search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RAPED"

    • திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்து சென்று கர்ப்பமாக்கினார்
    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்

    கோவை, 

    கோவை செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இந்தநிலையில் மாணவிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் அய்யாசாமி (வயது 31) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

    கடந்த ஜனவரி மாதம் அய்யாசாமி மாணவியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அவர் தொடர்ந்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். இதன் காரணமாக மாணவி கர்ப்பமானார். இதுகுறித்து அவர் லாரி டிரைவரிடம் கூறினார்.

    இதனையடுத்து அய்யாசாமி கடந்த மாதம் 30-ந் தேதி மாணவியை திருமணம் செய்து அவரது வீட்டிற்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தி வந்தார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து குழந்தைகள் நல அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அய்யாசாமியின் வீட்டிற்கு சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. மேலும் லாரி டிரைவர் அய்யாசாமி 16 வயது மாணவியை திருமணம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து அவர்கள் செட்டிப்பா ளையம் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 16 வயது மாணவியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய லாரி டிரைவர் அய்யா சாமியை தேடி வருகின்றனர்.

    • 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் காதலை வளர்த்தனர்.
    • 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்தனர்.

    கோவை,

    கோவை சோமனூர் அருகே உள்ள தொட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.

    இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு கருமத்தம்பட்டி பகுதியில் தங்கி இருந்து வேலை செய்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த குல்ஷான் அகமது (வயது 23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வாலிபருடனான காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினார். ஆனால் சிறுமி வாலிபருடனான காதலை தொடர்ந்து வந்தார். மேலும் குல்ஷான் அகமதுவிடம் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கும் தகவலையும் தெரிவித்தார். எனவே 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர்.

    அதன்படி கடந்த 27-ந் தேதி குல்ஷான் அகமது, சிறுமியை கடத்தி சென்றார். பின்னர் அவர் சிறுமியை சாமளாபுரம் அருகே உள்ள வாழைத்ேதாட்டத்துக்கு அழைத்து சென்றார். அங்குள்ள கோவிலில் வைத்து குல்ஷான் அகமது சிறுமியை திருமணம் செய்தார்.

    இதனை தொடர்ந்து அவர் சிறுமியை சென்னை க்கு அழைத்து சென்றார். அங்குள்ள நண்பரின் அறையில் வைத்து குல்ஷான் அகமது சிறுமி யை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    சிறுமியை வாலிபர் கடத்தி சென்றது குறித்து அவரது பெற்றோர் கரும த்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர். பின்னர் போலீசார் குல்ஷான் அகமதுவை தொடர்பு கொண்டு சிறுமி யை அழைத்து வருமாறு கூறினார். இதனையடுத்து அவர் சிறுமியுடன் போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.

    சிறுமியிடம் விசாரணை நடத்திய போது அவரை குல்ஷான் அகமது திருமணம் செய்து பாலியல் பலாத்கா ரம் செய்தது தெரிய வந்தது. இதனை யடுத்து போலீசார் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த குல்ஷான் அகமது மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்ல க்கூடாது என அவர் மாணவியை மிரட்டி விட்டு சென்றார்.
    • பாலியல் பலாத்காரம் செய்த மதன்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    கோவை,

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கரட்டுமேட்டை சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயார் இறந்து விட்டார்.

    சிறுமி தனது தந்தையுடன் வசித்து வருகிறார். தந்தை கட்டிட வேலை செய்து வருகிறார். மாணவியின் வீட்டின் அருகே நரசிபுரம் வெள்ளிமலை பட்டினத்தைச் சேர்ந்த மதன்கு மார் (வயது 20) என்பவர் நண்பர்களுடன் தங்கி இருந்து அங்குள்ள டயர் கடையில் வேலை செய்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கும், வாலி பருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி மதன்குமார் அடிக்கடி மாணவியின் வீட்டிற்கு சென்று வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் மாணவி தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மதன்குமார் மாணவியை கட்டா யப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்ல க்கூடாது என அவர் மாணவியை மிரட்டி விட்டு சென்றார்.

    நடந்த சம்பவத்தை மாணவி தனது உறவுப்பெ ண்ணிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து கோவில்பா ளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் 13 வயது மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த மதன்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் போலீசார் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தனர். 

