search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்கொலை"

    • மனமுடைந்த மாணவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் அங்குள்ள கல்லூரியில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது செல்போனில் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட்டார்.

    இந்த விளையாட்டுகளில் அதிக அளவில் பணத்தை கட்டி இழந்தார். விளையாட்டு மோகம் காரணமாக லோன் ஆப் போன்றவற்றில் கடன் வாங்கி பணத்தை கட்டினார்.

    லோன் ஆப் மூலம் பெற்ற கடன் தொகை ரூ.3 லட்சத்தை திருப்பி செலுத்திய பிறகும் அவர்கள் தொல்லை கொடுக்க தொடங்கினர்.

    அதனால் மனமுடைந்த மாணவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மாணவரின் தற்கொலைக்கு காரணமான லோன் ஆப் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது பெற்றோர்கள் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அருகே உள்ள வேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (வயது39), ஓய்வுபெற்ற ராணுவவீரர்.

    இவரது 2-வது மனைவி வெண்ணிலா (28) மகள்கள் ஜெனிஸ்ரீ (6), தார்மீகா (4).கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வெண்ணிலா மனவேதனை அடைந்துள்ளார்.

    இந்நிலையில் வெண்ணிலா தனது மகள்களுடன் வாலாஜா ரோடு ரெயில் நிலையத்திற்கு இன்று காலை வந்தார்.

    எர்ணாகுளம்-ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு தனது 2 குழந்தைகளுடன் பாய்ந்தார்.

    இதில் வெண்ணிலா மற்றும் அவரது மகள்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

    அங்கு விரைந்த காட்பாடி ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பீரோவை சோதனையிட்ட போது அதில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் ஐந்தாயிரம் மதிப்புள்ள 2 ஸ்மார்ட் வாட்ச்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • பிரிதீவிராஜ் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சிகள் மூலம் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை தேவா டெக்ஸ் காலனி பகுதியில் வசித்து வருபவர் துரை பிரித்திவிராஜ் (35). இவர் வி.ஏ.ஓ. வாக பணியாற்றி விருப்பு ஓய்வுபெற்றவர்.

    தற்போது இவர் பாரதிய ஜனதா கட்சியின் சுற்றுப்புற சூழல் அணி பிரிவில் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வருகிறார்.

    கடந்த 23-ந்தேதி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் உறவினர் இல்ல விழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடப்பது தெரிய வந்தது. பீரோவை சோதனையிட்ட போது அதில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் ஐந்தாயிரம் மதிப்புள்ள 2 ஸ்மார்ட் வாட்ச்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கீதா தேவி வழக்குப்பதிவு செய்து பிரிதீவிராஜ் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சிகள் மூலம் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே உள்ள குறிஞ்சாக்குளம் பகுதியில் வசித்து வரும் மாணிக்கம் (61) என்பவர் பணம் மற்றும் பொருட்களை திருடியது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் பணத்தையும், பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை கைது செய்தனர். மாணிக்கத்திற்கு ஏற்கனவே திருமணமாகி இருந்த நிலையில் தற்போது குறிஞ்சாக்குளத்தில் 2-வது திருமணம் முடித்து கடந்த 5 வருடங்களாக வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.

    2-வது மனைவியின் மகன் கர்ணன் பி.எஸ்.சி. பட்டதாரி ஆவார். தந்தை மாணிக்கம் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டதால் கர்ணன் விரக்தியான மனநிலையில் இருந்துள்ளார். நேற்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் அவமானம் தாங்காமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தந்தை திருட்டு வழக்கில் கைதானதால் பட்டதாரி மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • நீதிமன்ற வளாகத்தில் சந்திரசேகர் என்பவர் திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயன்றார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் சுமார் 15 நீதிமன்றங்கள் இயங்கி வருகிறது. எப்பொழுதும் மிகவும் பரபரப்பாக காணப்படும் இந்த நீதிமன்ற வளாகம் நேற்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அமைதியாக காணப்பட்டது.

