வாழப்பாடியில் மின்வாரிய ஓய்வூதியர் சங்க கூட்டம்

வாழப்பாடியில் மின்வாரிய ஓய்வூதியர் சங்க கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
Published on

வாழப்பாடி:

சேலம் மண்டல மின்வாரிய ஓய்வூதியர் சங்கத்தின் வாழப்பாடி கிளை பொது உறுப்பினர் பேரவை கூட்டம் வாழப்பாடி அரசினர் மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, கிளை தலைவர் வடிவேலு தலைமை வகித்தார். ராமலிங்கம் வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் குமார் முன்னிலை வகித்தார். பாலசுப்பிரமணியன் வரவு செலவு ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் சுகந்தவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாநில நிர்வாகிகள் முத்துசாமி, கோபால் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில், மூத்த உறுப்பினர்கள், 70 முதல் 90 வயது நிரம்பியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். உதவித்தொகை ரூ.1.50 லட்சம் உயர்த்தி வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின்படி மருத்துவ செலவுகளை ஓய்வூதியர்க்கு தாமதிக்காமல் உடனடியாக வழங்க வேண்டும்.

மாதந்திர மருத்துவப்படி ரூ.300 லிருந்து மத்திய அரசில் வழங்கப்படுவதை போல் ரூ.1000 வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக, சையத் யாசின் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com