search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலாத்காரம்"

    • இன்ஸ்டாகிராம் மூலமாக துடியலூர் அருகே டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சக்தி தங்கவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவையை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் கோவை பீளமேட்டில் உள்ள தொழில்நுட்ப பூங்காவில் ஐ.டி. ஊழியராக வேலை பார்த்து வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக துடியலூர் அருகே உள்ள பன்னிமடையை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சக்தி தங்கவேல் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று எங்களது காதலை வளர்த்து வந்தோம்.

    கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி என்னை தொடர்பு கொண்ட சக்தி தங்கவேல் தனக்கு காய்ச்சல் அடிப்பதாகவும், உதவி செய்ய வருமாறும் அழைத்தார்.

    இதனையடுத்து நான் அவரது வீட்டிற்கு சென்றேன். அங்கு அவர் தனியாக இருந்தார். இதனை சாதகமாக பயன்படுத்திய சக்தி தங்கவேல் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து என்னை அவர் பலாத்காரம் செய்ததால் நான் 2 மாத கர்ப்பமானேன். இதுகுறித்து நான் அவரிடம் தெரிவி த்தேன். அதற்கு அவர் கருவை கலைத்து விடு என்றார். கருவை கலைக்க வில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

    தற்போது அவர் என்னுடன் பேசுவதையும், பழகுவ தையும் தவிர்த்து விட்டார். எனவே திருமணம் செய்வ தாக ஆசைவார்த்தை கூறி என்னை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய சக்தி தங்கவேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சக்தி தங்கவேலை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • சங்கராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை விசாரணையின்றி தூக்கிலிட வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரத்தில் ஒன்றிய, நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு ஒன்றிய செயலாளர் தலிச்சந்திரன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் சிந்தனைவளவன், ஒன்றிய பொருளாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி பொறுப்பாளர் சிலம்பன், வணிகரணி மாநில செயலாளர் திராவிட சந்திரன் ஆகியோர் பேசினர். மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் பழங்குடியின பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை விசார ணையின்றி தூக்கிலிட கோரியும் இந்த ஆர்ப்பாட் டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • காதலர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியபடி இருந்துள்ளனர்.
    • மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அவரது காதலன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

    கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் அடூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். அந்த மாணவி வாலிபர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். காதலர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியபடி இருந்துள்ளனர்.

    இந்நிலையில் மாணவியை அவளது காதலன் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்திருக்கிறார். இந்நிலையில் தனக்கு பணக்கஷ்டம் இருப்பதாகவும், தனக்கு பணம் கொடுத்து உதவுமாறும் காதலனிடம் மாணவி கேட்டிருக்கிறார். இதையடுத்து அவர், தனது நண்பர்கள் சிலரை சந்திக்குமாறு கூறி கட்டாயப்படுத்தியிருக்கிறார்.

    மாணவியும் காதலன் கட்டாயப்படுத்தியதன் காரணமாக, காதலனின் நண்பர்கள் 5பேரை சென்று சந்தித்திருக்கிறார். அப்போது அவர்கள் மாணவியை வெவ்வேறு இடங்களுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். இதனால் அந்த மாணவி உடலளவில் பாதித்திருக்கிறார்.

    அதனுடனேயே பள்ளிக்கு மாணவி சென்றுவந்தபடி இருந்திருக்கிறார். மாணவி சோர்வாக இருந்ததை நோட்டமிட்ட பள்ளி நிர்வாகம், அதுகுறித்து அவரிடம் விசாரித்துள்ளது. ஆனால் மாணவி பள்ளி நிர்வாகத்திடம் முதலில் எதுவும் தெரிவிக்கவில்லை. பின்பு தனதுகாதலன் மற்றும் அவரது நண்பர்களால் பாலியல் பலாத்காரம் செய்த விவரத்தை தெரிவித்திருக்கிறார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர், அதுகுறித்து சைல்டுலைன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பாதிப்புக்குள்ளான மாணவியிடம் சைல்டுலைன் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அதில் அந்த மாணவி, காதலன் மற்றும் அவரது நண்பர்கள் என 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. ஆகவே அதுபற்றி சைல்டு லைன் தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிந்து விசாரணை நடத்திய போலீசார், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அவரது காதலன் உள்ளிட்ட 6பேரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 6பேரிடமும், மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் காதலை வளர்த்தனர்.
    • 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்தனர்.

