search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bottle punching"

    குமாரபாளையம் அருகே டிரைவரை பாட்டிலால் குத்திய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் கொத்துக்காரன்காடு பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது38). டிரைவர்.  அதே பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்(46),சுமை தூக்கும் தொழிலாளி. இருவரும் நண்பர்கள். 

    சம்பவத்தன்று  அவர்கள் தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பாரின் வெளியில் மது குடித்தனர். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

    இதில் ஆத்திரமடைந்த மாதேஸ், தனசேகரன் தலையில் மது பாட்டிலால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

    இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதேஷை கைது செய்தனர்.

    ×