    இந்தநிலையில் மதியம் ஒரு வாலிபர் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் அலறயடித்தவாறு கோர்ட்டு வளாகத்தில் இருந்து வெளியே ஓடி வந்தார். இதைப்பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை காப்பாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

    இதற்கிடையே தீப்பற்றி எரிந்த உடலுடன் வந்த வாலிபர் சிறிது நேரத்தில் சுருண்டு விழுந்தார். இந்த சம்பவத்தில் அவர் பலத்த காயம் அடைந்து இருந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதற்கிடையே ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தீக்குளித்த நபர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா மந்தித்தோப்பு எம்.கே.டி.நகரை சேர்ந்த கனகராஜ் மகன் சந்திரசேகர் என்பது தெரிய வந்தது.

    இவர் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் ஒரு லாரி செட்டில் வேலை பார்ப்பதாகவும், இவர் மீதான இரண்டு வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வருவதாகவும், அவரது மனைவி கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார் என்றும் கூறப்படுகிறது.

    கோவில்பட்டியை சேர்ந்த இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் விடுமுறை என்று தெரிந்தும் எதற்காக வந்தார், தீக்குளிக்க காரணம் என்ன என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த சந்திரசேகர் இன்று காலை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    கோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கவுண்டம்பாளையம் போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.
    • தியா காயத்ரியின் கணவரிடமும், அவரது உறவினர்களிடமும் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை கவுண்டம்பாளையம் ஜவகர்நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது65). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

    இவருக்கு விமலா(55) என்ற மனைவியும், தியா காயத்ரி(25) என்ற மகளும் உள்ளனர். தியா காயத்ரி ஐ.டி. நிறுவன ஊழியராக பணியாற்றி வந்தார்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ந்தேதி தனது மகள் தியா காயத்ரிக்கு, வடவள்ளியை சேர்ந்த தீட்சித் என்பவருடன் திருமணம் நடந்தது. இவரும் ஐ.டி.யில் பணிபுரிந்து வருகிறார்.

    திருமணத்திற்கு பிறகு தியா காயத்ரி தனது கணவர் தீட்சித்துடன் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் திருமணம் ஆன சில மாதங்களிலேயே தியா காயத்ரிக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே அவர் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று கணேசனுக்கு, அவரது தம்பி பலமுறை போன் செய்துள்ளார். ஆனால் அவர் எடுக்கவில்லை. இதனால் அவர் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. தட்டிப்பார்த்தும் திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சியான அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

    அங்கு வீட்டில் உள்ள அறையில் கணேசன், அவரது மனைவி விமலா, மகள் தியா காயத்ரி ஆகியோர் இறந்த நிலையில் பிணமாக கிடந்தனர்.

    தகவல் அறிந்ததும் கவுண்டம்பாளையம் போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.

    முதற்கட்ட விசாரணையில், திருமணமான சில மாதங்களிலேயே தங்களது மகள் திரும்பி வந்ததால் பெற்றோர் மன வருத்தத்தில் இருந்ததும், அதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததும் தெரியவந்தது.

    இதற்காக அவர்கள் பேக்கரியில் சென்று கேக் வாங்கி வந்து, அதில் விஷத்தை தடவி 3 பேரும் சாப்பிட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் வீடு முழுவதும் ஏதாவது இருக்கிறதா என சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டிற்குள் உள்ள அறையில் தியா காயத்ரி கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது.

    அந்த கடிதத்தில் எங்களது சாவுக்கு காரணமான யாரையும் சும்மா விடாதீர்கள். அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்கள் என எழுதப்பட்டிருந்தது.

