search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்கோவிலில்"

    • மின்வாரியத்தில் பாதை ஆய்வாளராக பணி புரிந்து வந்தார்.
    • நேற்று திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் சரக்கல் விளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் வசித்து வருபவர் முத்துப் பாண்டி (வயது 51).

    இவர் மின்வாரியத்தில் பாதை ஆய்வாளராக பணி புரிந்து வந்தார். அவருக்கு நேற்று திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசேதித்த டாக்டர்கள் அவர் ஏற்க னவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதையடுத்து அவரது மனைவி செல்வ குமாரி கோட்டார் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து முத்துப்பாண்டி உடலை பிரேத பரிசோ தனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • டிரைவர் மீது வழக்கு
    • நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் பகுதியில் உள்ள லாட்ஜில் வேலை பார்த்து வந்தார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் வாத்தி யார்விளை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 52). இவர் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் பகுதியில் உள்ள லாட்ஜில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று வேலைக்கு வந்த சதீஷ்குமார் அந்த பகுதியில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று சதீஷ்குமார் மீது மோதியது. இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் படுகாயத்துடன் கிடந்த சதீஷ்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலன் இன்றி சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான சதீஷ்குமாரின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.

    இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

    • 5 பேர் கொண்ட கும்பல் கிப்சன் மற்றும் அவரது நண்பர்களை வழிமறித்து தாக்கினார்கள்.
    • காயமடைந்தவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே முதலார் பகுதியை சேர்ந்தவர் கிப்சன் (வயது 19). இவர் நாகர்கோவில் கோணம் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த 16-ந்தேதி கிப்சன் கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கிப்சன் மற்றும் அவரது நண்பர்களை வழிமறித்து தாக்கினார்கள். இதில் கிப்சன் பலத்த காயமடைந்தார். காயமடைந்தவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து நேசமணிநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து கிப்சன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து நேசமணிநகர் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. கிப்சனை தாக்கியவர்கள் குறித்த கும்பல் அடையாளம் தெரிந்த நிலையில் போலீ சார் 3 பேரை பிடித்துள்ளனர். பிடிபட்ட 3 பேரிடம் விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது. கிப்சனை எதற்காக தாக்கினார்கள் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
    • குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க . சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கன்னியாகுமரி:

    குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க . சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. குமரி மாவட்டத்தில் சானல் தூர் வாரப்படாததால் கடைமடை வரை தண்ணீர் செல்லாமல் இருப்பதை கண்டித்தும், மின்சார கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்தும், தடிக்காரன் கோணத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கடை கட்டுவதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    குளம் தூர்வாருதலில் முறைகேடு, சாலை பணிகளில் முறைகேடு உள்ளிட்டவற்றுக்கும் ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் சானல்கள் தூர்வாரப்ப டாமல் உள்ளதால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. இதனால் நெல் பயிர்கள் கருகும் நிலையில் இருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் 40 அல்லது 40 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் தான் ராதாபுரம் தாலுகாவுக்கு தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் தற்போது 38 அடி தான் தண்ணீர் உள்ளது. எனினும் ராதாபுரம் தாலுகாவுக்கு தண்ணீர் திறந்து இருக்கிறார்கள். இதனால் குமரி மாவட்ட மக்கள் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் சாலைகள் அமைப்பதற்கு 18 சதவீதம் கமிஷன் கேட்பதாக கான்ட்ராக்டர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இப்படி கேட்கும் போது எப்படி தரமான சாலைகள் அமைக்க முடியும்.

