல்லுங்கள் என்றார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்திருந்தார். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் மகாபாரதி தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக அமைச்சர் உதயநிதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தபோது தன்னை பார்த்த மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கையசைத்துள்ளார்.
இதனைப் பார்த்த பள்ளி மாணவர்கள் அமைச்சர் எங்கே போகிறார் என்று விசாரித்துவிட்டு உதயநிதி தேடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆய்வுக் கூட்டம் நடக்கும் கூட்ட அரங்க வாயிலுக்கு வந்தனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், திமுகவினர் எதற்காக வந்தீர்கள் என்று கேட்டபோது நாங்கள் உதயநிதி ஸ்டாலினின் ரசிகர்கள் என்றும், எங்களுக்கு அவரை மிகவும் பிடிக்கும் என்றும், அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என உற்சாகமாக கூறினர்.
வீட்டில் பெற்றோர்கள் தேடுவார்கள் என்று மாணவர்களை வீட்டிற்கு செல்லும்படி கூறியும் கேட்காமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உதயநிதியை பார்ப்பதற்காக காத்திருந்தனர். தொடர்ந்து ஆய்வு கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னைப் பார்ப்பதற்காக காத்திருந்த மாணவர்களை அழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பின்னர் உற்சாகமடைந்த மாணவர்கள் அமைச்சருக்கு வரேன் சார் என கை கொடுத்து விட்டு மகிழ்ச்சியாக அப்பகுதியில் இருந்து சென்றனர்.
- யானைகளை புகைப்படம் எடுத்த நபருக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
- கடந்த 2 மாதங்களில் 40 பேரிடம் ரூ.4 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புலிகள் காப்பகம் உள்ளது. இந்த அடர்ந்த வனப்பகுதியில் தாளவாடி, ஆசனூர், தலமலை உள்பட 10 வன சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை கள், புலி, சிறுத்தை, கரடி என பல்வேறு வன விலங்குகள் உள்ளன.
மேலும் ஆசனூர் வனப்பகுதிகளில் குளம், குட்டைகள் மற்றும் நீரோடைகள் உள்ளது. இந்த நீர்நிலைகளில் வன விலங்குகள் வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் தாளவாடி, ஆசனூர் வனப்பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் ஒரு சில நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆசனூர் வனப்பகுதி பசுமையாக காட்சி அளித்து வருகிறது.
ஆசனூர் வனப்பகுதியை ரசிப்பதற்கு தினமும் பொதுமக்கள் பலர் வந்து இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைந்து வருகிறார்கள். இதையடுத்து வனத்துறையின்ர் கண்காணித்து அவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஈரோடு மாட்ட பொதுமக்கள் மட்டுமின்றி கோவை, திருப்பூர் உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து இயற்கை அழகை ரசிக்கிறார்கள். இதனால் ஆசனூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
மேலும் வனத்துறையினரும் ரோந்து வந்து கண்காணித்து வருகிறார்கள். அப்போது வனப்பகுதிக்குள் நுழைபவர்களை எச்சரித்து அனுப்பி வைக்கிறார்கள்.
இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதிக்குள் சிலர் அனுமதியின்றி நுழைந்து ஆபத்தை உணராமல் சுற்றி திரிந்தனர். அப்போது 3 பேர் ஆசனூர் வனப்பகுதியில் உள்ள நீரோடையில் குளித்து கொண்டு இருந்தனர். அந்த பகுதியில் ரோந்து வந்த வனத்துறையினர் அவர்களிடம் விசரணை நடத்தி அவர்கள் 3 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அந்த பகுதியில் அனுமதியின்றி நுழைந்து யானைகளை புகைப்படம் எடுத்த நபருக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும் அவர் கொண்டு வந்த கேமிராவையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களிடம் வனப்பகுதியில் உள்ள ஆபத்து குறித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஆசனூர் வனசரக அலுவலர் சிவகுமார் கூறும்போது, வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்பட பல வன விலங்குகள் உள்ளன. பொதுமக்கள் ஆபத்தை உணராமல் அத்துமீறி நுழைகிறார்கள். இதனால் ஆபத்து நிகழ கூடும். எனவே பொது மக்கள் வனப்பகுதிக்குள் நுழைவதை தவிர்க்க வேண்டும். அதையும் மீறி அனுமதியின்றி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து புகைப்படம் எடுத்தல், நீரோடைகளில் குளித்தல் போன்ற குற்றங்களுக்காக கடந்த 2 மாதங்களில் 40 பேரிடம் ரூ.4 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 140 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.9 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.
