search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமனார்- மாமியாரை தாக்கிய வாலிபர்
    X

    மாமனார்- மாமியாரை தாக்கிய வாலிபர்

    • வெரைட்டி ரைஸ் கடைக்கு வந்து தாக்கிய மருமகன்
    • அன்னூர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை

    அன்னூர்,

    அன்னூர் தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 60). இவரது மனைவி ராணி (60).

    இவர்கள் மயில்கல் பகுதியில் ஆம்னி வேனில் வெரைட்டி ரைஸ் கடை நடத்தி வருகின்றனர்.

    இவர்களது மகள் தீபா (30). இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெரியசாமி என்பவருடன் திருமணம் முடிந்தது.

    கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரண மாக தீபா தற்போது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    இதனிடையே மதுரையை சேர்ந்த அழகப்பன் (35) என்பவருக்கும் தீபாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் துரை சாமி, ராணி ஆகிய 2 பேரும் சம்பவத்தன்று கடையில் இருந்தனர்.

    அப்போது அழகப்பன் கடைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை அவர்கள் தட்டிக்கேட்டனர். எனவே ஆத்திரம் அடைந்த அழகப்பன் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. அதனை தடுக்க வந்த ராணியையும் அவர் தாக்கினார்.

    இதில் படுகாயம் அடைந்த துரைசாமி, ராணியை அங்கிருந்த வர்கள் மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த அன்னூர் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த துரைசாமி மற்றும் ராணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×