search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பினராயி விஜயன்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குடியரசு தின விழாவில் கவர்னர் ஆரீப் முகமது கான், முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர்.
    • மாலையில் கவர்னர் ஆரீப் முகமது கான், தேநீர் விருந்து அளித்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கும், கவர்னர் ஆரீப் முகமது கானுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் கவர்னர் ஆரீப் முகமது கான், முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர்.

    விழாவில் பேசிய கவர்னர், மத்திய அரசின் சாதனைகளை வலியுறுத்தி பேசினார். கருத்து வேறுபாடுகள் வன்முறையாக மாறுவது, ஜனநாயக துரோகம் என்றும் அவர் பேசினார்.

    தொடர்ந்து மாலையில் கவர்னர் ஆரீப் முகமது கான், தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்தினை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் புறக்கணித்தனர்.

    கடந்த மாதம் புதிய மந்திரிகள் கணேஷ்குமார் மற்றும் ராமச்சந்திரன் கடனப்பள்ளி ஆகியோர் பதவி பிரமாணத்தின்போது கவர்னர் கொடுத்த தேநீர் விருந்தையும் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய அரசை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் பிப்ரவரி 8-ந்தேதி கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடக்க உள்ளது.
    • கேரள மாநில மந்திரிகள், இடதுசாரி கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில அரசுக்கும், அந்த மாநில கவர்னருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. இதன் காரணமாக கவர்னருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    கேரள மாநிலத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக பினராயி விஜயன் தலைமையிலான அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் கேரளாவை புறக்கணித்து வரும் மத்திய அரசை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் பிப்ரவரி 8-ந்தேதி கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடக்க உள்ளது.

    இதில் கேரள மாநில மந்திரிகள், இடதுசாரி கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள். இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பினராயி விஜயன் தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் பங்கேற்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேரள மாநில தொழில்துறை மந்திரி ராஜீவ் நேற்று சந்தித்தார்.

    அப்போது மு.க.ஸ்டாலினிடம், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வழங்கிய அழைப்பு கடிதத்தை அவர் வழங்கினார்.

    பினராயி விஜயன், தனது மாநில மந்திரியை நேரில் அனுப்பி அழைப்பு விடுத்திருப்பதால் மத்திய அரசுக்கு எதிராக பினராயி விஜயன் தலைமையில் டெல்லியில் பிப்ரவரி 8-ந்தேதி நடக்க இருக்கும் போராட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கலாம் என்று கருதப்படுகிறது.

    • அடுத்த 2½ ஆண்டுகளுக்கான மந்திரிகளாக நேற்று கடனம்பள்ளி ராமச்சந்திரன் மற்றும் கணேஷ்குமார் ஆகியோர் பதவியேற்றனர்.
    • கவர்னர் மாளிகையில் அவர்களுக்கு கவர்னர் ஆரிப் முகம்மதுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் (எல்.டி.எப்.) ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு, ஜனநாயக கேரள காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸ் (எஸ்), கேரள காங்கிரஸ் (பி) ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த கட்சிகளுக்கு தலா ஒரு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் 2 பேருக்கு, முதல் 2½ ஆண்டுகளும், மேலும் உள்ள 2 பேருக்கு அடுத்த 2½ ஆண்டுகளும் மந்திரி பதவி வழங்குவது என தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின்போது ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி முதல் 2½ ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அடுத்த 2½ ஆண்டுகளுக்கான மந்திரிகளாக நேற்று கடனம்பள்ளி ராமச்சந்திரன் மற்றும் கணேஷ்குமார் ஆகியோர் பதவியேற்றனர்.

    திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் அவர்களுக்கு கவர்னர் ஆரிப் முகம்மதுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்பட மந்திரிகள் அனைவரும் கலந்துகொண்டனர். தொடர்ந்து கவர்னர் ஆரிப் முகம்மது கான் தேநீர் விருந்து அளித்தார்.

    இந்த விருந்தை முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் புறக்கணித்தனர். புதிதாக பொறுப்பேற்ற மந்திரிகள் கணேஷ்குமார், கடனம்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோருடன் வனத்துறை மந்திரி சசீந்திரன் மட்டும் தேநீர் விருந்தில் பங்கேற்றனர்.

