search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை அருகே வீடு புகுந்து 13 வயது மாணவியை  பலாத்காரம் செய்த வாலிபர் கைது
    X

    கோவை அருகே வீடு புகுந்து 13 வயது மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

    • நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்ல க்கூடாது என அவர் மாணவியை மிரட்டி விட்டு சென்றார்.
    • பாலியல் பலாத்காரம் செய்த மதன்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    கோவை,

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கரட்டுமேட்டை சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயார் இறந்து விட்டார்.

    சிறுமி தனது தந்தையுடன் வசித்து வருகிறார். தந்தை கட்டிட வேலை செய்து வருகிறார். மாணவியின் வீட்டின் அருகே நரசிபுரம் வெள்ளிமலை பட்டினத்தைச் சேர்ந்த மதன்கு மார் (வயது 20) என்பவர் நண்பர்களுடன் தங்கி இருந்து அங்குள்ள டயர் கடையில் வேலை செய்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கும், வாலி பருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி மதன்குமார் அடிக்கடி மாணவியின் வீட்டிற்கு சென்று வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் மாணவி தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மதன்குமார் மாணவியை கட்டா யப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்ல க்கூடாது என அவர் மாணவியை மிரட்டி விட்டு சென்றார்.

    நடந்த சம்பவத்தை மாணவி தனது உறவுப்பெ ண்ணிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து கோவில்பா ளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் 13 வயது மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த மதன்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் போலீசார் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தனர்.

    Next Story
    ×