search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth suicie"

    • நீதிமன்ற வளாகத்தில் சந்திரசேகர் என்பவர் திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயன்றார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் சுமார் 15 நீதிமன்றங்கள் இயங்கி வருகிறது. எப்பொழுதும் மிகவும் பரபரப்பாக காணப்படும் இந்த நீதிமன்ற வளாகம் நேற்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அமைதியாக காணப்பட்டது.

    இந்தநிலையில் மதியம் ஒரு வாலிபர் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் அலறயடித்தவாறு கோர்ட்டு வளாகத்தில் இருந்து வெளியே ஓடி வந்தார். இதைப்பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை காப்பாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

    இதற்கிடையே தீப்பற்றி எரிந்த உடலுடன் வந்த வாலிபர் சிறிது நேரத்தில் சுருண்டு விழுந்தார். இந்த சம்பவத்தில் அவர் பலத்த காயம் அடைந்து இருந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதற்கிடையே ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தீக்குளித்த நபர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா மந்தித்தோப்பு எம்.கே.டி.நகரை சேர்ந்த கனகராஜ் மகன் சந்திரசேகர் என்பது தெரிய வந்தது.

    இவர் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் ஒரு லாரி செட்டில் வேலை பார்ப்பதாகவும், இவர் மீதான இரண்டு வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வருவதாகவும், அவரது மனைவி கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார் என்றும் கூறப்படுகிறது.

    கோவில்பட்டியை சேர்ந்த இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் விடுமுறை என்று தெரிந்தும் எதற்காக வந்தார், தீக்குளிக்க காரணம் என்ன என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த சந்திரசேகர் இன்று காலை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    கோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுவை அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மாயமான வாலிபர் முந்திரி தோப்பில் பிணமாக தொங்கினார்.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான சின்ன கோட்டக்குப்பம் காலனியை சேர்ந்தவர் சதீஷ் (வயது31). கூலித்தொழிலாளி. இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று சதீஷ்க்கும் அவரது மனைவி ஜெயஸ்ரீக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது, இதையடுத்து மனைவியுடன் கோபித்து கொண்டு சதீஷ் மோட்டார் சைக்கிளில் வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

    இதையடுத்து சதீஷ் மாயமானது குறித்து அவரது தாய் மங்கலட்சுமி கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ஆரோவில் போலீஸ் நிலையத்திற் குட்பட்ட முந்திரி தோப்பில் முந்திரி கொட்டை பொறுக்க நேற்று காலை சிறுவர்கள் சென்றனர். அப்போது ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு சிறுவர்கள் இதனை தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து சிறுவர்களின் பெற்றோர் இதுபற்றி ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தூக்கில் பிணமாக தொங்கியவர் மாயமாகி இருந்த சின்ன கோட்டக்குப்பம் காலனியை சேர்ந்த சதீஷ் என்பது தெரியவந்தது. அருகில் அவரது மோட்டார் சைக்கிளும் கிடந்தது. உடல் அழுகிய நிலையில் இருந்தது.

    மனைவியுடன் தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய சதீஷ் சம்பவத்தன்றே முந்திரிதோப்பில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×