    முன்னதாக பதவியேற்பு விழாவுக்காக டெல்லியில் இருந்து கவர்னர் ஆரிப் முகம்மது கான் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். விமான நிலையத்தில் இருந்து கவர்னர் மாளிகைக்கு அவர் காரில் புறப்பட்டபோது, இந்திய மாணவர் கூட்டமைப்பினர் கருப்பு கொடி காட்ட முயன்றனர். அவர்களை தடுத்த போலீசார் 4 பேரை கைது செய்தனர்.

    • பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
    • அனைவருக்கும் கி.வீரமணி, பெரியார் புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார்.

    சென்னை:

    இந்திய சமூக நீதிப் போரில் முதல் களம் வைக்கம் போராட்டம் ஆகும்.

    கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவர் கோவிலை சுற்றி உள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இதை எதிர்த்து 1924-ம் ஆண்டு அங்கு மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது கேரள தலைவர்கள் தந்தை பெரியாருக்கு கடிதம் எழுதி இந்த போராட்டத்திற்கு நீங்கள் வந்துதான் உயிர் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    இந்த கடிதம் கிடைத்ததும், தந்தை பெரியார் தமிழ் நாட்டில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டு வந்து, வைக்கம் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார்.

    இந்த போராட்டம் அப்போது பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. மக்கள் திரண்டு வந்து போராட்டத்துக்கு ஆதரவு அளித்தனர். இதனால் தந்தை பெரியார் 2 முறை கைதானார். முதல் முறை ஒரு மாதமும், 2-ம் முறை 6 மாதமும் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    சிறையில் கை, கால்களில் சங்கிலியால் பிணைக்கப் பட்டு அவர் சிரமப்படுத்தப்பட்டார். அந்த சமயத்தில் திருவாங்கூர் மகாராஜா இயற்கை எய்ததால், ராணியார் அனைவரையும் விடுதலை செய்தார்.

    அதுமட்டுமின்றி வைக்கம் தெருவில் நடக்கக் கூடாது என்ற தடையையும் ராணி நீக்கினார். இதனால் பெரியாரின் போராட்டம் வெற்றி யில் முடிந்து 'வைக்கம் வீரர்' என்று அழைக்கப்பட்டார்.

    இந்த போராட்ட வெற்றி யின் 100-ம் ஆண்டை குறிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு சார்பில் வைக்கம் போராட் டம் நூற்றாண்டு சிறப்பு விழா சென்னை நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

    அதன்படி வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெறுவதாக இருந்தது. திடீரென இன்று காலையில் வேப்பேரி பெரியார் திடலுக்கு விழா மாற்றப்பட்டது.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்றே சென்னை வந்துவிட்டார். அவரை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் வரவேற்று தங்க வைத்தனர்.

    இன்று காலையில் விழா நடைபெற்ற வேப்பேரி பெரியார் திடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் ஒருசேர வந்தனர். அவர்களை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வரவேற்றார்.

    அதன் பிறகு அங்கிருந்த பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

    அதன் பிறகு பெரியார் திடலில் உள்ள நினைவு தூண் அருகே விழா நிகழ்ச்சிகள் எளிமையாக நடைபெற்றது.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெரியார் நினைவுப் பரிசு வழங்கினார்.

    அதனை தொடர்ந்து நூற்றாண்டு விழா மலர் வெளியிடும் நிகழ்ச்சி நடை பெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூற்றாண்டு மலரை வெளியிட அதை பினராயி விஜயன் பெற்றுக் கொண்டார்.

    அதே போல் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், பெரியாரும் வைக்கம் போராட்டமும் என்ற நூலை வெளியிட அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல் வம், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தா. மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., பரந்தாமன் எம்.எல்.ஏ., மேயர் பிரியா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அனைவருக்கும் கி.வீரமணி, பெரியார் புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார். நிகழ்ச்சிகள் மிக எளிமையாக நடைபெற்று முடிந்தது.

