search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருமத்தம்பட்டி அருகே சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வட மாநில வாலிபர்
    X

    கருமத்தம்பட்டி அருகே சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வட மாநில வாலிபர்

    • 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் காதலை வளர்த்தனர்.
    • 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்தனர்.

    கோவை,

    கோவை சோமனூர் அருகே உள்ள தொட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.

    இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு கருமத்தம்பட்டி பகுதியில் தங்கி இருந்து வேலை செய்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த குல்ஷான் அகமது (வயது 23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வாலிபருடனான காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினார். ஆனால் சிறுமி வாலிபருடனான காதலை தொடர்ந்து வந்தார். மேலும் குல்ஷான் அகமதுவிடம் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கும் தகவலையும் தெரிவித்தார். எனவே 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர்.

    அதன்படி கடந்த 27-ந் தேதி குல்ஷான் அகமது, சிறுமியை கடத்தி சென்றார். பின்னர் அவர் சிறுமியை சாமளாபுரம் அருகே உள்ள வாழைத்ேதாட்டத்துக்கு அழைத்து சென்றார். அங்குள்ள கோவிலில் வைத்து குல்ஷான் அகமது சிறுமியை திருமணம் செய்தார்.

    இதனை தொடர்ந்து அவர் சிறுமியை சென்னை க்கு அழைத்து சென்றார். அங்குள்ள நண்பரின் அறையில் வைத்து குல்ஷான் அகமது சிறுமி யை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    சிறுமியை வாலிபர் கடத்தி சென்றது குறித்து அவரது பெற்றோர் கரும த்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர். பின்னர் போலீசார் குல்ஷான் அகமதுவை தொடர்பு கொண்டு சிறுமி யை அழைத்து வருமாறு கூறினார். இதனையடுத்து அவர் சிறுமியுடன் போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.

    சிறுமியிடம் விசாரணை நடத்திய போது அவரை குல்ஷான் அகமது திருமணம் செய்து பாலியல் பலாத்கா ரம் செய்தது தெரிய வந்தது. இதனை யடுத்து போலீசார் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த குல்ஷான் அகமது மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×