search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாமக்கல் செய்திகள்"

    கன்டெய்னர் லாரிக்குள் சிக்கிய காரை மீட்பு வாகனம் மூலம் வெளியே எடுத்தனர்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே சேலம்-கோவை புறவழிச்சாலையில் தியேட்டர் பின்புறம் டீச்சர்ஸ் காலனி பகுதியில் பவானி செல்லும் வாகனங்கள் வளைவில் திரும்பி செல்வது வழக்கம். நேற்று மாலை ஒரு கன்டெய்னர் லாரி  இந்த பகுதியில் வளைந்து பவானி செல்ல திரும்பியது. 

    அப்போது சேலம் பக்கமிருந்து வந்த கார்  லாரியின் கீழ் பகுதிக்குள் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் இல்லை. இதனால் அந்த பாதையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் 45 நிமிடத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.  

    இது குறித்து குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்து நேரில் சென்றனர். மீட்பு வாகனம் மூலம் காரை வெளியில் எடுத்து, போக்குவரத்தை சீர் செய்தனர்.
    பரமத்திவேலூர் பகுதியில் கல் குவாரிகளை ஆய்வு செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள நல்லூர், குன்னமலை, மணியனூர் உள்ளிட்ட பல்வேறு  ஊராட்சி பகுதிகளில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. 

    இந்த கல் குவாரிகளில் இருந்து அரளைக்கல், சம்பட்டி கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. அதேபோல் கிரைனைட் கற்களும் வெட்டி எடுக்கப்படுகின்றன. இந்த கற்களை பல்வேறு வெளி மாவட்டங்களுக்கும் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு பல்வேறு ரகமான கிரானைட் கற்கள் தயார் செய்யப்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
     
    இந்நிலையில் அப்பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் அரசு அனுமதிக்கப்பட்டுள்ள ஆழத்திற்கு அதிகமாக பல கல்குவாரிகள் செயல்படுவதாகவும், மேலும் அனுமதி பெறாமலும் கல்குவாரிகள் செயல்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

    இப்பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து கல்குவாரி களையும் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட குழுவினர்  ஆய்வு செய்து கல்குவாரி யின் நீளம், அகலம், ஆழம் போன்றவற்றை சோதனை செய்ய வேண்டும்.  இந்த கல் குவாரிகளில் திடீர் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     
    பாதுகாப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளதால் என்பதையும் பரிசோதனை செய்ய வேண்டும் .கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் கல்குவாரியில் இதுபோன்று கற்களை வெட்டி எடுத்துக் கொண்டு வரும்போது பாறைகள் சரிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரமத்திவேலூர் தாலுகா பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பரமத்தி அருகே பாம்பு கடித்து வட மாநிலத் தொழிலாளி உள்பட 2 பேர் பலியானார்கள்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கூத்தம்பூண்டியைச் சேர்ந்தவர் பொன்னர்.இவரது விவசாய தோட்டத்தில் சத்தீஸ்கர் மாநிலம்,கொண்டேகாவ் மாவட்டம், கிரோலா பகுதியை சேர்ந்த பஜாருகொர்ரம் என்பவரது மகன் சன்னத்ராம்(20)  கூலி வேலை பார்த்து வந்தார். 

    கடந்த 20-ந் தேதி இரவு சன்னத்ராமை பாம்பு கடித்தது. சேலம் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி    உயிரிழந்தார். இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    பரமத்தி வேலூரை அடுத்த ‌‌எஸ்.வாழவந்தி அருகே உள்ள கே.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் காளிமுத்து.‌இவரது மனைவி பாப்பாத்தி (70). இவரை கடந்த 22-ந் தேதி  பாம்பு கடித்தது.

    சேலம் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரமத்திவேலூர் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
     
    அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர், அரசாயி அம்மன், மாசாணி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். 

    பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவிலில் உள்ள ஈஸ்வரன், வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில், ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கு வைகாசி மாத  பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    இதில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல், பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த எல்லை யம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரருக்கு வைகாசி மாத பிரதோஷத்தினை முன்னிட்டு பல வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு உலக மக்கள் நலம் வேண்டி அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்திக்காக ஏகாம்பரநாதருக்கு தொடர்ச்சியாக நீரினால் அபிஷேகம் செய்யப்பட்டது.
     
