search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோர்ட்டில்"

    • ரூ.23 லட்சத்தை கொ ள்ளையடித்து சென்றனர்.
    • 2 பேரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    சென்னிமலை, 

    சென்னிமலை அருகே ஈங்கூரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பெருந்துறையை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 47) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 23-ந் தேதி இந்த தொழிற்சாலையின் கிளை நிறுவனத்தில் பண பரிவர்த்தனையை முடித்து கொண்டு ரூ.23 லட்சம் பணத்துடன் ஈங்கூரில் உள்ள தொழிற்சாலைக்கு சத்தியமூர்த்தி காரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சத்தியமூர்த்தி சென்ற காரை வழிமறித்து சத்தியமூர்த்தியை காருடன் கடத்தி சென்று அவரிடம் இருந்த ரூ.23 லட்சத்தை கொ ள்ளையடித்து சென்றனர்.

    பின்னர் இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா, கண்ணங்குடி பகுதியை சேர்ந்த மனோகர் (29) மற்றும் நவநீதன் (27) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    இவர்கள் 2 பேரும் கொடுத்த தகவலின் பேரில் அதே ஊரை சேர்ந்த இளையராஜா (31) மற்றும் கோவை செட்டி பாளையத்தை சேர்ந்த அலெக்சா ண்டர் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கண்ணங்குடியை சேர்ந்த கார் டிரைவரான சேகர் என்கிற ராஜசேகர் (30) மற்றும் ராமதுரை (32) ஆகிய 2 பேரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ராஜசேகர் சரணடைந்தார். அவரை சென்னிமலை போலீசார் பெருந்துறை மாஜிஸ்திரேட் நீதிம ன்றனத்தில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் ராஜசேகரை சென்னிமலை போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து நேற்று முதல் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் கொள்ளை யடிக்கப்பட்ட பணம் குறித்து போலீசாரிடம் ராஜசேகர் உண்மையான தகவல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

    மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ராமதுரை மற்றும் செல்வம், விக்கி என்கிற விக்னேஷ் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இதில் ராமதுரை என்பவர் ஏற்கனவே கைது செய்யப்ப ட்ட மனோகரனின் அண்ணன் ஆவார். இதுவரை கைது செய்ய ப்பட்ட நபர்களி டமிருந்து ரூ.4 லட்சத்து 55 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    • தலைமறைவாகியுள்ள வாலிபரை பிடிக்க தனிப்படை தீவிரம்
    • குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட் டங்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் வேதநகர் மேல புது தெருவை சேர்ந்தவர் முகமது உமர் ஷாகிப் (வயது 55). வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த ஆண்டு ஊருக்கு வந்த இவர் தற்பொழுது இங்கேயே வசித்து வருகிறார். இவரது மனைவி ஜாஸ்மின். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சம்பவத்தன்று ஜாஸ்மின் மற்றும் அவரது மகள், மாமியார் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தனர்.

    வீட்டில் முகமது உமர் ஷாகிப் மட்டும் இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த கும்பல் முகமது உமர் ஷாகிப்பை துப்பாக்கி காட்டி மிரட்டி வீட்டில் இருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து முகமது உமர் ஷாகிப் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    கொள்ளையர்கள் பயன் படுத்திய காரை போலீசார் கைப்பற்றி னார்கள். கொள்ளை வழக்கு தொடர்பாக கோவில் பட்டியை சேர்ந்த சார்லஸ், இடலாக்குடியை சேர்ந்த அமீர், கோட்டாரை சேர்ந்த ரஹீம், அழகியபாண்டிய புரத்தை சேர்ந்த கவுரி, இருளப்பபுரத்தை சேர்ந்த சாஹிப் முகைதீன், மைதீன் புகாரி, மேலச்ச ரக்கல்விளையை சேர்ந்த தர்வீஸ் மீரான் ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இதில் அமீர், ரஹீம், கவுரி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 10 பவுன் நகை மீட்கப்பட்டது. தலை மறைவாகி இருந்த 4 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைக் கப்பட்டது. தனிப் படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட னர். குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட் டங்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கேரளாவில் கொள்ளை யர்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்ப டையில் போலீசார் அங்கு சென்று தேடினார்கள். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய இருளப்பபுரத்தை சேர்ந்த ஷேக் முகைதீன், மைதீன் புகாரி, மேலச்சரக்கல்வி ளையை சேர்ந்த தர்வீஷ் மீரான் ஆகிய 3 பேரும் நாகர்கோவில் ஜே.எம். 2 கோர்ட்டில் சரணடைந்தனர். இவர்களை நீதிபதியை 15 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தர விட்டார்.

    இதையடுத்து 3 பேரும் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள கோவில்பட்டியை சேர்ந்த சார்லசை போலீசார் தேடி வருகிறார்கள். கோர்ட் டில் சரணடைந்த மைதீன் புகாரி, ஷேக் முகைதீன், தர்வீஸ்மீரான் ஆகிய 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • ஆத்தூர் அருகே பட்டா, மின் வசதி கேட்டு கோர்ட்டில் மாணவி மனு கொடுத்துள்ளேன்.
    • 40 ஆண்டுகளாக ஆத்தூர் வருவாய் துறையினரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை பட்டா வழங்கவில்லை.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பைத்தூர் 1-வது வார்டில் வசித்து வருபவர் சின்னப்பன். இவரது மகள் கோமதி. இவருக்கு பழனிசாமி என்பவருடன் திருமணமானது. மதிஸ்ரீ என்ற மகள் உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பழனிசாமி மனைவி மற்றும் மகளை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

    இதனால் மதிஸ்ரீ பைத்தூரில் தாத்தா சின்னப்பன் வீட்டில் தாயுடன் வசித்து அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார் . இவர் தனது தாத்தாவுடன் இருந்து வந்த நிலையில் இவர்களது வீட்டுக்கு இதுவரை பட்டா இல்லாததால் சுமார் 40 ஆண்டுகளாக ஆத்தூர் வருவாய் துறையினரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை பட்டா வழங்கவில்லை.

    வீட்டிற்கு மின் இணைப்பு இணைப்பதற்காக பட்டா இருந்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என்றும் மின்சார அலுவலகத்தில் தெரிவித்தனர். இதையடுத்து, மாணவி மதிஸ்ரீ ஆத்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி ஆனந்தனிடம் தனது வக்கீல் மூலம் மனு தாக்கல் செய்தார்.

    இதுபற்றி மாணவி மதுஸ்ரீ கூறுகையில், எனது தாத்தா கட்டிய வீட்டுக்கு 40 ஆண்டுகளாக பட்டா மற்றும் மின்இணைப்பு இல்லை. இதுபற்றி மாவட்ட கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட அனைவரிடமும் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கோர்ட்டு எங்கள் மனு மீது விசாரணை செய்து பட்டா வழங்கவும் மின் இணைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனு கொடுத்துள்ளேன். நீதிபதி ஆனந்த் இதுகுறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார் என்றார்.

    ×