என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்ரீவில்லிபுத்தூர்"
- ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண திருப்பதி வெங்கடாசலபதி, தனது பரிவாரங்களுடன் திருவில்லிபுத்தூர் வந்து கொண்டிருந்தார்.
- வழக்கில் இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் சக்தி இந்த பெருமாளுக்கு உண்டு என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலுக்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் மலை மீது இந்த கோவில் அமைந்துள்ளது.
ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண திருப்பதி வெங்கடாசலபதி, தனது பரிவாரங்களுடன் திருவில்லிபுத்தூர் வந்து கொண்டிருந்தார். அப்போது இந்த தலத்தை கடந்தபோது நாரதர், ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாணம் முடிந்துவிட்டது என்று கூறினார். இதையடுத்து திருப்பதிக்கு திரும்ப முடிவு செய்தார், வெங்கடாசலபதி. எனினும் ஆண்டாள் அவரை தடுத்து, இத்தலத்தில் தங்கி தனக்கும், இங்குள்ள மக்களுக்கும் அருள்பாலிக்குமாறு வேண்டிக் கொண்டாள்.
ஆண்டாளின் வேண்டுக்கோளை ஏற்று, இந்த மலையின் உச்சியிலேயே தங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார், வெங்கடாசலபதி.
திருப்பதி கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து பெருமாளுக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை செலுத்துகின்றனர். ஆதலால் இந்த தலத்தை 'தென்திருப்பதி' எனவும் பக்தர்கள் அழைப்பர்.
மலையின் மேல் உள்ள பெருமாள் சன்னிதியை அடைய 150-க்கும் மேற்பட்ட படிகளை ஏறி செல்ல வேண்டும். இங்குள்ள பெருமாள் ஒன்பதடி உயர திருமேனியுடன் அற்புதமாக காட்சி தருகிறார். திருப்பதியில் இருப்பது போன்றே நின்ற கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
ஆலயத்தில் கருடாழ்வார், நரசிம்மர், கிருஷ்ணர் ஆகியோர் உள்பட பல்வேறு சன்னிதிகள் இங்குள்ளன. மலை அடிவாரத்தில் தாமரை மலர்கள் நிறைந்த 'கோனேரி தீர்த்தம்' உள்ளது. இந்த தீர்த்தத்தில் குளித்தால் சகல பாவங்களில் இருந்தும் விடுபடலாம் என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.
வழக்கில் இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் சக்தி இந்த பெருமாளுக்கு உண்டு என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஆதலால் வழக்கில் ஏதேனும் செல்வத்தை இழக்கும் சூழ்நிலை வந்தால் பக்தர்கள் இந்த குன்றின் மேல் உள்ள பெருமாளை மனமுருக வேண்டுகின்றனர். அவர்களின் வேண்டுதல்களும் உடனே நிறைவேறி விடும். திருப்பதியை போல பக்தர்கள் நேர்த்திக்கடனாக முடி இறக்க இங்கு வருகின்றனர். இந்த கோவிலில் கோ தானம் செய்வது சிறப்பு.
இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் விளையும் முதல் விளைப்பொருட்களான நெல், பருத்தி, மிளகாய் மற்றும் பயறு வகைகளை சீனிவாச பெருமாளுக்கு காணிக்கையாக செலுத்துவர். இந்த கோவிலில் உள்ள பெருமாளை வேண்டினால் சகல பாக்கியங்களையும் தந்து வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும் என பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போல மாதந்தோறும் பவுர்ணமியன்று கருடசேவை நிகழ்ச்சி நடக்கும். சாதி, மதம் பேதமின்றி அனைவருக்கும் இந்த பெருமாள் குல தெய்வமாக விளங்குகிறார்.
இந்த கோவில் நடை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து இருக்கும். 3 கால பூஜைகள் நடைபெறுகிறது.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விடுமுறை.
- அதனை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி வேலை நாட்களாக அறிவிப்பு.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு வரும் 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி வேலை நாட்களாக அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா.
- ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் கோவில் அர்ச்சகர்களின் ஆபாச நடன வீடியோ வெளியாகி சர்ச்சையானது.
- உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம், தற்காலிக அர்ச்சகர்கள் வினோத், கணேசன் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக பணிக்கு வந்த அர்ச்சகர்கள் ஆபாச நடனமாடிய வீடியோ வெளியாகி சர்ச்சையானது.
கோவில் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம், தற்காலிக அர்ச்சகர்கள் வினோத், கணேசன் ஆகியோர் வீட்டில் மது அருந்து ஆபாச நடனம் ஆடினர்.