    • மாநில தலைமைச் செயலகம் மற்றும் 564 போலீஸ் நிலையங்களை நோக்கி பேரணியும் நடத்தப்பட்டது.
    • காங்கிரஸ் மாநில துணை தலைவர் அரிதாபாபு உள்ளிட்ட பெண் தலைவர்களின் உடைகள் மற்றும் தலைமுடியை பிடித்து இழுத்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் மக்களை சந்தித்து குறைகளை கேட்கும் நவகேரள சதஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் போது முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு எதிராக சில இடங்களில் இளைஞர் காங்கிரசார் மற்றும் கேரள மாணவர் சங்கத்தினர் கருப்புக் கொடி காட்டினர்.

    அப்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றது. மாநில தலைமைச் செயலகம் மற்றும் 564 போலீஸ் நிலையங்களை நோக்கி பேரணியும் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் தலைமை செயலகம் நோக்கி சென்ற பேரணியின் போது வன்முறை ஏற்பட்டது. போலீசாரை நோக்கி கற்கள் மற்றும் செருப்புகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பேரணியை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. பேரணியில் சென்றவர்கள் தடையை மீறி முன்னேறி செல்ல முயன்றனர்.


    இதனால் போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். கூட்டத்தை கலைக்க பேரணியில் பங்கேற்றவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. இதனால் பேரணியில் பங்கேற்றவர்கள் சிதறி ஓடினர். அந்த பகுதி கலவர பகுதி போல் காணப்பட பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி பேரணியில் பங்கேற்றவர்கள் கூறுகையில், போலீசார் அத்துமீறி செயல்பட்டுள்ளனர். காங்கிரஸ் மாநில துணை தலைவர் அரிதாபாபு உள்ளிட்ட பெண் தலைவர்களின் உடைகள் மற்றும் தலைமுடியை பிடித்து இழுத்தனர். இதனால் தான் அங்கு பிரச்சினை உருவானது என்றனர். மேலும் போலீசாரின் தாக்குதலால், கட்சியினர் சிலர் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

    தொடர்ந்து இளைஞர் காங்கிரசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் அமைப்பினர் சிலரை போலீசார் பிடித்து வைத்துள்ளதாகவும், அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.

    தொடர்ந்து கட்சியினரிடையே பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் சதீசன், நவகேரள சதஸ் நிகழ்ச்சியின் போது மாவட்டம் தோறும் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களை தாக்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் பதிலடி கொடுக்கப்படும் என்றார்.


    அவரது பேச்சுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசுக்கும், அதன் வெளிப்படை திட்டத்துக்கும் எதிராக சதீசன், வன்முறையை தூண்டி விட்டு அமைதியை குலைக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

    இந்த நிலையில் பேரணியின் போது, போலீசாரை தாக்கியதற்காகவும், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதற்காகவும் சதீசன் மீது, ஜாமீனில் வெளிவர முடியாக சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ள சதீசன், தன் மீதான குற்றச்சாட்டுகளால் பயந்து விட்டேன் என முதல்-மந்திரியிடம் சொல்லுங்கள் என குறிப்பிட்டுள்ளார். 

    • காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • முதல்-மந்திரி மற்றும் அமைச்சர்கள் பயணம் செய்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் நேரில் எடுத்துக்கூறும் வகையில் நவகேரள சதாஸ் என்ற யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. காசர்கோட்டில் தொடங்கிய இந்த யாத்திரை, மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கு செல்லும் வகையில் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    இந்த யாத்திரையில் பிரத்யேக பஸ்சில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் பயணித்து வருகின்றனர். மக்களின் நிதியை வீணாக்கும் வகையில் இந்த யாத்திரை நடத்தப்படுவதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நவகேரள சதாஸ் யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் இளைஞர் காங்கிரசார் கருப்பு கொடி போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களுக்கும், இளைஞர் அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு மோதல் சம்பவம் அரங்கேறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பல்வேறு மாவட்டங்களில் தனது பயணத்தை நிறைவு செய்திருக்கும் நவ கேரள சதாஸ் யாத்திரை பஸ், நேற்று எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூருக்கு சென்றது. ஓடக்கலி என்ற இடத்தில் வந்த போது, யாத்திரைக்கு தடை ஏற்படுத்தும் வகையில் கேரள மாணவர் சங்கத்தினர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது முதல்-மந்திரி மற்றும் அமைச்சர்கள் பயணம் செய்த பிரத்யேக பஸ்சின் மீது போராட்டக்காரர்கள், காலணியை வீசினர். இதனால் ஆத்திரமடைந்த இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பினர், போராட்டக்காரர்களை தாக்கினர்.

