search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சி அருகே அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய போதை வாலிபர்
    X

    பொள்ளாச்சி அருகே அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய போதை வாலிபர்

    • வாலிபர் கண்டக்டர் அருணை தாக்கியதுடன், பஸ் டிரைவர் முருகானந்தத்தை சட்ைடயை பிடித்து இழுத்தார்.
    • பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி பஸ் நிலை யத்தில் இருந்து இருந்து ராவணபுரத்திற்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது.

    இந்த பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் முருகானந்தம் என்பவர் ஓட்டினார்.

    இந்த பஸ்சில் நடத்து னராக பொள்ளாச்சி தென்குமா ரபாளையம் அடுத்த பொன்னேகவுண்ட னூரை சேர்ந்த அருண் (வயது35) என்பவர் இருந் தார்.

    பஸ் சந்திராபுரம் பகுதி யில் உள்ள பாலத்தின் அருகே சென்று கொண்டி ருந்தது. அப்போது அங்கு வந்த வாலிபர் திடீரென பஸ்சை வழி மறித்து நிறுத்து மாறு கூறினார்.

    இதையடுத்து பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பஸ்சில் ஏறு என்று சொன்னதற்கு அந்த நபர் ஏறாமல் தொடர்ந்து தகரா றில் ஈடுபட்டார்.

    இதையடுத்து டிரைவர் அங்கிருந்து பஸ்சை இயக்கி நகருவதற்கு முற்பட்டார். ஆனால் அந்த வாலிபர் பஸ்சை எடுக்கவிடாமல் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தகராறு செய்து கொண்டே இருந் தார்.

    மேலும் கண்டக்டர் அருணை தாக்கியதுடன், பஸ் டிரைவர் முருகா னந்தத்தை சட்ைடயை பிடித்து இழுத்தார். இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வாலிபரை பிடித்தனர். அப்போது அவர் குடிபோ தையில் இருந்தார்.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில், பஸ் டிரைவர், கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்டது சந்திராபுரத்தை சேர்ந்த கார்வேந்தன்(25) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து அழைத்து சென்றனர். அதன்பின்னரே பஸ் அங்கி ருந்து புறப்பட்டு சென்றது. போலீசார் வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×