search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமங்கலம், உசிலம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், கமுதியில் குருத்தோலை பவனி
    X

    திருமங்கலத்தில் நடந்த குருத்தோலை பவனியில் பங்கேற்ற பெண்கள்.

    திருமங்கலம், உசிலம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், கமுதியில் குருத்தோலை பவனி

    • திருமங்கலம், உசிலம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், கமுதியில் குருத்தோலை பவனி நடந்தது.
    • வருகிற 7-ந் தேதி புனித வெள்ளி யாகவும், 9-ந் தேதி ஈஸ்டர் நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

    திருமங்கலம்

    கிறிஸ்தவர்களின் தவக்காலத்து முக்கிய நிகழ்ச்சியான குருத்தோலை பவனி இன்று நடந்தது. திருமங்கலம் அமல அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்த னையுடன் தொடங்கிய குருத்தோலை ஞாயிறு பவனியில் பங்கு தந்தை யர்கள், போதகர்கள் மற்றும் சபைகளின் நிர்வாகிகள் முன்னிலையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    குருத்தோலைகளை ஏந்தியபடி ஓசன்னா பாடல் பாடியபடி திருமங்கலம் நகரில் பவனியாக சென்ற னர். பின்னர் தங்களது தேவாலயங்களுக்கு சென்று குருத்தோலை ஞாயிறு தொடர்பான சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.


    உசிலம்பட்டியில் நடந்த குருத்தோலை பவனி.

    உசிலம்பட்டியில் இன்று கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஊர்வலம் நடத்தினர். ஆர்.சி. சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து ஊர்வலம் தொடங்கியது.

    ஆர்.சி. தேவாலய பங்கு தந்தை ஜெய் ஜோசப், டி.இ.எல்.சி. சபைகுரு சார்லஸ் ஐசக் ராஜ், சி.எஸ்.ஐ. போதகர் ஜான்சன் கார்டார் மற்றும் சபையினர், கிறிஸ்தவர்கள் குருத் தோலையுடன் ஊர்வலமாக சென்றனர்.


    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குருத்தோலை பவனி நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் தேவா லயத்தில் குருத்தோலை ஊர்வலம் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    கிறிஸ்தவர்கள் தேவால யத்தில் ஒன்றுகூடி குருத்தோ லைகளை கைகளில் ஏந்திய படி ஓசன்னா பாடல்கள் பாடி கிராமத்திலுள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஊர்வலத்திற்கு சபைகுரு அருள்தன ராஜ் தலைமை தாங்கினார். உதவிக்குரு ஜெபராஜ் எபினேசர் மற்றும் சபை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    கமுதியில் குருத்தோலை பவனி நடந்தது.

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், கிறிஸ்துவர்கள் குருத்தோலை ஏந்தி பவனி வந்தனர். சவேரியார் தெரு, அந்தோணியார் தெருவில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், கருவாட்டு பேட்டை பகுதியில் இருந்து குருத் தோலைகளை ஏந்தி பவனி வந்தனர். பின்னர் புனித அந்தோணியார் ஆலயத்தை வந்தடைந்தனர். அங்கு நடந்த சிறப்பு திருப்பலியில், அனைவரும் கலந்து கொண்டனர். வருகிற 7-ந் தேதி புனித வெள்ளி யாகவும், 9-ந் தேதி ஈஸ்டர் நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

    Next Story
    ×