- சம்பவம் குறித்து மாணவியின் தாய் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- மாணவி மாயமானது அவரது பெற்றோரையும், உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
கோவை:
கோவை ராமநாதபுரம் அடுத்த ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் சுதாகரன்.
இவரது மனைவி சசிகலா. இவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 12 வயதில் ஸ்ரீநிதி என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
ஸ்ரீநிதி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது முழு ஆண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் ஸ்ரீநிதி வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று காலை சுதாகரன் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சசிகலா, அவரது மகள் ஸ்ரீநிதி மற்றும் மகன் மட்டும் இருந்தனர். மதியம் சசிகலா வீட்டில் வேலைகளை பார்த்து கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீநிதி தனது சகோதருடன் வீட்டின் முன்பு நின்று விளையாடி கொண்டிருந்தார். சசிகலா வேலையை முடித்து விட்டு மதியம் 1.30 மணிக்கு வெளியில் வந்து பார்த்த போது மகன் மட்டும் நின்றிருந்தார். மகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியான அவர் இதுகுறித்து தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக அவர் வீட்டிற்கு விரைந்து வந்தார். பின்னர் 2 பேரும் சேர்ந்து அக்கம்பக்கம் உள்ளவர்களின் வீடு மற்றும் அருகே உள்ள இடங்கள் முழுவதும் ஸ்ரீநிதியை தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.
உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என நினைத்து அவர்களை தொடர்பு கொண்டு விசாரித்தனர். ஆனால் மாணவி அங்கும் செல்லவில்லை என்பது தெரியவந்தது.
இதனால் மாணவியின் தாய் சசிகலா சம்பவம் குறித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மாணவியின் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் விசாரித்து விட்டு, அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களையும் ஆய்வு செய்தனர்.
அப்போது அதில் மாணவி வீட்டில் இருந்து நடந்து ஒண்டிப்புதூர் பஸ் நிறுத்தத்திற்கு செல்வதும், அங்கிருந்து உக்கடம் செல்லும் பஸ்சில் ஏறும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீசார் உக்கடம் பஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு பஸ் நிலையம் மற்றும் அங்கு வந்த அனைத்து பஸ்களிலும் ஏறி தேடி பார்த்தனர். ஆனால் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கு சென்றார் என்பதும் தெரியவில்லை.
மாணவி மாயமாகி ஒரு நாள் ஆகியும் இன்னும் கிடைக்காததால் மாணவியின் பெற்றோர் அழுதபடியே மிகுந்த சோகத்தில் உள்ளனர். அவர்களை உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றி வருகின்றனர்.
இதற்கிடையே மாயமான மாணவியை கண்டுபிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மாணவியை தேடி வருகின்றனர். மாணவி மாயமானரா? அல்லது யாராவது கடத்தி சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் மாணவியை எங்கு தேடியும் கிடைக்காததால், மாணவியின் தந்தை சுதாகரன், தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் தனது மகளின் புகைப்படம், பெயர், வயது, வீட்டின் முகவரி என அனைத்து தகவல்களையும் சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் பதிவிட்டார். அதில், இந்த புகைப்படத்தில் உள்ள மாணவியின் பெயர் ஸ்ரீநிதி, கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த அவரை நேற்று மதியம் முதல் காணவில்லை. அவரை யாராவது பார்த்தால் அதில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் என கூறப்பட்டிருந்தது.
தற்போது இந்த தகவலானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோவை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மின்னல் வேகத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்க்கும் பலரும் தங்களது செல்போனில் உள்ள வாட்ஸ் அப், பேஸ் புக் குழுக்களில் பகிர்ந்து மாணவியை கண்டுபிடிக்க தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். மாணவி மாயமானது அவரது பெற்றோரையும், உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
- மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நடைபெற்றது.
- அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டு பொதுமக்கள் பயன்பெற வேண்டும்.