    கடிதத்தை கைப்பற்றி போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடிதத்தில் எழுதப்பட்டு உள்ள விவரங்கள் தொடர்பாக தியா காயத்ரியின் கணவரிடமும், அவரது உறவினர்களிடமும் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    திருமணம் ஆகி சில மாதங்களிலேயே தியா காயத்ரி தற்கொலை செய்துள்ளதால் அவரது மரணத்துக்கு வரதட்சணை கொடுமை காரணமாக இருக்கலாமா? என்ற கோணத்தில் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    • ஆற்றுக்குள் ஷீபா ஜாய் குதிப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
    • பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அவிட்டத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷீபா ஜாய். இவர் கருவண்ணூர் பகுதிக்கு வந்திருக்கிறார். பின்பு அங்குள்ள ஆற்றுப்பாலத்தில் தனது கைப்பை மற்றும் செல்போனை வைத்துவிட்டு, பாலத்தின் மேலே இருந்து ஆற்றுக்குள் குதித்தார். ஆற்றுக்குள் ஷீபா ஜாய் குதிப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்டநேர தேடுதலுக்கு பிறகு ஷீபா ஜாய் பிணமாக மீட்கப்பட்டார். இதே இடத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் ஆற்றுக்குள் குதித்து தற்கொலை செய்தார். மேலும் அந்த இடத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

    அது மட்டுமின்றி இந்த இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலிபரும், மாணவியும் ஆற்றில் குறித்து தற்கொலை செய்துகொண்டார்கள். ஆகவே இந்த இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படக் கூடாது.
    • ஆதரவளித்த அரசியல் பிரமுகர்கள் மீதும் தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வந்த பூவழகன் என்பவர், கந்துவட்டி கும்பலால் அவமரியாதை செய்யப்பட்டதால், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

    கந்துவட்டி கும்பலின் அட்டகாசம் பல ஆண்டுகளாகத் தொடரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் கந்து வட்டி தடை செய்யப்பட்டுள்ளது. அதை மதிக்காமல் கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படக் கூடாது. மருந்தாளுனர் பூவழகன் தற்கொலைக்கு காரணமான கந்துவட்டி மற்றும் சூதாட்டக் கும்பலை காவல்துறை கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். அவர்களுக்கு ஆதரவளித்த அரசியல் பிரமுகர்கள் மீதும் தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் நின்று தற்கொலைக்கு முயன்ற அவர் மீது ரெயில் மோதியது.
    • சுமார் 25 கி.மீ. தூரத்திற்கு பலியான வாலிபர் உடலுடன் ரெயில் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருமங்கலம்:

    தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று இரவு வழக்கம்போல் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு இன்று காலை 8 மணிக்கு மதுரை ஜங்ஷன் ரெயில் நிலையத்தை அடைந்தது. பின்னர் அங்கு பயணிகள் ஏறி, இறங்கியதும் 8.15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டது.

    இந்த ரெயில் அடுத்ததாக விருதுநகரில் மட்டுமே நின்று செல்லும். இதற்கிடையே மதுரையை கடந்த ரெயில் சுமார் 120 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்தது. திருப்பரங்குன்றம் ரெயில் நிலையத்தை அடுத்த கப்பலூர் பகுதியில் சென்ற போது வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் நின்று தற்கொலைக்கு முயன்ற அவர் மீது ரெயில் மோதியது.

    ஆனாலும் உடனடியாக வேகத்தை குறைக்க முடியாத சூழலில் அதே வேகத்தில் ரெயில் சென்றுகொண்டிருந்தது. திருமங்கலம் ரெயில் நிலையத்திலும் ரெயில் நிற்காமல் அதே வேகத்தில் சென்றது. அந்த சமயம் ரெயில் நிலையத்தில் பணியில் இருந்த ஸ்டேசன் மாஸ்டர் திடீர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் கப்பலூர் அருகே மோதிய வாலிபர் உடல் ரெயிலின் முன்பகுதியில் சிக்கியிருந்தது.