அர்ச்சகர்களின் இந்த செயலால் அதிருப்தி அடைந்த பக்தர்கள் அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இந்த நிலையில் தற்காலிக அர்ச்சகர்கள் உட்பட 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம், தற்காலிக அர்ச்சகர்கள் வினோத், கணேசன் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பெரிய மாரியம்மன் கோவிலில் பணி நீக்கம் செய்யப்பட்ட 3 பேரும் பூஜையில் ஈடுபடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
மது அருந்திவிட்டு ஆபாச நடனமாடிய கோவில் அர்ச்சகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- பூக்குழி திருவிழா நாளை நடக்கிறது.
- நாளை மறுநாள் தேரோட்டத்துடன் விழா நிறைவடைகிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவில் ஸ்ரீவில்லிபுத்தூரின் மையப்பகுதியில் ஆண்டாள் கோவிலுக்கு வடக்கு புறத்தில் இருக்கிறது.
இந்த கோவிலில் மூலவராக பெரிய மாரியம்மன், வடக்கு நோக்கி வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோவிலுக்கு விருது நகர் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் எண்ணற்ற பக்தர்கள் வருகின்றனர்.

இந்த கோவிலில் கருப்பசாமி, வீரபத்திரர், துர்க்கை, பைரவர், சப்தகன்னியர், வராகி அம்மன் ஆகியோர் தனி சன்னிதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
குழந்தை வரம் கேட்டு இந்தக் கோவிலுக்கு எண்ணற்ற பேர் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் தங்களது கணவருடன் சேர்ந்து இந்தக் கோவிலில் உள்ள மரத்தில் தொட்டில் கட்டி அம்மனை வழிபடுகின்றனர்.
கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், தங்களின் குறை நீங்க வேண்டும் என்பதற்காக அம்மனை வேண்டி கண்மலர் வாங்கி போட்டு தரிசனம் செய்கின்றனர். அதேபோல திருமணத்தடை, தோல் வியாதி உள்ளவர்களும் இங்குள்ள அம்மனை மனமுருக வேண்டிச் செல்கின்றனர்.
இவர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய மறு வருடம், கோவிலில் நடைபெறும் பூக்குழி திருவிழாவில் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இதனால் ஆண்டுதோறும் தீமிதி திருவிழாவில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது.
இந்தக் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு குல தெய்வ வழிபாடு, பவுர்ணமி சிறப்பு பூஜை, பஞ்சமி திதி அன்று வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், நவராத்திரி உற்சவம் என ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன.
இருப்பினும் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் பூக்குழி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு பூக்குழி திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டத்துடன் விழா நிறைவடைகிறது.
இந்த கோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையம் அருகே மதுரை செல்லும் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது.
- தேவர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மரியாதை செலுத்தினார்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகாசி
முத்துராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவையொட்டி விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசி அருகே திருத்தங்கல்லில் உள்ள தேவர் சிலைக்கு அ.தி.மு.க அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன், மாவட்ட பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ், கருப்பசாமி.
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் கிழக்கு பகுதி செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, மேற்கு பகுதி செயலாளர் சரவணகுமார், மாவட்ட மீனவர் அணி செயலாளர் காசிராஜன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சி முருகன் திருத்தங்கல் கூட்டுறவு வங்கி தலைவர் ரமணா, வெம்பக்கோட்டை முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ்பாண்டியன், மணிகண்டன் உள்ளிட்ட அ.தி.மு.க. மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- திருமங்கலம், உசிலம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், கமுதியில் குருத்தோலை பவனி நடந்தது.
- வருகிற 7-ந் தேதி புனித வெள்ளி யாகவும், 9-ந் தேதி ஈஸ்டர் நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.
திருமங்கலம்
கிறிஸ்தவர்களின் தவக்காலத்து முக்கிய நிகழ்ச்சியான குருத்தோலை பவனி இன்று நடந்தது. திருமங்கலம் அமல அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்த னையுடன் தொடங்கிய குருத்தோலை ஞாயிறு பவனியில் பங்கு தந்தை யர்கள், போதகர்கள் மற்றும் சபைகளின் நிர்வாகிகள் முன்னிலையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
குருத்தோலைகளை ஏந்தியபடி ஓசன்னா பாடல் பாடியபடி திருமங்கலம் நகரில் பவனியாக சென்ற னர். பின்னர் தங்களது தேவாலயங்களுக்கு சென்று குருத்தோலை ஞாயிறு தொடர்பான சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

உசிலம்பட்டியில் நடந்த குருத்தோலை பவனி.