நாகர்கோவில்:
தமிழக அரசு துறைகளின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரு கிறது.இந்த திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புகைப்படக் கண் காட்சி நடத்தப்படுகிறது.
அதன்படி தக்கலை ஒன்றியம், திக்கணங்கோடு பகுதியில் அரசின் சாத னைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன் பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்படக் கண் காட்சி நடைபெற்றது.
இதுகுறித்து கலெக்டர் அரவிந்த் கூறுகையில், ஏழை, எளிய, கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சி நடக்கிறது.
அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டு அனைத்துத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் பெற்று பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தர்காவில் வழங்கப்படும் அன்னதான உணவுகளை வீணடிக்க கூடாது.
- பிரார்த்தனை செய்யும் இடங்களில் பிறருக்கு இடையூறாக புகைப்படம், வீடியோ எடுக்க கூடாது.
நாகப்பட்டினம்:
நாகூர் தர்கா போர்ட் ஆப் டிரஸ்டிகள் சார்பாக தர்கா மானேஜிங் டிரஸ்டி டாக்டர் செய்யது காமில் சாஹிப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப–தாவது:-
நாகூர் தர்காவுக்கு வரும் யாத்ரீகர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். முடிந்தவரை தனி மனித இடைவெளி கடைப்பிடித்து முக கவசம் அணிய வேண்டும்.
குப்பை தொட்டிகளில் குப்பைகளை போடுங்கள். தங்களது காலணிகளை தர்கா உள்ளே எடுத்து செல்லாதீர்கள். தர்கா கழிவறைகளை பயன்படுத்தினால் சுத்தம் செய்துவிட்டு செல்லுங்கள். குடிநீரை வீண் விரயம் செய்யாதீர்கள்.
தர்காவில் வழங்கப்படும் அன்னதான உணவுகளை வீணடிக்க கூடாது.தர்கா குளத்தில் உணவு பொருட்களை, குப்பை களை போடக்கூடாது. பிரார்த்தனை செய்யும் இடங்களில் பிறருக்கு இடையுறாக புகைப்படம், வீடியோ எடுக்க கூடாது.
தர்காவில் பொது இடங்களில் ஏதேனும் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் கண்டால் தர்கா அலுவலகத்தில் தெரியபடுத்தவும்.
தங்களது உடைகளை தாங்களே பார்த்து கொள்ளுங்கள். ஒரு வேளை உடைமைகள் பொருட்கள் தொலைந்தால் தர்கா அலுவலகம் முன் அமைந்துள்ள தொண்டர் படையை உடனே தொடர்பு கொள்ளுங்கள்.
அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். உங்களது குறை நிறைகளை மானேஜிங் டிரஸ்டி, நாகூர் தர்கா, நாகூர்-611002 என்ற முகவரிக்கு எழுத்து பூர்வமாக தெரியுங்கள்.
அவரச குறை நிறைகளை வாட்சப் மூலமாக தர்கா மானேஜிங் டிரஸ்டிக்கு 96774-10786, 98424-41404 அனுப்பவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முகாம்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.
- ஆதார் எண், கைபேசி எண் இணைக்காத வாக்காளர்கள் படிவம் 6-பி பூர்த்தி செய்தும் வழங்கலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் வசதிக்காக இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.
நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) இந்த சிறப்பு முகாம்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாமில் 2023 ஜனவரி 1-ம் தேதியன்று 18 வயது நிரம்பியவர்கள் அதாவது 2005 ஜனவரி 1-ம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்பாக பிறந்தவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் உள்ளவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் எண் 6ஐ அருகாமையில் உள்ள வாக்கு சாவடிகளில் பெற்று பூர்த்தி செய்து அதனுடன் வயது மற்றும் இருப்பிடத்திற்கான ஆவண நகல்களை இணைத்து தங்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தினை படிவத்தில் ஒட்டி சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம்.