    தி.மு.க ஆட்சி ஊழல் ஆட்சியாக உள்ளது. இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தெற்கு பகுதி செயலாளர் முருகேஸ்வரன் வர வேற்றார். அமைப்புச் செயலாளர் கே.டி.பச்சைமால், மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாணவரணி செயலாளர் மனோகரன், மேற்கு மாவட்ட அவைத் தலைவர் சிவகுற்றாலம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கிருஷ்ண தாஸ், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சிவ செல்வராஜன், வக்கீல் பிரிவு துணை செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியண்ட் தாஸ், சக்கீர் உசேன், குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ், குளச்சல் சட்டமன்ற தொகுதி முன்னாள் செயலாளர் ஆறுமுகராஜா, மாவட்ட மாணவரணி முன்னாள் செயலாளர் ரவிந்திரவர்சன், தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜாராம், ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட இணைச்செயலாளர் சாந்தினி பகவதியப்பன், துணைச் செயலாளர் பார்வதி, மாவட்ட பொருளாளர் திலக், பகுதி செயலாளர்கள் ஜெய கோபால், ஜெவின் விசு, ஒன்றிய செயலாளர்கள் ஜெசீம், ஜீன்ஸ், ஜெயசுதர்சன், பொன் சுந்தரநாத், முன்னாள் நகரச் செயலாளர் சந்துரு, மாநகராட்சி கவுன்சிலர்கள் அக் ஷயா கண்ணன், கோபாலசுப்பிரமணியன், சேகர், அனிதா சுகுமாரன், பொதுக்குழு உறுப்பினர் சகாயராஜ் மற்றும் நிர்வாகிகள் ரபீக், வெங்கடேசன், ரெயிலடி மாதவன், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கவுன்சிலர் ஸ்ரீலிஜா நன்றி கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை களை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • சர்வதேச யோகா தினத்தையொட்டி நடந்தது.
    • கோட்டாறு டி.வி.டி பள்ளி வளாகத்தில் நடந்த யோகா பயிற்சியில் பெண்கள், ஆண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும், நாகர்கோவில் மாநகர பகுதியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோட்டாறு டி.வி.டி பள்ளி வளாகத்தில் நடந்த யோகா பயிற்சியில் பெண்கள், ஆண்கள் என பலரும் கலந்து கொண்டனர். மூச்சுப் பயிற்சி, பத்மாசனம் உள்ளிட்ட பல்வேறு யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. நெசவாளர் காலனி சமுதாய நலக்கூடம், தம்பத்து கோணம் பகுதியிலும் யோகா நிகழ்ச்சி இன்று நடந்தது.

    நாகர்கோவில் நகரப் பகுதியில் உள்ள பள்ளிக் கூடங்களிலும் இன்று மாணவ-மாணவிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்த யோகா பயிற்சியில் மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜேஷ் கலந்து கொண்டார். விளையாட்டு வீரர்கள்-வீராங்கனைகள், பொதுமக்கள் யோகா பயிற்சியில் பங்கேற்றனர்.

    நாகர்கோவில் கோர்ட்டு வளாகத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி அருள் முருகன், கூடுதல் மாவட்ட நீதிபதி ஜோசப் ஜாய் மற்றும் நீதிபதிகள், கோர்ட்டு ஊழியர்கள் கலந்து கொண்டனர். நாகர்கோவில் கோணம் கேந்திர வித்யாலயா பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்வேல் தலைமையில் மாணவ-மாணவிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இதுபோல் தோவாளை, அகஸ்தீஸ்வரம், ராஜாக்க மங்கலம், குளச்சல், தக்கலை, திருவட்டார், மேல்புறம், குழித்துறை, முன்சிறை, கிள்ளியூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் யோகா பயிற்சி இன்று நடந்தது. மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளிலும் மாணவ- மாணவிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

    • தலைமறைவாகியுள்ள வாலிபரை பிடிக்க தனிப்படை தீவிரம்
    • குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட் டங்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் வேதநகர் மேல புது தெருவை சேர்ந்தவர் முகமது உமர் ஷாகிப் (வயது 55). வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த ஆண்டு ஊருக்கு வந்த இவர் தற்பொழுது இங்கேயே வசித்து வருகிறார். இவரது மனைவி ஜாஸ்மின். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சம்பவத்தன்று ஜாஸ்மின் மற்றும் அவரது மகள், மாமியார் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தனர்.

    வீட்டில் முகமது உமர் ஷாகிப் மட்டும் இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த கும்பல் முகமது உமர் ஷாகிப்பை துப்பாக்கி காட்டி மிரட்டி வீட்டில் இருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து முகமது உமர் ஷாகிப் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    கொள்ளையர்கள் பயன் படுத்திய காரை போலீசார் கைப்பற்றி னார்கள். கொள்ளை வழக்கு தொடர்பாக கோவில் பட்டியை சேர்ந்த சார்லஸ், இடலாக்குடியை சேர்ந்த அமீர், கோட்டாரை சேர்ந்த ரஹீம், அழகியபாண்டிய புரத்தை சேர்ந்த கவுரி, இருளப்பபுரத்தை சேர்ந்த சாஹிப் முகைதீன், மைதீன் புகாரி, மேலச்ச ரக்கல்விளையை சேர்ந்த தர்வீஸ் மீரான் ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இதில் அமீர், ரஹீம், கவுரி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 10 பவுன் நகை மீட்கப்பட்டது. தலை மறைவாகி இருந்த 4 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைக் கப்பட்டது. தனிப் படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட னர். குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட் டங்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கேரளாவில் கொள்ளை யர்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்ப டையில் போலீசார் அங்கு சென்று தேடினார்கள். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய இருளப்பபுரத்தை சேர்ந்த ஷேக் முகைதீன், மைதீன் புகாரி, மேலச்சரக்கல்வி ளையை சேர்ந்த தர்வீஷ் மீரான் ஆகிய 3 பேரும் நாகர்கோவில் ஜே.எம். 2 கோர்ட்டில் சரணடைந்தனர். இவர்களை நீதிபதியை 15 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தர விட்டார்.