ஆர்.சி. தேவாலய பங்கு தந்தை ஜெய் ஜோசப், டி.இ.எல்.சி. சபைகுரு சார்லஸ் ஐசக் ராஜ், சி.எஸ்.ஐ. போதகர் ஜான்சன் கார்டார் மற்றும் சபையினர், கிறிஸ்தவர்கள் குருத் தோலையுடன் ஊர்வலமாக சென்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குருத்தோலை பவனி நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் தேவா லயத்தில் குருத்தோலை ஊர்வலம் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
கிறிஸ்தவர்கள் தேவால யத்தில் ஒன்றுகூடி குருத்தோ லைகளை கைகளில் ஏந்திய படி ஓசன்னா பாடல்கள் பாடி கிராமத்திலுள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஊர்வலத்திற்கு சபைகுரு அருள்தன ராஜ் தலைமை தாங்கினார். உதவிக்குரு ஜெபராஜ் எபினேசர் மற்றும் சபை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கமுதியில் குருத்தோலை பவனி நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், கிறிஸ்துவர்கள் குருத்தோலை ஏந்தி பவனி வந்தனர். சவேரியார் தெரு, அந்தோணியார் தெருவில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், கருவாட்டு பேட்டை பகுதியில் இருந்து குருத் தோலைகளை ஏந்தி பவனி வந்தனர். பின்னர் புனித அந்தோணியார் ஆலயத்தை வந்தடைந்தனர். அங்கு நடந்த சிறப்பு திருப்பலியில், அனைவரும் கலந்து கொண்டனர். வருகிற 7-ந் தேதி புனித வெள்ளி யாகவும், 9-ந் தேதி ஈஸ்டர் நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.
- ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடந்தது.
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
75-வது சுந்திர தின விழா, வள்ளலாரின் 200-வது பிறந்த நாள், அம்பேத்கர் பிறந்தநாள் விழா ஆகியவற்றை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடந்தது. ராமகிருஷ்ணபுரத்தில் தொடங்கிய பேரணி, பெரியமாரியம்மன் கோயில், சர்ச் சந்திப்பு, தேரடி மற்றும் 4 ரத வீதிகள் வழியாக சென்று வடக்கு ரத வீதியில் பேரணி நிறைவடைந்தது. அதை தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் ஆர்.எஸ்.எஸ். பிராந்த சக சேவா பிரமுக் முருகன், மாவட்ட தலைவர் விஜயராகவன், ஜில்லா காரியவாக் ஜெயபாலன், விஸ்வ இந்து பரிசத் தென்மாநில அமைப்பாளர் சரவண கார்த்திக், பா.ஜ.க. மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் பேசினர். போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் 450-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரத்த தான முகாம் நடந்தது.
- 96 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் பசும்பொன் தேவர் மேல்நிலைப்பள்ளி யில் அனைத்து இளைஞர் அமைப்பு கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. மம்சாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கலா, ராஜபாளையம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மருத்துவர் கிரிஜா, தேவர் மகாசபை தலைவர் சித்தானந்தன், செயலாளர் காளிமுத்து, பசும்பொன் தேவர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வீரய்யா, சுசீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் 96 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் ஆகியோர் செய்தனர்.
- அந்த வீட்டு முன்பு காய்கறிகளை பரப்பி வைத்து ஆண்டாளுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர்.
- ஆண்டாளுக்கு பெருமாளுடன் திருமணம் நடக்கும் முன் அவளுக்கும் இவ்வாறு கொடுத்தனர் அக்கால மக்கள்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில், மார்கழியின் பகல்பத்து திருநாளின் முதல்நாள், ஆண்டாள் தம் பிறப்பிட வம்சாவழியினரான வேதபிரான்பட்டர் வீட்டிற்கு செல்வாள்.
அந்த வீட்டு முன்பு காய்கறிகளை பரப்பி வைத்து ஆண்டாளுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர்.
இதனை, "பச்சைப்பரத்தல்" என்பர்.
கொண்டைக்கடலை, சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட திரட்டுப்பால், மணிப்பருப்பு நைவேத்யத்தை ஆண்டாளுக்கு படைக்கின்றனர்.
திருமணம் முடிக்கும் பெண்கள் இதைச் சாப்பிட்டால் ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும்.
ஆண்டாளுக்கு பெருமாளுடன் திருமணம் நடக்கும் முன் அவளுக்கும் இவ்வாறு கொடுத்தனர் அக்கால மக்கள்.
அதன் நினைவாக இன்றும் இவ்வழக்கம் தொடர்கிறது.
- நீதிமன்ற வளாகத்தில் சந்திரசேகர் என்பவர் திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயன்றார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் சுமார் 15 நீதிமன்றங்கள் இயங்கி வருகிறது. எப்பொழுதும் மிகவும் பரபரப்பாக காணப்படும் இந்த நீதிமன்ற வளாகம் நேற்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அமைதியாக காணப்பட்டது.