    • ரங்கசாமி, சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்.
    • போலீசார் ரங்கசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ரங்கசாமி (வயது 26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

    கடந்த ஆண்டு ரங்கசாமி, சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். பின்னர் அவர் பண்ணாரி அருகே உள்ள கோடயாபாளையத்துக்கு சிறுமியை அழைத்து சென்று திருமணம் செய்தார்.

    கடந்த 10 மாதங்களாக ரங்கசாமி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி கர்ப்பமானார். சிறுமி திடீரென மாயமானதால் அவரது பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்தநிலையில் சிறுமியை ரங்கசாமி கடத்தி சென்று திருமணம் செய்து கோடயாபாளையத்தில் வசித்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 10 மாதங்களாக ரங்கசாமி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிறுமியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கடந்த 10 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ரங்கசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • சிறுமியிடம், விளையாடலாம் என கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
    • இதுகுறித்து சிறுமியின் தந்தை சிறுமுகை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை சிறுமுகை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவரது தாய், தந்தையினர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    சிறுமி தனது தந்தையுடன் வசித்து வருகிறார். தந்தை கூலி வேலைக்கு சென்று விடுவதால் சிறுமி மட்டுமே வீட்டில் தனியாக இருப்பார்.

    இவரது பக்கத்து வீட்டில் மணிகண்டன் (28) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மாணவியிடம் சென்று அடிக்கடி பேசி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை நோட்ட மிட்ட வாலிபர், சிறுமியின் வீட்டிற்கு சென்று,விளையாடலாம் என கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    அங்கு வைத்து மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை வெளியில் கூறினால் கொன்றுவிடுவதாக மிரட்டலும் விடுத்தார். இதனால் மனம் நொந்துபோன சிறுமி நேற்று தனக்கு நடந்த சம்பவங்களை தந்தையிடம் கூறினார்.

    இதைகேட்டு அதிர்ச்சியான அவர் உடனடியாக இதுகுறித்து சிறுமுகை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
    • குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் தைக்கூடம் விட்டிலாவை சேர்ந்தவர் கார்த்திக்(19).

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா மண்ணாடிமங்கலம் பகுதியில் வசித்து வந்த இவர், அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொ டுமை செய்தார்.

    சமயநல்லூர் மகளிர் ேபாலீசார் கார்த்திக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்த கார்த்திக் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், கலெக்டருக்கு சிபாரிசு செய்தார்.

    அதன்பேரில் கலெக்டர் அனீஷ்சேகர் கார்த்திக்கை குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்க உத்தர விட்டார்.

    இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • காட்டு பகுதியில் வைத்து அவர் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
    • வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    கோவை,

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி.

    இவர் 10-ம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். தந்தை இறந்து விட்டதால் சிறுமி தனது தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார்.

    சிறுமியின் வீட்டு அருகே தாஸ் என்ற கவுதம் (வயது 30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி விட்டது

    சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த தாஸ், சிறுமியிடம் பேச வேண்டும் என கூறி, அருகே உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்றார்.

    அங்கு வைத்து அவர் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் நடந்ததை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டி விட்டு தாஸ் அங்கு இருந்து சென்றார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

    இதையடுத்து அவரது தாய் சிறுமியை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அவரது தாய் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் சிறுமியை காட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டாக்டர்கள் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டு பிடித்தனர்.
    • தலைமறைவாக உள்ள சுசீந்திரனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் கூலி வேலை செய்து வருகிறார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மாணவி வீட்டில் இருந்து வருகிறார்.

    கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மாணவி அந்த பகுதியில் உள்ள பைப்பில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்றார்.

    அப்போது சிறுமிக்கு ஏ.பி.எஸ். காலனியை சேர்ந்த கூலித் தொழிலாளி சுசீந்திரன் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். அப்போது சுசீந்திரன் மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறினார்.

    பின்னர் அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து அவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தனிமையான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

    இதனால் கடந்த சில நாட்களாக மாணவி வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். அப்போது மாணவியை அவரது தாய் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டு பிடித்தனர்.

    அவர்கள் இது குறித்து மாணவியின் தாயிடம் தெரிவித்தனர். அவர் தனது மகளிடம் விசாரித்தார்.

    அப்போது சுசீந்திரன் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.

