search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவரை"

    • 5 பேர் கொண்ட கும்பல் கிப்சன் மற்றும் அவரது நண்பர்களை வழிமறித்து தாக்கினார்கள்.
    • காயமடைந்தவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே முதலார் பகுதியை சேர்ந்தவர் கிப்சன் (வயது 19). இவர் நாகர்கோவில் கோணம் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த 16-ந்தேதி கிப்சன் கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கிப்சன் மற்றும் அவரது நண்பர்களை வழிமறித்து தாக்கினார்கள். இதில் கிப்சன் பலத்த காயமடைந்தார். காயமடைந்தவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து நேசமணிநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து கிப்சன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து நேசமணிநகர் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. கிப்சனை தாக்கியவர்கள் குறித்த கும்பல் அடையாளம் தெரிந்த நிலையில் போலீ சார் 3 பேரை பிடித்துள்ளனர். பிடிபட்ட 3 பேரிடம் விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது. கிப்சனை எதற்காக தாக்கினார்கள் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • சேலம் அன்னதானப்பட்டி கேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவருடைய மகன் அருண்குமார் (வயது 18). இவர், தனியார் கல்லூரியில் பயோ டெக் பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • தாய், தோல்வியுற்ற பாடங்களை படித்து தேர்ச்சி பெறுமாறு அருண்குமாரை சத்தம் போட்டதாக தெரிகிறது.

    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி கேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவருடைய மகன் அருண்குமார் (வயது 18). இவர், தனியார் கல்லூரியில் பயோ டெக் பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதில் சில பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என தெரிகிறது.

    இதனால் அவரது தாய், தோல்வியுற்ற பாடங்களை படித்து தேர்ச்சி பெறுமாறு அருண்குமாரை சத்தம் போட்டதாக தெரிகிறது.

    இதனால் கோபம் அடைந்த அருண்குமார் இன்று காலை வீட்டில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். முன்னதாக தனது நண்பர்கள் 2 பேருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என தகவல் தெரிவித்துள்ளார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், அவரது வீட்டுக்கு விரைந்து வந்தனர். அதற்குள் அருண்குமார், அறை கதவை பூட்டி சேலையை கழுத்தில் கட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

    நண்பர்கள், உடனடியாக கதவை உடைத்து, உள்ளே புகுந்து அவரை காப்பாற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அருண்குமார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    சரியான நேரத்தில் நண்பர்கள் துரிதமாக செயல்பட்டதால் மாணவர் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவரை 2-வது நாளாக தேடும் பணி தீவிரமாக நடந்தது.

    பரமத்திவேலூர்:

    பெங்களூரு சிங்காபுரம் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் பலராமன். இவரது மகன் ஸ்ரீதர் (வயது 20). இவர் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில்ஸ்ரீதர் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு வந்துள்ளார். சேந்தமங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெறும் விழாவிற்காக நேற்று அதே ஊரைச் சேர்ந்த 11 பேர்களுடன் தீர்த்தம் எடுப்பதற்காக ஜேடர்பாளையம் படுகை அணையில் உள்ள காவிரி ஆற்றுக்கு ஸ்ரீதர் சென்றுள்ளார். படுகை அணை காவிரி ஆற்றுப் பகுதியில் உள்ள ராஜாவாய்க்காலில் அவர்கள் குளித்து விட்டு கரை திரும்பினர். அப்போது ஸ்ரீதர் மட்டும் கரை திரும்பவில்லை.

    இது குறித்து அவருடன் வந்தவர்கள் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார், ராஜா வாய்க்காலில் மாணவரை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து நாமக்கல் தீயணைப்பு துறையினர் மூலம் நேற்று மாலை வரை தேடினர். ஆனால் இரவு ஆகிவிட்டதால் போதிய வெளிச்சம் இல்லாததால் தீயணைப்பு துறையினர் சென்று விட்டனர். மீண்டும் 2 -வது நாளாக இன்று (திங்கட்கிழமை) காலை தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் மூலம் ராஜா வாய்க்காலில் பரிசல் மூலம் கல்லூரி மாணவரை தேடி வருகிறார்கள்.

    ×