    கோவை,

    கோவை சோமனூர் அருகே உள்ள தொட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.

    இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு கருமத்தம்பட்டி பகுதியில் தங்கி இருந்து வேலை செய்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த குல்ஷான் அகமது (வயது 23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வாலிபருடனான காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினார். ஆனால் சிறுமி வாலிபருடனான காதலை தொடர்ந்து வந்தார். மேலும் குல்ஷான் அகமதுவிடம் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கும் தகவலையும் தெரிவித்தார். எனவே 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர்.

    அதன்படி கடந்த 27-ந் தேதி குல்ஷான் அகமது, சிறுமியை கடத்தி சென்றார். பின்னர் அவர் சிறுமியை சாமளாபுரம் அருகே உள்ள வாழைத்ேதாட்டத்துக்கு அழைத்து சென்றார். அங்குள்ள கோவிலில் வைத்து குல்ஷான் அகமது சிறுமியை திருமணம் செய்தார்.

    இதனை தொடர்ந்து அவர் சிறுமியை சென்னை க்கு அழைத்து சென்றார். அங்குள்ள நண்பரின் அறையில் வைத்து குல்ஷான் அகமது சிறுமி யை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    சிறுமியை வாலிபர் கடத்தி சென்றது குறித்து அவரது பெற்றோர் கரும த்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர். பின்னர் போலீசார் குல்ஷான் அகமதுவை தொடர்பு கொண்டு சிறுமி யை அழைத்து வருமாறு கூறினார். இதனையடுத்து அவர் சிறுமியுடன் போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.

    சிறுமியிடம் விசாரணை நடத்திய போது அவரை குல்ஷான் அகமது திருமணம் செய்து பாலியல் பலாத்கா ரம் செய்தது தெரிய வந்தது. இதனை யடுத்து போலீசார் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த குல்ஷான் அகமது மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்ல க்கூடாது என அவர் மாணவியை மிரட்டி விட்டு சென்றார்.
    • பாலியல் பலாத்காரம் செய்த மதன்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    கோவை,

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கரட்டுமேட்டை சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயார் இறந்து விட்டார்.

    சிறுமி தனது தந்தையுடன் வசித்து வருகிறார். தந்தை கட்டிட வேலை செய்து வருகிறார். மாணவியின் வீட்டின் அருகே நரசிபுரம் வெள்ளிமலை பட்டினத்தைச் சேர்ந்த மதன்கு மார் (வயது 20) என்பவர் நண்பர்களுடன் தங்கி இருந்து அங்குள்ள டயர் கடையில் வேலை செய்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கும், வாலி பருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி மதன்குமார் அடிக்கடி மாணவியின் வீட்டிற்கு சென்று வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் மாணவி தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மதன்குமார் மாணவியை கட்டா யப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்ல க்கூடாது என அவர் மாணவியை மிரட்டி விட்டு சென்றார்.

    நடந்த சம்பவத்தை மாணவி தனது உறவுப்பெ ண்ணிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து கோவில்பா ளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் 13 வயது மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த மதன்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் போலீசார் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தனர். 

    • 13 வயது மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
    • போக்சோவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே சாமி நத்தம் பகுதியை சேர்ந்த சிறுமி 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தெருவில் செல்லும்போது ஈஞ்சார் பகுதிைய சேர்ந்த மாரிமுத்து என்பவர் அவரை கேலி, கிண்டல் செய்து தன்னை காதலிக்கும் படி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் சிறுமி மறுத்துள்ளார்.

    சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறி நுழைந்து அவரை செண்பக தோப்பு பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். அந்த சிறுமி இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் சிறுமியின் தாயிடம் பெண் கேட்டு மாரிமுத்து தகராறு செய்தார்.

