search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாக்கிய"

    • வேறு ஒருவருடன் பழகியதை கண்டித்ததால் ஆத்திரம்
    • காரமடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    கோவை,

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 39 வயது வாலிபர். இவர் காரமடை போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதா வது:-

    எனக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு கணவரை இழந்த எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 35 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்ேதாம்.

    இளம்பெண் சமையல் வேலைக்கு சென்று வந்தார். அப்போது அவருக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் என்னுடன் பழகுவ தையும், தனிமையில் இருப்பதையும் தவிர்த்து வந்தார். மேலும் இளம் பெண் புதிதாக பழக்கமான வாலிபரை அவரது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    சம்ப வத்தன்று நான் அவரது வீட்டிற்கு செ ன்று என்னை ஏமாற்றி விட்டு இன்னொ ருவருடன் ஏன் பழகுகிறாய் என கேட்டேன். எங்களுக்கு இடையே தக ராறு ஏற்பட்டது. அப்போது அங்கு இருந்த இளம்பெண், அவரது சகோதரர் மற்றும் மகன் ஆகியோர் சேர்ந்து என்னை கிரிக்கெட் மட்டை யால் தாக்கினர்.

    இதில் எனக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. நான் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தேன். எனக்கு தலையில் 7 தையல் போடப்பட்டு உள்ளனர். எனவே என்னை தாக்கிய இளம்பெண், அவரது சகோதரர், மற்றும் மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் காரமடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெரைட்டி ரைஸ் கடைக்கு வந்து தாக்கிய மருமகன்
    • அன்னூர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை

    அன்னூர்,

    அன்னூர் தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 60). இவரது மனைவி ராணி (60).

    இவர்கள் மயில்கல் பகுதியில் ஆம்னி வேனில் வெரைட்டி ரைஸ் கடை நடத்தி வருகின்றனர்.

    இவர்களது மகள் தீபா (30). இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெரியசாமி என்பவருடன் திருமணம் முடிந்தது.

    கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரண மாக தீபா தற்போது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    இதனிடையே மதுரையை சேர்ந்த அழகப்பன் (35) என்பவருக்கும் தீபாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் துரை சாமி, ராணி ஆகிய 2 பேரும் சம்பவத்தன்று கடையில் இருந்தனர்.

    அப்போது அழகப்பன் கடைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை அவர்கள் தட்டிக்கேட்டனர். எனவே ஆத்திரம் அடைந்த அழகப்பன் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. அதனை தடுக்க வந்த ராணியையும் அவர் தாக்கினார்.

    இதில் படுகாயம் அடைந்த துரைசாமி, ராணியை அங்கிருந்த வர்கள் மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த அன்னூர் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த துரைசாமி மற்றும் ராணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடித்து விட்டு வந்து மகளை தாக்கியதால் ஆத்திரம்
    • தாக்கியவரே மருமகனை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வெள்ளாம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகவேல் (வயது 50). அ.தி.மு.க. பிரமுகரான இவர் வெள்ளாம்பாளையம் பஞ்சாயத்தில் முன்னாள் தலைவராக இருந்தார்.

    இவரது மகள் மெய் மொழி (24). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழனிகவுண்டன் புதூரை சேர்ந்த விவசாயி பிரகாஷ்குமார் (24) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 1 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    சம்பவத்தன்று வெளியே சென்ற பிரகாஷ்குமார் மது போதையில் வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மெய்மொழியை தாக்கினார்.

    இது குறித்து அவர் தனது தந்தை முருகவேலுக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக அவரது மனைவி கலைவாணி என்பவருடன் மகளின் வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் முருகவேல் அவரது மகளை தாக்கியது குறித்து மருமகன் பிரகாஷ்குமாரிடம் கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிரகாஷ்குமார் மாமனார், மாமியார் ஆகியோரை தாக்கினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த முருகவேல் அங்கு இருந்த உருட்டு கட்டையால் பிரகாஷ்குமாரின் தலை மற்றும் கையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். பின்னர் அவர்களே பிரகாஷ்குமாரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து கோமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் மருமகனை தாக்கிய அ.தி.மு.க. முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆத்திரம் அடைந்த கணவர், தனது மனைவியை தாக்கினர்.
    • உறவினர்கள் ஓடி வந்து இளம்பெண்ணை மீட்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 37 வயது பெண்.

    இவருக்கு திருமணமாகி தனது கணவர் மற்றும் மகள்களுடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார்.

    இளம்பெண் அந்த பகுதியில் உள்ள மில் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் லாரி டிரைவராக உள்ளார்.

    இளம்பெண்ணின் கணவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அவர் தினமும் குடித்து விட்டு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்வதை வாடி க்கையாக வைத்து ள்ளார்.

    சம்பவத்தன்று இளம்பெண் தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார். அப்போது அவரது கணவர் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அவர் தனது மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டார்.