    போராட்டக்காரர்களை ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பினர் விரட்டி விரட்டி தாக்கினர். போலீசாரின் முன்னிலையிலேயே மாணவர் சங்கத்தினர் தாக்கப்பட்டனர். இதையடுத்து மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, அங்கிருந்து கலைந்து செல்லச் செய்தனர்.

    பின்பு முதல்-மந்திரி மற்றும் அமைச்சர்கள் பயணம் செய்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. நவகேரள சதாஸ் யாத்திரை வாகனத்தின் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறும்போது, இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்தார்.

    அதேவேளையில் தங்களின் இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் தொடரும் என்று கேரள மாணவர் சங்க தலைவர் அலோசியஸ் சேவியர் தெரிவித்திருக்கிறார். எதிர்க்கட்சி தலைவர் சதீசன் கூறும்போது, காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கப்பட்டது தொடர்பான வழக்குகளில் முதல்-மந்திரியை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்றார்.

    இந்நிலையில் காலணி வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட கேரள மாணவர் சங்கத்தினர் சிலரை போலீசார் பிடித்துச் சென்றனர். அவர்களில் 4 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர். குரும்பப்பாடி போலீசார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    விசாரணைக்கு பிறகு அவர்கள் கைது குறித்து தகவல் வெளியாகும் என தெரிகிறது. காலணி வீசிய போராட்டக்காரர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், மாணவர் சங்கத்தினரை தாக்கிய இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பினர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவிலேயே முதல் முறையாக வாட்டர் மெட்ரோ திட்டம் கேரளாவில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
    • இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி வைத்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தின் முக்கிய இடம் என்பதால், பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். கொச்சியில் துறைமுகம், விமான நிலையம் உள்ளது.

    இதற்கிடையே, இந்தியாவிலேயே முதல் முறையாக வாட்டர் மெட்ரோ திட்டம் (சுற்றுலா படகு போக்குவரத்து) கேரளாவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடலில் படகு மூலம் 11 தீவுகளுக்குச் சென்று கண்டு ரசிக்கலாம்.

    தரைவழியில் மட்டும் இருந்த மெட்ரோ திட்டம் கடல் வழியிலும் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி வைத்தார்.

    ஒரு படகில் 100 பேர் பயணம் மேற்கொள்ளலாம். குறைந்த கட்டணம் ரூ.20, அதிக கட்டணம் ரூ.40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 78 கி.மீ. சுற்றளவில் படகு போக்குவரத்து இயக்கப்பட இருக்கிறது.

    வந்தே பாரத் ரெயிலில் உள்ளவாறு, கழிப்பிடம், உணவு, குளிர்சாதன வசதி உள்ளிட்ட நவீன வசதிகள் வாட்டர் மெட்ரோ திட்ட படகுகளிலும் உள்ளது.

    இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கொச்சியில் இருந்து வாட்டர் மெட்ரோவில் பயணம் செய்து மகிழ்ந்தார் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் புகைப்படம் பதிவிட்டு தெரிவித்துள்ளது.



    • கேரளத்தில் உள்ள கண்ணூா் பல்கலைக்கழக துணைவேந்தராக கோபி நாத் ரவீந்திரனை மறுநியமனம் செய்ய மாநில அரசு பரிந்துரைத்தது.
    • தற்போது மாநிலத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் பதவி நீண்ட காலமாக காலியாக உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் நிருபர்களிடம் திருவனந்தபுரத்தில் கூறியதாவது:-

    என்னிடம் ஊடகங்கள் வாயிலாக மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் பேச வேண்டாம். எந்தவொரு மசோதா அல்லது அவசரச் சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றால், ஏன் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கவர்னர் மாளிகைக்கு வந்து முதல்-மந்திரி விளக்கம் அளிக்க வேண்டும்.

    அவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டால், பாரபட்சம் இல்லாமல் எந்தவொரு மசோதா, அவசரச் சட்டம் அல்லது பரிந்துரையை தகுதி அடிப்படையில் பரிசீலிப்பேன் என உறுதி அளிக்கிறேன் என்று தெரிவித்தாா்.