மேலும் இறப்பு, நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு போன்ற காரணங்களின் அடிப்படையில் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும், வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வகையான பிழை திருத்தங்கள் மேற்கொள்ள தொகுதி மாற்றம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, பெயர், உறவுமுறை, புகைப்படம் மாற்றம் செய்ய, காணாமல் போன வாக்காளர் அட்டைக்கு பதிலாக மாற்று அட்டை பெற படிவம் 8-ஐ பூர்த்தி செய்தல், இதுவரை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண், கைபேசி எண் இணைக்காத வாக்காளர்கள் படிவம் 6-பி பூர்த்தி செய்தும் வழங்கலாம்.
பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
அலுவலக வேலை நாட்களில் தாசில்தார் அலுவலக தேர்தல் பிரிவில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வோண்டும்.
- கணினி கணக்கியல் பயிற்சி 30 நாட்கள் அளிக்கப்படவுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கீழ் செயல்படும் கிராமிய சுய வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் கணிணி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கணிணிப் பயிற்சி பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வோண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
கணிணி கணக்கியல் பயிற்சி 30 நாட்கள் அளிக்கப்படவுள்ளது.
பயிற்சிக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலிருந்து பயிற்சி நிறுவனம் வரை பயிற்சி காலத்திற்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கப்படும்.
மேற்படி பயிற்சி பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி அருகில் ஈஸ்வர் நகர், 4 பக்கிரிசாமி தெருவில் இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் நேரில் வந்து வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்கள் பெற 04362-242377 என்ற தொலைபேசி எண்ணில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மேற்கூறிய ஆவணங்களுடன் கணிணி பயிற்சிக்கு விண்ணப்பித்து பயன்பெ றலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உதவித்தொகை, உதவி உபகரணங்கள் மற்றும் இதர கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம்.
- ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து மனு அளிக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கு எண் 10 -ல் நாளை (வியாழக்கிழமை ) காலை 11 மணிக்கு மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. அன்றைய கூட்டத்தில் மாற்றுத்தி றனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள் மற்றும் இதர கோரிக்கைகளை மனுக்களாக நேரடியாக அளிக்கலாம். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்கள் அனைத்தும் உதவிகள் வாரியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் உதவிகள் வழங்கிட தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, இந்த வாய்ப்பினை அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேற்படி குறைதீர்க்கும் நாளில் மனுக்கள் அளிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்தி றனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகல், இருப்பிடத்திற்கான ஆதாரமாக குடும்ப அட்டையின் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -1 மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து மனு அளிக்க வேண்டும்.
எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் நாளை காலை 10 மணிக்குள் நேரில் வந்து மனுக்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண் 04362-236791-ல் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புகைப்படத்தை படிவத்தில் ஒட்டி அந்தந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் வழங்கலாம்.
- வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது :-
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 9-ந் தேதி வெளியி டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலின் நகல், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சா வடிகள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்களிலும் பொது மக்களின் பார்வைக்காக அடுத்த மாதம் 26 ஆம் தேதி வரை வைக்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் பிழையின்றி இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பொது மக்களின் வசதிக்காக இன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்கள் காலை 9.30 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.
மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.
இதேபோல் நாளை (ஞாயிற்று கிழமை) மற்றும் 26-11-2022 (சனிக் கிழமை), 27-11-2022 (ஞாயிற்றுகிழமை) ஆகிய நாட்களிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இச்சிறப்பு முகாமில் 1.1.2023 அன்று 18 வயது நிரம்பியவர்கள் அதாவது 1.1.2005 அன்று அல்லது அதற்கு முன்பாக பிறந்தவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் உள்ளவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட படிவம் எண் 6-ஐ அருகாமையிலுள்ள வாக்குச்சாவடிகளில் பெற்று பூர்த்தி செய்து அதனுடன் வயது மற்றும் இருப்பிடத்திற்கான ஆவண நகல்களை இணைத்து தங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை படிவத்தில் ஒட்டி அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம்.
மேலும் இறப்பு, நிரந்தரமாக இடம் பெயர்ந்த வர்கள், இரட்டை பதிவு போன்ற காரணங்களின் அடிப்படையில் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7 ஐ பூர்த்தி செய்தும், அனைத்து வகையான பிழை திருத்தங்கள் மேற்கொள்ள, தொகுதி மாற்றம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, பெயர், உறவு முறை, புகைப்படம் மாற்றம் செய்ய படிவம் 8 -ஐ பூர்த்தி செய்தும், இதுவரை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் வாக்காளர்கள் படிவம் 6பி-ஐ பூர்த்தி செய்தும் வழங்கலாம் .