    ஆனால் அவர் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கணவர், தனது மனைவியை தர,தர வென இழுத்து வந்து ரோட்டில் போட்டு சரமாரியாக தாக்கினர்.

    மேலும் அவரது உடைகளை களைந்து, அவரை அடித்து உதைத்தார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் ஓடி வந்து இளம்பெண்ணை மீட்டு மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி, இளம்பெண்ணை தாக்கிய அவரது கணவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    • கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
    • போலீசார் சஞ்சயை கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர்.

    குனியமுத்தூர்,

    கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்தநிலையில் மாண விக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குனியமுத்தூரை சேர்ந்த சஞ்சய் (வயது 19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், பல்வேறு இடங்களுக்கு சென்றும் காதலை வளர்த்து வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் மாணவி சஞ்சயுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்தார். இது வாலிபருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    சம்பவத்தன்று மாணவி கல்லூரிக்கு சென்று விட்டு அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கு வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த சஞ்சய் அவரிடம் பேசுமாறு கூறினார். ஆனால் மாணவி பேச மறுத்து விட்டார். இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த வாலிபர் நடுரோட்டில் வைத்து தகாத வார்த்தைகளால் பேசி மாணவியின் கன்னத்தில் தாக்கினார். பின்னர் அவர் மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இது குறித்து மாணவி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலியை நடுரோட்டில் வைத்து தாக்கிய சஞ்சயை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • ஜானல் ஜெபக்குமார் மற்றும் அவரது நண்பரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கும்பலை தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி வெங்டேசா காலனியை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகன் ஜானல் ஜெபக்குமார் (வயது 21). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் தனது நண்பரின் வருகைக்காக சவுரிபாளையத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 8 பேர் தகாத வார்த்தைகளால் பேசி ஜானல் ஜெபக்குமார் மற்றும் அவரது நண்பரை கல்லால் தாக்கினர்.

    இதில் 2 பேரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் 2 பேரும் சத்தம் போட்டனர். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் 8 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஜானல் ஜெபக்குமார் மற்றும் அவரது நண்பரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்து கல்லூரி மாணவரை கல்லால் தாக்கிய 8 பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்கள்.

    • ராஜேந்திரனுக்கு போன் செய்து தனது பாட்டிக்கு உடல் எடை 80 கிலோ இருப்பதாகவும், அதை குறைக்க சிகிச்சை தர வேண்டும் என கூறியுள்ளார்.
    • 3 மர்மநபர்கள், ராஜேந்திரனை தகாத வார்த்தையால் திட்டியதுடன், இரும்பு ராடால் தாக்கி காயப்படுத்தினர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பக்காளியூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (62). இவர் நியூட்ரிசன் வேலை செய்து வருகிறார். நேற்று காலை அடையாளம் தெரியாத நபர் ராஜேந்திரனுக்கு போன் செய்து தனது பாட்டிக்கு உடல் எடை 80 கிலோ இருப்பதாகவும், அதை குறைக்க சிகிச்சை தர வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து ராஜேந்திரன், மர்ம நபர் கூறிய ராயலூர் என்ற பகுதிக்கு சென்றுள்ளார்.

    அப்போது அங்கு வந்த 3 மர்மநபர்கள், ராஜேந்திரனை தகாத வார்த்தையால் திட்டியதுடன், இரும்பு ராடால் தாக்கி காயப்படுத்தினர். ராஜேந்திரன் வலியால் கூச்சலிடவே, அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    ராஜேந்திரன் சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ராஜேந்திரன் சங்ககிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜேந்திரனை தாக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • வாலிபர் கண்டக்டர் அருணை தாக்கியதுடன், பஸ் டிரைவர் முருகானந்தத்தை சட்ைடயை பிடித்து இழுத்தார்.
    • பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி பஸ் நிலை யத்தில் இருந்து இருந்து ராவணபுரத்திற்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது.

    இந்த பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் முருகானந்தம் என்பவர் ஓட்டினார்.

    இந்த பஸ்சில் நடத்து னராக பொள்ளாச்சி தென்குமா ரபாளையம் அடுத்த பொன்னேகவுண்ட னூரை சேர்ந்த அருண் (வயது35) என்பவர் இருந் தார்.

    பஸ் சந்திராபுரம் பகுதி யில் உள்ள பாலத்தின் அருகே சென்று கொண்டி ருந்தது. அப்போது அங்கு வந்த வாலிபர் திடீரென பஸ்சை வழி மறித்து நிறுத்து மாறு கூறினார்.

    இதையடுத்து பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பஸ்சில் ஏறு என்று சொன்னதற்கு அந்த நபர் ஏறாமல் தொடர்ந்து தகரா றில் ஈடுபட்டார்.

    இதையடுத்து டிரைவர் அங்கிருந்து பஸ்சை இயக்கி நகருவதற்கு முற்பட்டார். ஆனால் அந்த வாலிபர் பஸ்சை எடுக்கவிடாமல் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தகராறு செய்து கொண்டே இருந் தார்.