    கேரளத்தில் உள்ள கண்ணூா் பல்கலைக்கழக துணைவேந்தராக கோபி நாத் ரவீந்திரனை மறுநியமனம் செய்ய மாநில அரசு பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரைக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் அளித்தாா். இதற்கு எதிரான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 'பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை நியமிக்கவோ, மறு நியமனம் செய்யவோ கவர்னர் மட்டுமே தகுதியுடையவா். ஆனால், ரவீந்திரனின் மறுநியமனத்தில் மாநில அரசின் தலையீடு இருந்தது தெளிவாகத் தெரிகிறது' என்று கூறி, ரவீந்திரனின் மறுநியமனத்தை அண்மையில் ரத்து செய்தது.

    இது தொடா்பாக கவர்னர் ஆரிப்பிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, 'ரவீந்திரனின் மறுநியமன விவகாரத்தில் மாநில அரசின் தலைமை வக்கீலிடம் ஆலோசனை கோரினேன். அப்போது ரவீந்திரனை மறுநியமனம் செய்யலாம் என்று அரசுத் தலைமை வழக்குரைஞா் கூறினாா். அவா் சட்டரீதியாக அளித்த ஆலோசனையைத் தொடா்ந்து, அந்த விவகாரத்தில் மாநில அரசின் அழுத்தத்துக்கு அடி பணிந்தேன். எனினும் நான் செய்தது தவறு என்பதை ஊடகத்தின் முன்பாக ஏற்கெனவே தெரிவித்திருந்தேன்.

    தற்போது மாநிலத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் பதவி நீண்ட காலமாக காலியாக உள்ளது. அதற்கு மாநில அரசே காரணம். உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து பல்கலைக்கழகங்களின் வேந்தராக துணைவேந்தா்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன். துணைவேந்தா்கள் நியமனத்தில் மாநில அரசின் அறிவுரைகளை ஏற்கத் தயாா். ஆனால், அரசின் அழுத்தத்துக்கு அடி பணியமாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தாய்-சேய் நட்பு மருத்துவமனை முயற்சியை செயல்படுத்திய முதல் மாநிலம் கேரளா.
    • வருகிற 31-ந்தேதிக்குள் இந்த பெயர் மாற்றத்தினை முடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் முதல்- மந்திரி மற்றும் மந்திரிகள் இணைந்து சென்று மக்களை சந்திக்கும் நவ கேரள சதஸ் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி மலப்புரம் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் முதல்-மந்திரி பினராய் விஜயன் பங்கேற்று மக்களிடம் குறைகளை கேட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    தாய்-சேய் நட்பு மருத்துவமனை முயற்சியை செயல்படுத்திய முதல் மாநிலம் கேரளா. மற்ற மாநிலங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை காட்டிலும் கூடுதல் சேவைகளை வழங்கி நாட்டிற்கு முன்னோடியாக நமது மாநிலம் திகழ்கிறது.

    சுகாதாரத்துறை முழுவதும் மாநில கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், சமீபத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. வருகிற 31-ந்தேதிக்குள் இந்த பெயர் மாற்றத்தினை முடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. பெயர் மாற்றத்தின் மூலம், சுகாதாரத்துறையில் மாநிலத்தின் சாதனைகளுக்கான பெருமையை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு திருட முயற்சிக்கிறது. இது ஆரோக்கியமான செயல் அல்ல.

    மேலும் கேரளா, கோ-பிராண்டிங்கை மேற்கொள்ளவில்லை என்று கூறி, பல்வேறு மானியங்கள், ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்களில் மத்திய பங்கை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் பயணம் செய்கிறார்கள்.
    • காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி செய்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பினராயி விஜயன் முதல்-மந்திரியாக உள்ளார்.

    இந்நிலையில் இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் நவகேரள சதஸ் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் பயணம் செய்கிறார்கள்.

    இந்த சுற்றுப்பயணத்தின் போது தற்போதைய அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள், செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் உள்ளிட்டவைகளை முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் மக்களுக்கு விளக்கி கூறுகிறார்கள். இதற்காக முதல்-மந்திரி பினராய் விஜயன் மற்றும் மந்திரிகள் செல்வதற்காக ரூ1.5கோடி மதிப்புள்ள நவீன வசதிகள் கொண்ட சொகுசு பேருந்து வாங்கப்பட்டது.