    அதனுடன் சிறப்பு அலங்காரத்துடன், நந்திபெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.   இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    குமாரபாளையம் அருகே டிரைவரை பாட்டிலால் குத்திய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் கொத்துக்காரன்காடு பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது38). டிரைவர்.  அதே பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்(46),சுமை தூக்கும் தொழிலாளி. இருவரும் நண்பர்கள். 

    சம்பவத்தன்று  அவர்கள் தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பாரின் வெளியில் மது குடித்தனர். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

    இதில் ஆத்திரமடைந்த மாதேஸ், தனசேகரன் தலையில் மது பாட்டிலால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

    இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதேஷை கைது செய்தனர்.

    கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு திருச்சி வாழை ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலதுறை சார்பில் வருகிற 6,7,8 ஆகிய தேதிகளில்  திருச்சி வாழை ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

    மேலும் வேளாண்மை சார்ந்த இடங்களுக்கு கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை மூலம் அழைத்து செல்ல உள்ளனர். விருப்பம் உள்ள விவசாயிகள்   உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம். இதில் இருக்கூர், பிலிக்கல்பாளையம், அ.குன்னத்தூர் ஊராட்சிப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    எனவே கபிலர்மலை வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை உதவி இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.
    அ.குன்னத்தூர் மகாமாரியம்மன் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் அ.குன்னத்தூரில் எட்டு பட்டி கிராமத்துக்கு சொந்தமான மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆனதால் மகா மாரியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற   உள்ளது. 

    அதன் காரணமாக கோவில் திருப்பணிகள் நடைபெற உள்ளதால் சாமி சிலைகளுக்கு பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாலாலத்திற்காக கோவில் வளாகத்தில் அக்னி குண்டம் அமைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

     இதில் புரோகிதர்கள் கலந்துகொண்டு ஹோமம் செய்து யாகம் வளர்த்தனர். பின்னர் சிறப்பு பூஜையுடன் அம்மன் உட்பட சாமிகள் பாலாலயம் செய்யப்பட்டு சாமி சிலைகளையும் எடுத்து அருகாமையில் உள்ள ஒரு இடத்தில் வைக்கப்பட்டது. 

    இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் யாகம் மற்றும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பரமத்தி மற்றும் கபிலர்மலை வட்டார உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு மண் மாதிரி சேகரித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பரமத்தி மற்றும் கபிலர்மலை வட்டார உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு கட்ட முறையில் மண் மாதிரி சேகரித்தல் பற்றிய பயிற்சி நடந்தது. பயிற்சியினை நாமக்கல் வேளாண்மை உதவி இயக்குனர்( தரக்கட்டுப்பாடு)செல்வி தொடங்கி வைத்தார். 

    பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் சவுந்தராஜன் ஆகியோர் மண்மாதிரிகள் சேகரிக்கும் முறைகள், கிராம வரைபடங்களில் கட்ட முறை அளவீடு செய்தல் ஆய்வு செய்தல் பற்றி எடுத்துக் கூறினர். 

    இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை பரமத்தி வட்டார வேளாண்மை அலுவலர் பாபு மற்றும் உதவி அலுவலர்கள் நாகராஜ், பூபதி, ரகுபதி, கவுசல்யா மற்றும் பிரபு ஆகியோர் செய்து இருந்தனர்.

    பரமத்திவேலூர் வேளாண் விற்பனை கூடத்தில் ரூ.41.67 லட்சத்துக்கு பொருட்கள் விற்பனை ஆனது.
    பரமத்தி வேலூர்:

    பரமத்திவேலூர் அருகே சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டுவருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. 

    இதில் அருகில் உள்ள கரூர் ஒன்றியம்,  பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணை நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 41.43½குவிண்டால் எடை கொண்ட 11ஆயிரத்து 755 தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.24.05-க்கும், குறைந்த விலையாக ரூ.17.15-க்கும், சராசரி விலையாக ரூ.23.15-க்கும் என்று ரூ 86ஆயிரத்து 915-க்கு விற்பனை ஆனது.