    ஆனால் சிறுமியின் தாய் அதற்கு மறுப்பு தெரிவித்தார். அப்போது சிறுமியை தான் பலாத்காரம் செய்து விட்டதாகவும், அதனால் தனக்கு திருமணம் செய்து தர ேவண்டும் என்றும், இல்லாவிட்டால் இருவரையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து மகளிடம் நடந்ததை பற்றி தாய் கேட்டு தெரிந்து கொண்டார். உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை தேடி வருகின்றனர்.

    சிவகாசி மீனம்பட்டி பகுதியை சேர்ந்த 3 சிறுவர்களுக்கு அதே பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து ஒரு சிறுவன் தந்தையிடம் கூறினார். அவரது தந்தை உடனடியாக சிவகாசி கிழக்கு போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். போலீசார் அவர் மீது போக்சோவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தேடி வந்தனர்.
    • வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள காளியாபுரத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு வெப்பரை பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர். இது குறித்து சிறுமி தனது காதலனிடம் தெரிவித்தார்.

    கடந்த ஏப்ரல் மாதம் சிறுமி தனது பெற்றோரிடம் வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. சிறுமியை அவரது காதலன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரிய வந்தது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஆனைமலை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

    சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் அவரை கோட்டூர் திருவள்ளுவர் காலனியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினார். அங்கு சிறுமியை வாலிபர் அடைத்து வைத்து கடந்த 2 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்தார். போலீசார் விசா ரணை நடத்தி வாலிபருடன் சிறுமி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். பின்னர் வாலிபரிடம் இருந்து சிறுமி யை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை வாலிபர் ஆசை வார்த்தை கூறி கடந்த 2 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து ஆனை மலை போலீசார் இந்த வழக்கை வால்பாறை அனைத்து மகளிர் போலீ சாரிடம் ஒப்படைத்தனர். வால்பாறை அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாதகாரம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிரித்விகால் அந்த பெண்ணை கைத்தாங்கலாக வெளியில் அழைத்து வந்தார்.
    • தனது கையில் அந்த பெண்ணை சிறிது தூரம் தூக்கியபடி தான் தங்கியிருந்த அறைக்கு சென்றார்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருபவர் பிரித் விகால் (வயது 20) இந்தியாவை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு அங்கு நடந்த ஒரு விருந்தில் பங்கேற்றார்.

    அப்போது இதில் 20 வயது இளம்பெண் ஒருவரும் கலந்து கொண்டார். அவர் நன்றாக மது அருந்தினார். போதை தலைக்கேறியதால் அவரால் சரியாக நடக்க முடியவில்லை. இதை பார்த்த பிரித்விகால் அந்த பெண்ணை கைத்தாங்கலாக வெளியில் அழைத்து வந்தார். பின்னர் தனது கையில் அந்த பெண்ணை சிறிது தூரம் தூக்கியபடி தான் தங்கியிருந்த அறைக்கு சென்றார்.

    அங்கு போதையில் இருந்த பெண்ணை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பிரித் விகால் பாலியல் பலாத்காரம் செய்தார்.

    சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து அந்த பெண் எழுந்தார். அப்போது தான் உடுத்தியிருந்த உடைகள் களைந்து கிடப்பதையும், உடலில் ரத்த காயங்கள் இருந்தது கண்டும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் பிரித் விகாலை கைது செய்தனர்.

    இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று அவர் போதையில் இருந்த இளம்பெண்ணை கையிலும், தோளிலும் தூக்கி சென்ற காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    இது தொடர்பான விசாரணை இங்கிலாந்து கோர்ட்டில் நடந்தது.இந்த வழக்கில் பிரித்விகாலுக்கு 6 ஆண்டு 9 மாதங்கள் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    • இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்தனர்.
    • அருண்குமார், அழகு முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவர் பெண் ஒருவரை காதலித்தார். அவருக்கு திருமண ஆசை காட்டி கொடைக்கானல் அறையில் தங்கியும் மற்றும் பழங்காநத்தம் பகுதியிலும் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மதுரை அனைத்து மகளிர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டன், அவரது தாயார் மல்லிகா (55), மைத்துனர் சிவகுமார் (35) ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

    சிந்தாமணி வ.உ.சி. 2-வது தெரு சேர்ந்தவர் சுரேஷ் (வயது38). அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (25). இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்ேபாது அருண்குமாருடன் சேர்ந்து அவருடைய நண்பர் அழகுமுத்துபாண்டி(21) என்பவரும் ஆபாசமாக பேசி சுரேசை தாக்கி கத்தியால் குத்தி உள்ளனர். இதுகுறித்து கீரைத்துரை போலீசில் சுரேஷ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார், அழகு முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • ரங்கசாமி, சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்.
    • போலீசார் ரங்கசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ரங்கசாமி (வயது 26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

    கடந்த ஆண்டு ரங்கசாமி, சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். பின்னர் அவர் பண்ணாரி அருகே உள்ள கோடயாபாளையத்துக்கு சிறுமியை அழைத்து சென்று திருமணம் செய்தார்.

    கடந்த 10 மாதங்களாக ரங்கசாமி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி கர்ப்பமானார். சிறுமி திடீரென மாயமானதால் அவரது பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்தநிலையில் சிறுமியை ரங்கசாமி கடத்தி சென்று திருமணம் செய்து கோடயாபாளையத்தில் வசித்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 10 மாதங்களாக ரங்கசாமி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிறுமியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கடந்த 10 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ரங்கசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • சிறுமியிடம், விளையாடலாம் என கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
    • இதுகுறித்து சிறுமியின் தந்தை சிறுமுகை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை சிறுமுகை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவரது தாய், தந்தையினர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    சிறுமி தனது தந்தையுடன் வசித்து வருகிறார். தந்தை கூலி வேலைக்கு சென்று விடுவதால் சிறுமி மட்டுமே வீட்டில் தனியாக இருப்பார்.

    இவரது பக்கத்து வீட்டில் மணிகண்டன் (28) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மாணவியிடம் சென்று அடிக்கடி பேசி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை நோட்ட மிட்ட வாலிபர், சிறுமியின் வீட்டிற்கு சென்று,விளையாடலாம் என கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    அங்கு வைத்து மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை வெளியில் கூறினால் கொன்றுவிடுவதாக மிரட்டலும் விடுத்தார். இதனால் மனம் நொந்துபோன சிறுமி நேற்று தனக்கு நடந்த சம்பவங்களை தந்தையிடம் கூறினார்.

    இதைகேட்டு அதிர்ச்சியான அவர் உடனடியாக இதுகுறித்து சிறுமுகை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
    • உத்தண்ணா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம் ராய் சோட்டி, பசவலாவாண்ட்ல பள்ளியை சேர்ந்தவர் உத்தண்ணா (வயது 40).

    இவர் ஏற்கனவே வழக்கு ஒன்றில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த வாரம் வெளியே வந்தார். அங்குள்ள ஒரு வீட்டில் பெற்றோர் வேலைக்கு சென்றதால் 14 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்தார்.

    இதனை அறிந்த உத்தண்ணா அவரது வீட்டிள் நுழைந்தார். சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். இதனை சற்றும் எதிர்பாராத சிறுமி கத்தி கூச்சலிட்டார்.

    சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உத்தண்ணா சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றதை கண்டு ஆத்திரம் அடைந்தனர்.

    பொதுமக்கள் உத்தண்ணாவை மடக்கி பிடிக்க முயன்றனர். அவர்களை தாக்கி விட்டு உத்தண்ணா தப்பி ஓடினார். இருப்பினும் அவரை விரட்டிச் சென்ற பொதுமக்கள் முத்தண்ணா மீது சரமாலியாக கற்களை வீசி தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ராய் சோட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். உத்தண்ணா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×