search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் மருத்துவ கல்லூரி மாணவரை கல்லால் தாக்கிய 8 பேர் கும்பல்
    X

    கோவையில் மருத்துவ கல்லூரி மாணவரை கல்லால் தாக்கிய 8 பேர் கும்பல்

    • ஜானல் ஜெபக்குமார் மற்றும் அவரது நண்பரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கும்பலை தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி வெங்டேசா காலனியை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகன் ஜானல் ஜெபக்குமார் (வயது 21). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் தனது நண்பரின் வருகைக்காக சவுரிபாளையத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 8 பேர் தகாத வார்த்தைகளால் பேசி ஜானல் ஜெபக்குமார் மற்றும் அவரது நண்பரை கல்லால் தாக்கினர்.

    இதில் 2 பேரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் 2 பேரும் சத்தம் போட்டனர். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் 8 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஜானல் ஜெபக்குமார் மற்றும் அவரது நண்பரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்து கல்லூரி மாணவரை கல்லால் தாக்கிய 8 பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×