இந்தநிலையில் மதியம் ஒரு வாலிபர் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் அலறயடித்தவாறு கோர்ட்டு வளாகத்தில் இருந்து வெளியே ஓடி வந்தார். இதைப்பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை காப்பாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
இதற்கிடையே தீப்பற்றி எரிந்த உடலுடன் வந்த வாலிபர் சிறிது நேரத்தில் சுருண்டு விழுந்தார். இந்த சம்பவத்தில் அவர் பலத்த காயம் அடைந்து இருந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதற்கிடையே ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தீக்குளித்த நபர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா மந்தித்தோப்பு எம்.கே.டி.நகரை சேர்ந்த கனகராஜ் மகன் சந்திரசேகர் என்பது தெரிய வந்தது.
இவர் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் ஒரு லாரி செட்டில் வேலை பார்ப்பதாகவும், இவர் மீதான இரண்டு வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வருவதாகவும், அவரது மனைவி கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார் என்றும் கூறப்படுகிறது.
கோவில்பட்டியை சேர்ந்த இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் விடுமுறை என்று தெரிந்தும் எதற்காக வந்தார், தீக்குளிக்க காரணம் என்ன என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த சந்திரசேகர் இன்று காலை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடுவதை பக்தர்கள் ஆச்சரியம் கலந்த வியப்புடன் பார்த்தனர்.
- உருண்டை இடிப்பதற்கு பெண்கள் நேர்த்தி கடன் மேற்கொண்டு பயபக்தியுடன் தயார் செய்து கொடுப்பர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசி மாதம் நடைபெறும் சிவராத்திரி திருவிழா அன்று நள்ளிரவில் வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு கடந்த 101 வருடங்களுக்கு மேலாக நடப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு சிவராத்தியை முன்னிட்டு அதே பகுதியை சேர்ந்த முத்தம்மாள் என்ற 92 வயது மூதாட்டி மற்றும் கோவில் பூசாரிகள் நேற்று இரவு கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பத்தை சுட்டனர். இதை காண்பதற்காக சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கோவிலில் திரண்டனர்.
கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடுவதை பக்தர்கள் ஆச்சரியம் கலந்த வியப்புடன் பார்த்தனர். 7 ஊர்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 7 கூடைகளில் அப்பம் சுட்டு பின்பு பக்தர்களுக்கு வழங்குவார்கள். முன்னதாக பாசிப் பயிறு, தட்டாம் பயிறு, கருப்பட்டி ஆகியவைகளை உரலில் போட்டு இடித்து அப்பத்திற்கு தேவையான இனிப்பு உருண்டை செய்யப்படும். இந்த உருண்டை இடிப்பதற்கு பெண்கள் நேர்த்தி கடன் மேற்கொண்டு பயபக்தியுடன் தயார் செய்து கொடுப்பர்.
மகா சிவராத்தரி அன்று நடைபெறும் இந்த பூஜையில் விரதம் இருந்து கலந்து கொண்டு அப்பத்தை வாங்கி உண்டால் உடலில் இருக்கின்ற எல்லா நோய்களும் சரியாகிவிடும் என்றும், எவ்வித நோயும் வராது என்பதும், குழந்தை இல்லாத தம்பதியினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூதாட்டியிடம் ஆசி பெற்று அப்பம் வாங்கி உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
இதற்கான நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் அப்பத்தை பிரசாதமாக வாங்கி சென்றனர்.
கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் மூதாட்டி முத்தம்மாள் கடந்த 61 வருடங்களாக சிவராத்தியன்று விரதம் இருந்து இதனை செய்து வருகிறார்.
- உற்சவரான பெருமாள், பேண்ட்- சட்டை அணிந்து காட்சி தருகிறார்.
- காலில் செருப்பும் அணிந்திருக்கிறார்.
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில் மூலவரான ரெங்கமன்னார் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்கிறார். தாயார் ஆண்டாள் என்ற திருநாமத்துடனும், கோதைநாச்சி என்ற பெயருடனும் அருள்பாலிக்கிறார். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இந்த ஆலயம் 90-வது தலமாக திகழ்கிறது.
இவ்வாலயத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஆகிய மூவரும் ஒரே ஸ்தானத்தில் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டுமே. இங்குள்ள உற்சவரான பெருமாள், பேண்ட்- சட்டை அணிந்து காட்சி தருகிறார்.
திருவில்லிபுத்தூரில் உள்ள ரெங்கமன்னார், வலது கையில் பெந்துகோல் (தற்காப்பு கோல்), இடது கையில் செங்கோல், இடுப்பில் உடைவாள் வைத்து ராஜகோலத்தில் இருக்கிறார். காலில் செருப்பும் அணிந்திருக்கிறார்.