    கால்கள் துண்டாகி சிதைந்துபோன நிலையில் தலை மற்றும் உடலுடன் அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றதால் அதிர்ந்துபோன திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் உடனடியாக அடுத்ததாக உள்ள கள்ளிக்குடி ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் அந்தியோதயா ரெயில் கள்ளிக்குடி வந்தபோது தயார் நிலையில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் போலீசார் ரெயிலை நிறுத்தினர். பின்னர் ரெயிலின் முன்பகுதியில் சிக்கியிருந்த வாலிபர் உடலை சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ரெயில் மோதிய இடமான கப்பலூர் பகுதியில் இருந்து கள்ளிக்குடி வரை சுமார் 25 கி.மீ. தூரத்திற்கு பலியான வாலிபர் உடலுடன் ரெயில் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தற்கொலைக்கு முயன்ற அந்த வாலிபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்தியோதயா ரெயில் அரை மணி நேரத்திற்கும் மேலாக நாகர்கோவிலுக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது.

    • பண்டிகைகளின் போது பம்பர் குலுக்கல் நடத்தப்படும்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் அரசு சார்பில் லாட்டரி சீட்டு விற்பனை நடத்தப்படுகிறது. புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ஓணம் உள்ளிட்ட பண்டிகைகளின் போது பம்பர் குலுக்கல் நடத்தப்படும். இதில் முதல் பரிசுத்தொகை கோடிகளில் வழங்கப்படும்.

    மேலும் ஏராளமானோருக்கு லட்சங்கள் மற்றும் ஆயிரங்களிலும் பரிசுத் தொகை கிடைக்கும். இதனால் கேரளாவில் பம்பர் பரிசு குலுக்கல் நடக்கும் போது, அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, கேரளாவுக்கு சுற்றுலா வரக்கூடிய தமிழகம் உள்ளிட்ட பிற மாநில மக்களும் பம்பர் குலுக்கல் லாட்டரிகளை வாங்குவார்கள்.

    அவ்வாறு வாங்கிச் செல்பவர்கள் பம்பர் பரிசையும் வென்றிருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள லாட்டரியில் ரூ.70 லட்சம் பரிசு பெற்ற வியாபாரி ஒருவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.


    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் நெல்லிக்குன்னு பகுதியை சேர்ந்தவர் விவேக் ஷெட்டி (வயது37). இவர் அதே பகுதியில் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று தனது கடைக்குள் விவேக் ஷெட்டி தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியதியதில், விவேக் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என்பது உடனடியாக தெரியவில்லை.

    கடந்த 4 மாதங்களுககு முன்பு தான் லாட்டரி மூலம் அவருக்கு ரூ.70 லட்சம் பரிசாக கிடைத்திருப்பதால், அவருக்கு பணப்பிரச்சினை எதுவும் இல்லை. அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    அப்படியென்றால் விவேக் எதற்காக தற்கொலை செய்தார்? என்று போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விவேக்கிற்கு ஆர்த்தி என்ற மனைவியும், அன்வி என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிகிச்சை பலனின்றி ஆனந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • ஆனந்தியின் தந்தை முத்துராமலிங்கம் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.

    மதுரை:

    மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த குபேந்திரன் என்பவரது மனைவி ஆனந்தி (வயது 26). கடந்த 2014 ஆம் ஆண்டு குபேந்திரனுக்கும், ஆனந்திக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக குபேந்திரன், மனைவி ஆனந்தியை பிரிந்து சென்று விட்டார். ஆனாலும் மாமியார் இருளாயி மருமகள் ஆனந்தியுடன் மிகுந்த பாசமாக இருந்து வந்தார். அவரும் கடந்த 2023 மார்ச் மாதம் இறந்துவிட்டார்.

    இதைத்தொடர்ந்து தன் மீது பாசமாக இருந்த மாமியார் கனவிலும், நேரடியாகவும் தோன்றி அழைப்பதாக கூறி ஆனந்தி அடிக்கடி அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் புலம்பி கொண்டிருந்தார். இதனால் அவரை கோவில்களுக்கு அழைத்து சென்று தண்ணீர் தெளித்தனர். மேலும் சாமியார்கள், மந்திரவாதிகளிடமும் அழைத்து சென்று மந்திரித்தும் வந்தனர்.

