search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்.எஸ்.எஸ். பேரணி
    X

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்.எஸ்.எஸ். பேரணி

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடந்தது.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    75-வது சுந்திர தின விழா, வள்ளலாரின் 200-வது பிறந்த நாள், அம்பேத்கர் பிறந்தநாள் விழா ஆகியவற்றை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடந்தது. ராமகிருஷ்ணபுரத்தில் தொடங்கிய பேரணி, பெரியமாரியம்மன் கோயில், சர்ச் சந்திப்பு, தேரடி மற்றும் 4 ரத வீதிகள் வழியாக சென்று வடக்கு ரத வீதியில் பேரணி நிறைவடைந்தது. அதை தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் ஆர்.எஸ்.எஸ். பிராந்த சக சேவா பிரமுக் முருகன், மாவட்ட தலைவர் விஜயராகவன், ஜில்லா காரியவாக் ஜெயபாலன், விஸ்வ இந்து பரிசத் தென்மாநில அமைப்பாளர் சரவண கார்த்திக், பா.ஜ.க. மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் பேசினர். போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் 450-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×