    இதனை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் 9-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த சுசீந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • திருமணம் செய்வதாக கூறி 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ரவுடி கைது செய்யப்பட்டார்.
    • சிறுமி வேலைக்கு செல்லும்போது பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்துவிட்டு அதே பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சிறுமி பின்னர் வீடு திரும்ப வில்லை. இதனால் பதட்டம் அடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் ஆனால் கண்டுபிடிக்க முடிய வில்லை.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

    அதில் தங்களது மகளை வாலிபர் ஒருவர் கடத்திச் சென்று இருப்பதாக தெரிவித்திருந்தனர். சிறுமி கடத்தல் விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் வடக்கு துணை கமிஷனர் (பொறுப்பு) ஆறுமுகசாமி மேற்பார்வையில் அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனை பேரில் மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் சிறுமியின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தி னர். மேலும் வீட்டில் இருந்த அவரது செல்போனும் ஆய்வு செய்யப்பட்டது.அப்போது மாயமான சிறுமி கருப்பாயூரணியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அடிக்கடி பேசி இருப்பது தெரியவந்தது.

    அந்த செல்போன் சிக்னல் கருப்பாயூரணி பகுதியை காட்டியது. இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் சிறுமி வாலிபருடன் தங்கி இருப்பது தெரியவந்தது. போலீசார் சிறுமியை மீட்டு வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் கருப்பாயூரணியைச் சேர்ந்த கரண் (வயது 25) எனவும், இவர் மீது மாட்டுத்தாவணி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மாட்டுத்தாவணி பகுதியில் ரவுடியாக வலம் வந்த கரண் சிறுமி வேலைக்கு செல்லும்போது பின் தொடர்ந்து சென்றுள்ளார். நாளடைவில் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

    இதனை சிறுமியின் பெற்றோர் கண்டித்து உள்ளனர். ஆனால் அதனை அவர் கண்டு கொள்ளாமல் குற்ற வழக்குகள் உள்ள கரனை காதலித்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று கரண் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி வீட்டை விட்டு வெளியேறி கரனுடன் சென்றுள்ளார். வெளியூர் சென்ற இருவரும் அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து உள்ளனர். அப்போது சிறுமியை கரண் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கரணை மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்தனர்.

    • தாயின் கை, கால்களை கட்டி போட்டுவிட்டு கொள்ளையர்கள் சிறுமியை பலாத்காரம் செய்தனர்.
    • நகைகளையும் பறித்துச் சென்ற கொள்ளையன்

    திருச்சி:

    திருச்சி கே.கே. நகர் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் அம்சா பேகம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது 17 வயது மகளுடன் அப்பகுதியில் தனியாக வசித்து வந்தார். வழக்கம்போல் நேற்று இரவு தாயும் மகளும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினர். அம்சா பேகம் தனி அறையிலும் அதன் அருகாமையில் உள்ள இன்னொரு அறையில் மகளும் உறங்கிக் கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் அதிகாலை 3.30 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் அம்சா பேகத்தின் வீட்டு கேட் கதவு பூட்டினை உடைத்தார். பின்னர் அவர் வீட்டின் முன்பக்க கதவு தாழ்ப் பாளை இரும்பு ராடால் நெம்பி உள்ளே புகுந்தான்.

    கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டு அம்சா பேகம் திடுக்கிட்டு எழுந்தார். உடனே கொள்ளையன் அந்தப் பெண்மணியின் வாயில் துணியை நுழைத்து அமுக்கிக் கொண்டு கை கால்களை கட்டி போட்டுவிட்டு அவர் அணிந்திருந்த ஒன்றே கால் பவுன் நகைகளை பறித்துக் கொண்டான்.

    அதன் பின்னர் அருகில் உள்ள அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த அவரது 17 வயது மகளின் கை, கால்களையும் கட்டி போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அப்போது அந்த சிறுமி கதறி அழுதார். உடனே சத்தம் போட்டால் உன் தாயை கொன்று விடுவேன் என மிரட்டி விட்டு தப்பி சென்றுள்ளான். கை கால்களை கட்டி போட்டு நகையை கொள்ளை அடித்து அவரது மகளை பலாத்காரம் செய்த மர்ம நபர் குறித்த விபரம் எதுவும் கிடைக்கவில்லை. அந்தக் கொள்ளையன் முகத்தை கர்சிப்பால் மறைத்து கட்டி இருந்ததாக அம்சா பேகம் தெரிவித்தார்.

    இது பற்றி அம்சா பேகம் கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.

    ×