search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police interrogated"

    • ரூ.23 லட்சத்தை கொ ள்ளையடித்து சென்றனர்.
    • 2 பேரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    சென்னிமலை, 

    சென்னிமலை அருகே ஈங்கூரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பெருந்துறையை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 47) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 23-ந் தேதி இந்த தொழிற்சாலையின் கிளை நிறுவனத்தில் பண பரிவர்த்தனையை முடித்து கொண்டு ரூ.23 லட்சம் பணத்துடன் ஈங்கூரில் உள்ள தொழிற்சாலைக்கு சத்தியமூர்த்தி காரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சத்தியமூர்த்தி சென்ற காரை வழிமறித்து சத்தியமூர்த்தியை காருடன் கடத்தி சென்று அவரிடம் இருந்த ரூ.23 லட்சத்தை கொ ள்ளையடித்து சென்றனர்.

    பின்னர் இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா, கண்ணங்குடி பகுதியை சேர்ந்த மனோகர் (29) மற்றும் நவநீதன் (27) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    இவர்கள் 2 பேரும் கொடுத்த தகவலின் பேரில் அதே ஊரை சேர்ந்த இளையராஜா (31) மற்றும் கோவை செட்டி பாளையத்தை சேர்ந்த அலெக்சா ண்டர் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கண்ணங்குடியை சேர்ந்த கார் டிரைவரான சேகர் என்கிற ராஜசேகர் (30) மற்றும் ராமதுரை (32) ஆகிய 2 பேரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ராஜசேகர் சரணடைந்தார். அவரை சென்னிமலை போலீசார் பெருந்துறை மாஜிஸ்திரேட் நீதிம ன்றனத்தில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் ராஜசேகரை சென்னிமலை போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து நேற்று முதல் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் கொள்ளை யடிக்கப்பட்ட பணம் குறித்து போலீசாரிடம் ராஜசேகர் உண்மையான தகவல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

    மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ராமதுரை மற்றும் செல்வம், விக்கி என்கிற விக்னேஷ் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இதில் ராமதுரை என்பவர் ஏற்கனவே கைது செய்யப்ப ட்ட மனோகரனின் அண்ணன் ஆவார். இதுவரை கைது செய்ய ப்பட்ட நபர்களி டமிருந்து ரூ.4 லட்சத்து 55 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    கார் மெக்கானிக் கடத்தல் வழக்கில் போலி சாமியார் உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 3 சிலைகளையும் போலீசார் மீட்டுள்ளனர்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள நல்லப்பநாயக்கனூரைச் சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மகன் ஸ்ரீதர் (வயது 23). கார் மெக்கானிக். கடந்த 24-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இது தொடர்பாக அவரது தந்தை ராஜாமணி மத்தூர் போலீசில் தனது மகன் கடத்தப்பட்டதாக புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த நிலையில் ஸ்ரீதரின் வீட்டிற்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர், ரூ.10 லட்சம் கேட்டதாகவும், அதை போலீசில் தெரிவிக்க கூடாது என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் மாலை ஸ்ரீதர் கடத்தல் காரர்களிடம் தப்பி மத்தூர் போலீஸ் நிலையம் வந்தார்.

    அவரிடம் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டி, மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். அதில் ஸ்ரீதரை, போலி சாமியார் பெரியசாமி உள்பட 4 பேர் சேர்ந்து கடத்தியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது தொடர்பாக போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:-

    போச்சம்பள்ளியைச் சேர்ந்தவர் பெரியசாமி. போலி சாமியார். இவர் குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஐம்பொன் சிலைகள் இருப்பதாக கூறி சிலரிடம் பணம் பறித்து விட்டு, அவர்கள் செல்வதற்கு முன்னால் அந்த இடத்திற்கு சென்று போலி சிலைகளை புதைத்து வைத்து இருப்பார்.

    இவருக்கும், ஸ்ரீதருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் சிலையை மண்ணுக்குள் புதைத்து வைத்த விவகாரத்தில் ஸ்ரீதர் - பெரியசாமி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக பெரியசாமி மற்றும் சிலர் சேர்ந்து ஸ்ரீதரை கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. தற்போது ஸ்ரீதர் தப்பி வந்துள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அதே போல ஸ்ரீதரை கடத்தியதாக கூறப்படும் பெரியசாமி உள்பட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கிடையே 3 சிலைகளை போலீசார் மீட்டுள்ளனர். இதில் பர்கூரைச் சேர்ந்த ஒரு சாமியாருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிகிறது.

    இந்த சம்பவம் மத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×