    இதையடுத்து 3 பேரும் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள கோவில்பட்டியை சேர்ந்த சார்லசை போலீசார் தேடி வருகிறார்கள். கோர்ட் டில் சரணடைந்த மைதீன் புகாரி, ஷேக் முகைதீன், தர்வீஸ்மீரான் ஆகிய 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • உருக்கமான தகவல்கள்
    • கழிவறையில் ஸ்டெபின் துப்பட்டாவில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார்.

    நாகர்கோவில், மே.31-

    நாகர்கோவில் மேலரா மன்புதூர் எம்.ஜி.ஆர். சிலை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன். வெல்டிங் தொழி லாளி. இவரது மனைவி நாகர்கோவிலில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மூத்த மகன் ஸ்டெபின் (வயது 13).

    நேற்று காலையில் கணவன்-மனைவி இருவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்றனர். மாலையில் ஸ்டெபினும் அவரது சகோதரரும் வீட்டில் இருந்தனர். அப் போது ஸ்டெபினின் சகோ தரர் வெளியே விளையாட சென்றார். வீட்டில் ஸ்டெபின் மட்டும் இருந்தார். இந்த நிலையில் இரவு ஸ்டீபன் வீட்டிற்கு வந்த போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

    இளைய மகன் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த நிலையில், மூத்த மகன் ஸ்டீபன் வீட்டுக்குள் இருப்பான் என அழைத்துள்ளார். நீண்ட நேரம் அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கழிவறையில் ஸ்டெபின் துப்பட்டாவில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார்.

    இதனைப் பார்த்து பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்டீபன், நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஸ்டெபினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஸ்டெபின் தற்கொ லைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஸ்டெபின் தற்போது அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். பள்ளிகள் 7-ந் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் அவரை விடுதி யில் சேர்க்க பெற்றோர் திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் அவருக்கு விடுதியில் சேர்ந்து படிக்க விருப்ப மில்லாததால் மனமுடைந்து தற்கொலை செய்து இருக்க லாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    பலியான ஸ்டெபின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக் கிறது. பள்ளி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
    • 29-ந்தேதி நடைபெறவிருக்கும் ஆர்ப் பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    கன்னியாகுமரி:

    குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது மற்றும் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தது தொடர்பாக தமிழக அரசை கண்டித்து 29-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன்,மாநகராட்சி கவுன்சிலர்கள் அக் ஷயா கண்ணன், ஸ்ரீலிஜா, அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், ஒன்றிய செயலாளர்கள் ஜெஸீம், பொன் சுந்தர்நாத், இளையரணி செயலாளர் ஜெயசீலன், மாநகர முன்னாள் செயலாளர் சந்துரு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகளை தெரிவிப்பது, குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வில் அதிக ளவில் உறுப்பி னர்களை சேர்க்க வேண்டும், தமிழகத்தில் கள்ளச்சா ராயத்தை ஊக்குவித்த தி.மு.க. அரசை கண்டிப்பது, நடைபெற உள்ள நாடாளு மன்ற தேர்தலில் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டும் வேட்பாளரை வெற்றிபெறச் செய்வது, வருகிற 29-ந்தேதி நடைபெறவிருக்கும் ஆர்ப் பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    • ஊட்டியில் நிலம் வாங்கிய அம்பலம்
    • அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில், மே.26-

    நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவில் முதலிமார் தெரு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் கார்த்திக் (வயது 34). நகை மதிப்பீட்டாளர். இவரது மனைவி பார்வதி (23). இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்கள் முதலிமார் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த மாதம் 12-ந்தேதி மகேஷ் கார்த்திக் வேலை விஷயமாக சென்னை சென்றார். இதையடுத்து மனைவியை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது மகேஷ் கார்த்திக் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

    வீட்டில் இருந்த 17 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து அவர் வடசேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொள்ளையன் வீட்டின் மாடி வழியாக புகுந்து பூட்டை உடைப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றினார்கள். சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த கொள்ளையன் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் வாத்தியார்விளையை சேர்ந்த ஆனந்த் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். போலீசார் தேடுவது அறிந்த ஆனந்த் தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆனந்தை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ஆனந்திடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனந்த் கொள்ளையடித்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். மேலும் அந்த பணத்தை பெண்களுக்கு ஜாலியாக செலவு செய்துள்ளார். ஊட்டி பகுதியில் அவர் நிலம் வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 17 வயது சிறுவனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து சென்றனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பள்ளவிளை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி வசந்தா (வயது 58).

    இவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது.

    அதன் அடிப்படையில் கொள்ளை வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அய்யப்பன் (18) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த சூழலில் சி.சி.டி.வி. கேமராவில் கைப்பற்றப்பட்ட காட்சிகள் அடிப்படையில் கொள்ளை வழக்கில் தொடர்புடைய நெல்லை டவுனை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட சிறுவனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவனுக்கு நகை திருட்டு வழக்கில் தொடர்பு தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அய்யப்பனையும், 17 வயது சிறுவனையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். கைது செய்யப்பட்ட அய்யப்பனிடம் விசாரணை நடத்திய போது, அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. அய்யப்பனின் தாயார் வீடு ஆசாரிபள்ளத்தில் உள்ளது. அவர் அடிக்கடி இங்கு வந்து சென்றுள்ளார். சம்பவத் தத்தன்று வந்தபோது செலவுக்கு பணம் தேவைப்பட்ட தால் வசந்தா வின் நகையை பறித்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட இருவருக்கும் குமரி மாவட்டத்தில் வேறு வழக்குகளில் தொடர்புள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அழைப்பு
    • நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் மே தின விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் மே தின விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜி.சுகுமாரன் தலைமை தாங்குகிறார். 25-வது வார்டு கவுன்சிலர் எஸ்.அக்சயா கண்ணன் வ ரவேற்று பேசுகிறார்.

    கூட்டத்தில் நான் (தள வாய் சுந்தரம் எம்.எல்.ஏ.), அ.தி.மு.க. மகளிர் அணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ராஜலெட்சுமி, அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.பச்சைமால், தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி முருகேசன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஆர்.கிருஷ்ணதாஸ், வக்கீல் பிரிவு துணை செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட இணை செயலாளர் இ.சாந்தினி பகவதியப்பன், மாவட்ட பொருளாளர் ஆர்.ஜெ.கே.திலக், மாவட்ட துணை செயலாளர் எம்.பார்வதி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் எஸ்.மெர்லியன்ட் தாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளு மாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சி.சி.டி.வி. கேமரா மூலம் துப்பு துலங்கியது
    • அனீசிடம் போலீசார் விசாரணை நடத்திய போது சைக்கிள் திருடியதை ஒப்புக் கொண்டார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் புன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் (வயது 28). இவர் தனது வீட்டின் காம்ப வுண்டுக்குள் விலை உயர்ந்த சைக்கிள் ஒன்றை நிறுத்தி இருந்தார்.

    மறுநாள் காலையில் பார்த்தபோது சைக்கிள் மாயமாகி இருந்தது. இதை யடுத்து ராஜீவ் பல இடங்களில் தேடிப் பார்த்தும் சைக்கிள் கிடைக்கவில்லை. இதுகுறித்து நேசமணிநகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளையன் ஒருவன் சைக்கிளை திருடி செல்வதுபோன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டனர். அப்போது சைக்கிளை திருடி சென்றது பழனி பகுதியை சேர்ந்த அனீஸ் என்ற மணி (27) என்பது தெரியவந்தது.

    போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது அவர் குமரி மாவட்டம் கீரிப்பாறை பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட் ஒன்றில் கடந்த சில ஆண்டுகளாக தங்கி வேலை பார்ப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை பிடிக்க அங்கு சென்றனர். அப்போது அனீசை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட அனீசிடம் போலீசார் விசாரணை நடத்திய போது சைக்கிள் திருடியதை ஒப்புக் கொண்டார்.

    மேலும் வேறு எங்காவது அனீஸ் கைவரிசை காட்டியுள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீ சார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    நாகர்கோவில் வடிவீஸ்வ ரம் பகுதியை சேர்ந்தவர் மகாதேவன் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை யில் பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடப் பட்டிருந்தது. இதுகுறித்து மகாதேவன் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில் நகரில் கடந்த சில நாட்களாகவே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வீட்டின் முன்பு நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களை மர்மநபர்கள் திருடி செல்வது தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இதை தடுக்க போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்துவதுடன் கொள்ளையர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களும், சமூக ஆர்வ லர்களும் வலி யுறுத்தியுள்ளனர்.

    ×