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஆனந்தி, பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு மாமியாரிடம் செல்வதாக கூறி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய நிலையில் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஆனந்தியின் தந்தை முத்துராமலிங்கம் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து இளம்பெண் ஆனந்தியின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
    • ஒரு பக்கம் பெற்றோர்கள், மற்றொரு மக்கள் பயிற்சி மையம் என நெருக்கடி கொடுப்பதால் மாணவர்கள் மனஅழுத்தம்.

    இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் கஷ்டப்படுகிறார்கள். எப்படியாவது மருத்துவராக வேண்டும் என நீட் தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்களை பெற்றோர்கள் அதிக அளவில் பணம் செலவழித்து நீட் தேர்வு மையத்தில் சேர்த்து விடுகிறார்கள்.

    இதை லாப நோக்கத்தில் பார்க்கும் தனியார் மையங்கள் நாட்டில் பெரும்பாலான இடங்களில் நீட் பயிற்சி மையத்தை அமைத்துள்ளன. இந்த பயிற்சி மையத்தில் லட்சக்கணக்கில் பணத்தை செலவழித்து தங்களது குழந்தைகளை பெற்றோர்கள் சேர்த்து விடுகிறார்கள். இந்த மையங்கள் தங்களது பெயர்களை நிலைநாட்ட, மாணவர்களை கசக்கி பிழிந்து எடுக்கிறார்கள்.

    நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் அதிகமாக உள்ளன. இதனால் பயிற்சி முனையமாக கோட்டா திகழ்கிறது. வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் அதிகமான அளவில் கோட்டாவில் உள்ள நீட் பயிற்சி மையங்களில் படித்து வருகிறார்கள். இவர்கள் இங்குள்ள விடுதிகளில் தங்கி படித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே பெற்றோர்களை பிரிந்து வந்து தனிமையில் தங்கியிருக்கும் மாணவர்களை, தங்களது மையம் முதன்மையாக விளங்க வேண்டும் என நினைக்கும் பயிற்சி மையங்கள் தேர்ச்சியை அதிகமாக காண்பிக்க படிபடி என நெருக்கடி கொடுக்கின்றன. இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் மனஅழுத்தத்தை எதிர்கொள்ள முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

    கடந்த வருடத்தில் மட்டும் கோட்டாவில் 26 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் கோட்டாவின் ஜவஹர் நகர் பகுதியில் தங்கிருந்து படித்து வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

    அவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பெற்றோர்கள் வந்ததும் அந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க ராஜஸ்தான் அரசு, பயிற்சி மையங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோபி கிருஷ்ணன் தீவிர தோனி ரசிகர் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறமான மஞ்சள் நிறத்தில் தனது வீட்டை மாற்றி பிரபலமடைந்தார்.
    • வீடு முழுவதும் தோனி படத்தை வரைந்துள்ளார்.

    அரங்கூர்:

    கடலூர் மாட்டம் திட்டக்குடி அடுத்த அரங்கூர் பகுதியை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன் (34). இவருக்கு அன்பரசி என்ற மனைவியும் கிஷோர், சக்திவேல் என்ற ஆண் குழந்தைகளும் பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தையும் உள்ளது.

    கோபி கிருஷ்ணன் தீவிர தோனி ரசிகர் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறமான மஞ்சள் நிறத்தில் தனது வீட்டை மாற்றி பிரபலமடைந்தார். மேலும் வீடு முழுவதும் தோனி படத்தை வரைந்துள்ளார்.

    இந்நிலையில், கோபிகிருஷ்ணன் இன்று அதிகாலையில் வீட்டில் தனது மனைவி சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    நேற்றிரவு கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் அதே பகுதியை சேர்ந்த சிலர் கோபிகிருஷ்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கோபிகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×