பொது மக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் காலை 9.30 மணி மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பி க்கலாம்.
அலுவலக வேலை நாட்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்.
மேலும், நேரில் சென்று படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து வழங்க இயலாதவர்கள் www.nvsp.in என்ற இணையதளம் மற்றும் Voters Help Line என்ற Mobile App மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்கள் அறிய 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பேஸ்புக் பக்கத்தில் ஆன்லைன் கிரடிட் மூலம் லோன் தருகிறோம் என ஒரு விளம்பரம் வந்தது.
- சில நாட்கள் கழித்து எனது போட்டோவை மார்பிங் செய்து எனது மொபைலுக்கு அனுப்பி குறுந்தகவல் வந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை சேர்ந்த ஒரு தனியார் வங்கி உதவி மேலாளர். இவர் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது :-
எனது பேஸ்புக் பக்கத்தில் ஆன்லைன் கிரடிட் மூலம் லோன் தருகிறோம் என ஒரு விளம்பரம் வந்தது. மேலும் கிரடிட் லோன் என்ற செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறப்பட்டது.
அதன்படி நானும் மொபைலில் பதிவிறக்கம் செய்தேன்.
இதை எடுத்து எனது மொபைலில் கேலரி, தொடர்பு எண்கள், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல்வேறு செயலிக்கு நான் அந்த செயலில் கூறப்பட்டுள்ள மாதிரி அக்சஸ் செய்து கொண்டேன்.
பின்னர் உங்களுக்கு லோன் தருகிறோம். அதற்காக நீங்கள் கட்டணமாக ரூ.5000 செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. இதனால் நான் அந்த கட்டணத்தை செலுத்தாமல் வெளியேறி விட்டேன்.
சில நாட்கள் கழித்து எனது வங்கி கணக்குக்கு ரூ.9000 வரவு வைக்கப்பட்டது.
இந்த பணம் அந்த செயலி மூலம் வரவு வைக்கப்பட்டது என்பதை அறிந்தேன்.
இருந்தாலும் நான் அதனை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டேன்.
சில நாட்கள் கழித்து எனது போட்டோவை மார்பிங் செய்து எனது மொபைலுக்கு அனுப்பி இதனை வெளியிடாமல் இருப்பதற்காக ரூ.14700 தர வேண்டும் என குறுந்தகவல் வந்தது.
மேலும் மார்பிங் செய்யப்பட்ட எனது போட்டோவை எனது உறவினர்களுக்கும் அந்த மர்ம நபர்கள் அனுப்பி வைத்துள்ளனர் இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன்.
ஏமாற்றப்பட்டோம் என்பதையும் உணர்ந்தேன். எனவே மர்ம நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
புகாரின் பேரில் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப் -இன்ஸ்பெக்டர் கார்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காமராஜர் ஆட்சி சாதனை புகைப்படம் திறக்கப்பட்டது.
- இதில் காங்கிரஸ் கமிட்டி ஊடகப்பிரிவு மாநில பொதுச் செயலாளர் பால் ஜோசப், மூத்த வழக்கறிஞர்கள் பிஸ்மில்லா கான், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் காங்கிரஸ் சார்பாக மதுரை மேலமாசி, வடக்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கு வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் வேல்பாண்டி தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் முன்னிலையில் காங்கிரஸ் மனித உரிமை துறை மாநில பொதுச் செயலாளர் பி.ஜே. காமராஜ், காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் எஸ்.பி. வரதராஜன் ஆகியோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதையொட்டி காமராஜர் ஆட்சி காலத்தில் நடத்திய சாதனை நிகழ்வுகளை விளக்கும் வகையில் அவரது புகைப்படங்களை, மனித உரிமை துறை மாநில பொதுச் செயலாளர் பி.ஜே. காமராஜ் திறந்து வைத்தார். இதில் காங்கிரஸ் கமிட்டி ஊடகப்பிரிவு மாநில பொதுச் செயலாளர் பால் ஜோசப், மூத்த வழக்கறிஞர்கள் பிஸ்மில்லா கான், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்