search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்வாரிய"

    • மின்வாரியத்தில் பாதை ஆய்வாளராக பணி புரிந்து வந்தார்.
    • நேற்று திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் சரக்கல் விளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் வசித்து வருபவர் முத்துப் பாண்டி (வயது 51).

    இவர் மின்வாரியத்தில் பாதை ஆய்வாளராக பணி புரிந்து வந்தார். அவருக்கு நேற்று திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசேதித்த டாக்டர்கள் அவர் ஏற்க னவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதையடுத்து அவரது மனைவி செல்வ குமாரி கோட்டார் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து முத்துப்பாண்டி உடலை பிரேத பரிசோ தனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே நேற்று இரவு அங்குள்ள ட்ரான்ஸ்பார்ம ரில் ஏறி பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.
    • நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே உள்ள ராமநா யக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 54). மின்வாரிய ஊழி யரான இவர், நேற்று இரவு அங்குள்ள ட்ரான்ஸ்பார்ம ரில் ஏறி பழுது பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்த அந்த பகுதியினர், புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், விஸ்வ நாதனை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதற்கி டையே அங்கு வந்த விஸ்வநாதன் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். போலீ சார் நடத்திய விசா ரணையில், விஸ்வநாதன் மின்சார வாரிய ஆய்வாள ராக வேலை பார்த்து வந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள மின்வாரிய ஊழியர் விடுமுறையில் சென்ற நிலையில், இவர் டிரான்ஸ்பார்மரில் ஏறி பணி செய்தபோது, எதிர்பா ராத விதமாக மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மின்வாரியத்தினருக்கான பல்வேறு கடன் சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    • துணை மின்நிலையங்கள் மற்றும் மின்வாரியப் பணிகளில் சிலவற்றை தனியாருக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

    நாமக்கல்:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தில், இதுவரை மின்வாரிய பொறியாளா்கள், அலுவலா்கள், பணியாளா்கள் இடமாறுதலை வாரிய அதிகாரிகளே மேற்கொண்டு வந்தனா். இந்த நடவடிக்கை தற்போது அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மின்வாரியத்தினருக்கான பல்வேறு கடன் சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. துணை மின்நிலையங்கள் மற்றும் மின்வாரியப் பணிகளில் சிலவற்றை தனியாருக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அகவிலைப்படி உயா்வு வழங்கடாத நிலை உள்ளது.

    இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மின் ஊழியா்களுக்கு எதிரான அரசாணைகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய அளவில் நேற்று காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. நாமக்கல் மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில், நாமக்கல் மின்பகிா்மான வட்ட மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் உயா்மட்ட நிா்வாகிகள் கே.ஆனந்த்பாபு, டி.எஸ்.கந்தசாமி, கோவிந்தராஜ், முத்துசாமி, சிட்டுசாமி, முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். மின்வாரிய ஊழியா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு பல்வேறு முழக்கங்களை எழுப்பினா்.

    • தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்றது.
    • 2022 ஜன.1-ந் தேதியை கணக்கிட்டு 3 சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்றது.

    இந்த ஆா்ப்பாட்டத்திற்கு சின்னுசாமி தலைமை வகித்தாா். மண்டலச் செயலாளா் காளியப்பன் தொடக்க உரையாற்றினாா். சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளா் என்.வேலுசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

    இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; மின்சார சட்ட மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    2022 ஜன.1-ந் தேதியை கணக்கிட்டு 3 சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும்; மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் நிபந்தனைகளை அகற்றி, அனைத்து நோய்களுக்குமான சிகிச்சைக்கும் காப்பீட்டு நிறுவனங்களே செலவுத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    இதில், ஓய்வு பெற்ற மின்வாரியப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

    வாழப்பாடியில் மின்வாரிய ஓய்வூதியர் சங்க கூட்டம் நடந்தது.

    வாழப்பாடி:

    சேலம் மண்டல மின்வாரிய ஓய்வூதியர் சங்கத்தின் வாழப்பாடி கிளை பொது உறுப்பினர் பேரவை கூட்டம் வாழப்பாடி அரசினர் மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு, கிளை தலைவர் வடிவேலு தலைமை வகித்தார். ராமலிங்கம் வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் குமார் முன்னிலை வகித்தார். பாலசுப்பிரமணியன் வரவு செலவு ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் சுகந்தவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாநில நிர்வாகிகள் முத்துசாமி, கோபால் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில், மூத்த உறுப்பினர்கள், 70 முதல் 90 வயது நிரம்பியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். உதவித்தொகை ரூ.1.50 லட்சம் உயர்த்தி வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின்படி மருத்துவ செலவுகளை ஓய்வூதியர்க்கு தாமதிக்காமல் உடனடியாக வழங்க வேண்டும்.

    மாதந்திர மருத்துவப்படி ரூ.300 லிருந்து மத்திய அரசில் வழங்கப்படுவதை போல் ரூ.1000 வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக, சையத் யாசின் நன்றி கூறினார்.

    ×