    அந்த பேருந்தில் முதல்-மந்திரி மற்றும் அமைச்சர்கள் கடந்த 18-ந்தேதி தங்களின் பயணத்தை தொடங்கினனர். காசர்கோடு மஞ்சேஸ்வரத்தில் தொடங்கிய இந்த பயணம் டிச்பர் 24-ந்தேதி வரையினால 36 நாட்கள் தொடர்ச்சியாக நடை பெறுகிறது.

    மாநிலத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கும் இந்த பேருந்தில் முதல்-மந்திரி மற்றும் அமைச்சர்கள் செல்கிறார்கள். மாநிலம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், ரூ1கோடிக்கு சொகுசு பேருந்து வாங்கியிருப்பதற்கு காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் முதல்-மந்திரி மற்றும் அமைச்சர்கள் பயணம் செய்த நவ கேரள சதஸ் பேருந்து கல்லி யச்சேரி தொகுதியில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது பழையங்கடி ஏரிபுரம் பகுதியில் நவகேரள சதஸ் பேருந்துக்கு இளைஞர் காங்கிரஸ் கட்சி யினர் கருப்புகொடி காண்பித்து போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி காண்பிக்கும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக முதலி லேயே தகவல் தெரிந்ததால் அங்கு ஏராளமான போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இருந்த போதிலும் போலீஸ் பாது காப்பை மீறி இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இளைஞர் காங்கிர சார் நடத்திய இந்த போராட்டத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் இளைஞர் காங்கிரசார் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த தாக்குதலில் இளைஞர் காங்கிரஸ் நிர்வா கிகள் ஏராளமானோர் காய மடைந்தனர். அவர்கள் அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் கருப்பு கொடி காட்டிய இளைஞர் காங்கிரசார் தாக்கப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது.

    அதில் போராட்டக்காரர் கள் விரட்டி விரட்டி தாக்கப்படும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. கருப்பு கொடி போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    இது பற்றி கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுதாகரன் கூறும் போது, இது சி.பி.எம். கட்சியினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். மக்கள் பிரச்சினைகளை கண்டும் காணாமலும், போராட்டக்காரர்களை அடிக்க குண்டர்களை அனுப்பும் முதல்-அமைச்சர் சொகுசு பஸ்சில் செல்வதை காங்கிரஸ் அனுமதிக்காது என்றார்.

    • திட்டத்தின் நம்பகத் தன்மையை களங்கப்படுத்த முயற்சிக்கின்றனர்
    • கேரளாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேச பாரதிய ஜனதா தயாராக இல்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள கூட்டிக்கல் பகுதியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரால் புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளுக்கான சாவியை பயனாளிகளுக்கு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டார்.

    அவர் பேசும்போது, மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். கேரளாவில் செயல்படுத்தப்பட்டு வரும் லைப் மிஷன் வீட்டுத் திட்டத்தை, மத்திய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி சிலர் இழிவுபடுத்த முயல்கின்றனர். அவர்கள் லைப்மிஷன் திட்டம் குறித்து பொய் பிரசாரம் செய்கின்றனர்.

    மத்திய அரசின் விசாரணை அமைப்புகள், திட்டத்தின் நம்பகத் தன்மையை களங்கப்படுத்த முயற்சிக்கின்றனர். இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்தார். கேரளாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேச பாரதிய ஜனதா தயாராக இல்லை என்றும் அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல்-மந்திரிக்கு போனில் கொலை மிரட்டல் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • போனில் பேசியது எர்ணாகுளத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் என்பது கண்டறியப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில போலீஸ் தலைமை கட்டுப்பாட்டு அறை திருவனந்தபுரத்தில் உள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

    அதில் பேசியவர் முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். களமச்சேரி குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டிருந்த நிலையில், முதல்-மந்திரிக்கு போனில் கொலை மிரட்டல் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    முதல்-மந்திரிக்கு போனில் கொலை மிரட்டல் விடுத்த நபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போனில் பேசியது எர்ணாகுளத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் என்பது கண்டறியப்பட்டது. அந்த சிறுவனிடம் விசாரித்தபோது, விளையாட்டாக போன் செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று அந்த சிறுவனை போலீசார் எச்சரித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அருங்காட்சியகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×