    மேலும் கண்டக்டர் அருணை தாக்கியதுடன், பஸ் டிரைவர் முருகா னந்தத்தை சட்ைடயை பிடித்து இழுத்தார். இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வாலிபரை பிடித்தனர். அப்போது அவர் குடிபோ தையில் இருந்தார்.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில், பஸ் டிரைவர், கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்டது சந்திராபுரத்தை சேர்ந்த கார்வேந்தன்(25) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து அழைத்து சென்றனர். அதன்பின்னரே பஸ் அங்கி ருந்து புறப்பட்டு சென்றது. போலீசார் வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 5 பேர் கொண்ட கும்பல் கிப்சன் மற்றும் அவரது நண்பர்களை வழிமறித்து தாக்கினார்கள்.
    • காயமடைந்தவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே முதலார் பகுதியை சேர்ந்தவர் கிப்சன் (வயது 19). இவர் நாகர்கோவில் கோணம் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த 16-ந்தேதி கிப்சன் கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கிப்சன் மற்றும் அவரது நண்பர்களை வழிமறித்து தாக்கினார்கள். இதில் கிப்சன் பலத்த காயமடைந்தார். காயமடைந்தவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து நேசமணிநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து கிப்சன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து நேசமணிநகர் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. கிப்சனை தாக்கியவர்கள் குறித்த கும்பல் அடையாளம் தெரிந்த நிலையில் போலீ சார் 3 பேரை பிடித்துள்ளனர். பிடிபட்ட 3 பேரிடம் விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது. கிப்சனை எதற்காக தாக்கினார்கள் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • வீட்டு உபயோக பொருட்கள் வாங்க மறுத்ததால் தாக்கினார்.
    • போலீசார் ெபண்ணை தாக்கியதாக ராமதாசை கைது செய்தனர்.

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள காளம்பாளையம் கந்தவேல் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி ஜெயந்தி (வயது 48). மில் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது வாலிபர் ஒருவர் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்வதற்காக வந்தார். அவர் ஜெயந்தியிடம் வந்து வீட்டு உபயோக பொருட்களை வாங்குமாறு வற்புறுத்தினார்.

    ஆனால் அவர் வாங்க மறுத்து வாலிபரை வெளியே செல்லுமாறு கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் ஜெயந்தியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இது குறித்து அவர் பேரூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொருட்கள் வாங்க மறுத்த பெண்ணை தாக்கிய கோவைப்புதூர் அருகே உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்த ராமதாஸ் (20) என்பவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயியான இவர் நேற்று தன் தோட்டத்தில் வேலை செய்ய நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு முட்புதூரில் பதுங்கி இருந்த கரடி, திடீரென அவர் மீது பாய்ந்து அவரது கை, முதுகு உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் கடித்து குதறியது.
    • அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூர் நாடு ஓலையார் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). விவசாயியான இவர் நேற்று தன் தோட்டத்தில் வேலை செய்ய நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு முட்புதூரில் பதுங்கி இருந்த கரடி, திடீரென ராஜேந்திரன் மீது பாய்ந்து அவரது கை, முதுகு உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் கடித்து குதறியது.

    இதில் ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கரடியை விரட்டினர்.

    பின்னர் ராஜேந்திரனை மீட்டு செம்மேடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வன அலுவலர் சுப்பராயன் தலைமையிலான வனத்துறையினர்,

    கரடியின் கால் தடத்தை வைத்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. 

    • சேலம் சின்னபுதூர் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவரை நாயை கிண்டல் செய்த விவகாரத்தில் வாலிபரை தாக்கினார்.
    • இது குறித்து சந்தோஷ்குமார் அளித்த புகாரின்பேரில் அழகாபுரம் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    சேலம்:

    சேலம் சின்னபுதூர் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 27).

    இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நாயுடன் நடைப்பயிற்சி சென்றார். அப்போது அங்குள்ள டீக்கடையில் அமர்ந்திருந்த 5 பேர் 'இது பெண் நாய்' என கிண்டல் செய்தனர். இதனை சந்தோஷ்குமார் தட்டிக்கேட்டார்.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென அந்த வாலிபர்கள், சந்தோஷ்குமாரை தாக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து ஓட்டம் பிடித்த சந்தோஷ்குமார் அந்த பகுதியில் உள்ள ஓட்டலுக்குள் நுழைந்தார்.

    அவரை துரத்தி சென்ற அந்த 5 பேரும் ஓட்டலுக்குள் புகுந்து அங்கிருந்த தோசை கரண்டியால் சந்தோஷ்குமாரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அங்கிருந்த ெபாதுமக்கள், அவர்களை விலக்கி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த சந்தோஷ்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து சந்தோஷ்குமார் அளித்த புகாரின்பேரில் அழகாபுரம் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    ×