    அதேபோல் 134.90½ குவிண்டால் எடை கொண்ட 297மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.83.89-க்கும், குறைந்த விலையாக ரூ.82.10-க்கும், சராசரி விலையாக ரூ.83.60-க்கும் மற்றும் 2-ம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.82.20-க்கும், குறைந்த விலையாக ரூ.71.19-க்கும், சராசரி விலையாக ரூ.80.10க்கும் என்று ரூ.10லட்சத்து 93ஆயிரத்து 159க்கு விற்பனை ஆனது.

    254.10½ குவிண்டால் எடை கொண்ட 254மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.114.18-க்கும், குறைந்த விலையாக ரூ.92.88-க்கும், சராசரி விலையாக ரூ.105.61க்கும் மற்றும் சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.112.79-க்கும், குறைந்த விலையாக ரூ.90.11-க்கும், சராசரி விலையாக ரூ.103.61-க்கும் என ரூ.26 லட்சத்து 3ஆயிரத்து 268க்கும், அதேபோல 56.21 ½ குவிண்டால் எடை கொண்ட 168மூட்டைநிலக்கடலை  விற்பனைக்கு வந்தது. 

    நிலக்கடலை காய் அதிக விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ 71.30-க்கும், குறைந்த விலையாக ரூ 60.16- க்கும் சராசரி விலையாக 70.10-க்கும் என ரூ10லட்சத்து 43 ஆயிரத்து 946-க்கு ஏலம் போனது. தேங்காய், தேங்காய் பருப்பு,எள், நிலக்கடலை காய் ஆகியவை அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்மொத்தமாக ரூ.41லட்சத்து 67ஆயிரத்து 141க்கு விற்பனை ஆனது.



    குமாரபாளையத்தில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, குமாரபாளையம் செந்தூர் பவுண்டேசன் ஆகியவை  சார்பில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கான இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் வேதாந்தபுரம் சித்தி விநாயகர் கோயில் மண்டபத்தில் செந்தூர் பவுண்டேசன் இயக்குனர் கலாவதி தலைமையில் நடந்தது. 

    இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி மற்றும் செயலர் விஜய்கார்த்திக், மாவட்ட உரிமையியல் நீதிபதி சக்திவேல் பங்கேற்று இலவச சட்ட விழிப்புணர்வு குறித்து பேசினர். பெண்களுக்கான சட்டம் சார்ந்த கேள்விகளுக்கும் பதில்கள் கூறினார்கள். 

    இதில் விபத்தை தவிர்போம் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் சாலைகளில் விபத்து இல்லாமல் நாம் எப்படி பயணம் செல்லலாம் எனும் தலைப்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுய  உதவிக்குழுவினருக்கும், பொதுமக்களுக்கும் பரிசும் சான்றிதழ்கள்  வழங்கப்பட்டன. இதில் இணை செயலர் மணிகண்டன், விபத்தை தவிர்போம் விழிப்புணர்வு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பூபதிராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    குமாரபாளையம் அருகே ஆதரவற்றோர் மையத்தில் சமூக நலத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் எதிர்மேடு அன்னை ஆதரவற்றோர் மையத்தில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி கீதா ஆய்வு செய்தார். 

    ஆய்வின்போது மையத்தில் எத்தனை ஆதரவற்றவர்கள் உள்ளனர்? அவர்களுக்கு முறையாக உணவு 3 வேலையும் வழங்க–படுகிறதா? மையம் நடத்த தேவையான ஆவணங்கள் தயார் நிலையில் உள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது ஆதரவற்றோர் மைய நிர்வாகி ஹேமமாலினி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
    குமாரபாளையம் அருகே ஆதரவற்றோர் மையத்தில் சமூக நலத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் எதிர்மேடு அன்னை ஆதரவற்றோர் மையத்தில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி கீதா ஆய்வு செய்தார். 

    ஆய்வின்போது மையத்தில் எத்தனை ஆதரவற்றவர்கள் உள்ளனர்? அவர்களுக்கு முறையாக உணவு 3 வேலையும் வழங்க–படுகிறதா? மையம் நடத்த தேவையான ஆவணங்கள் தயார் நிலையில் உள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது ஆதரவற்றோர் மைய நிர்வாகி ஹேமமாலினி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
    ×