search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையத்தில் மனைவியை தாக்கிய லாரி டிரைவர்
    X

    மேட்டுப்பாளையத்தில் மனைவியை தாக்கிய லாரி டிரைவர்

    • ஆத்திரம் அடைந்த கணவர், தனது மனைவியை தாக்கினர்.
    • உறவினர்கள் ஓடி வந்து இளம்பெண்ணை மீட்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 37 வயது பெண்.

    இவருக்கு திருமணமாகி தனது கணவர் மற்றும் மகள்களுடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார்.

    இளம்பெண் அந்த பகுதியில் உள்ள மில் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் லாரி டிரைவராக உள்ளார்.

    இளம்பெண்ணின் கணவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அவர் தினமும் குடித்து விட்டு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்வதை வாடி க்கையாக வைத்து ள்ளார்.

    சம்பவத்தன்று இளம்பெண் தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார். அப்போது அவரது கணவர் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அவர் தனது மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டார்.

    ஆனால் அவர் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கணவர், தனது மனைவியை தர,தர வென இழுத்து வந்து ரோட்டில் போட்டு சரமாரியாக தாக்கினர்.

    மேலும் அவரது உடைகளை களைந்து, அவரை அடித்து உதைத்தார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் ஓடி வந்து இளம்பெண்ணை மீட்டு மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி, இளம்பெண்ணை தாக்கிய அவரது கணவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×