search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள லாட்டரி"

    • பண்டிகைகளின் போது பம்பர் குலுக்கல் நடத்தப்படும்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் அரசு சார்பில் லாட்டரி சீட்டு விற்பனை நடத்தப்படுகிறது. புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ஓணம் உள்ளிட்ட பண்டிகைகளின் போது பம்பர் குலுக்கல் நடத்தப்படும். இதில் முதல் பரிசுத்தொகை கோடிகளில் வழங்கப்படும்.

    மேலும் ஏராளமானோருக்கு லட்சங்கள் மற்றும் ஆயிரங்களிலும் பரிசுத் தொகை கிடைக்கும். இதனால் கேரளாவில் பம்பர் பரிசு குலுக்கல் நடக்கும் போது, அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, கேரளாவுக்கு சுற்றுலா வரக்கூடிய தமிழகம் உள்ளிட்ட பிற மாநில மக்களும் பம்பர் குலுக்கல் லாட்டரிகளை வாங்குவார்கள்.

    அவ்வாறு வாங்கிச் செல்பவர்கள் பம்பர் பரிசையும் வென்றிருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள லாட்டரியில் ரூ.70 லட்சம் பரிசு பெற்ற வியாபாரி ஒருவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.


    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் நெல்லிக்குன்னு பகுதியை சேர்ந்தவர் விவேக் ஷெட்டி (வயது37). இவர் அதே பகுதியில் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று தனது கடைக்குள் விவேக் ஷெட்டி தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியதியதில், விவேக் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என்பது உடனடியாக தெரியவில்லை.

    கடந்த 4 மாதங்களுககு முன்பு தான் லாட்டரி மூலம் அவருக்கு ரூ.70 லட்சம் பரிசாக கிடைத்திருப்பதால், அவருக்கு பணப்பிரச்சினை எதுவும் இல்லை. அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    அப்படியென்றால் விவேக் எதற்காக தற்கொலை செய்தார்? என்று போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விவேக்கிற்கு ஆர்த்தி என்ற மனைவியும், அன்வி என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாலக்காட்டில் விற்பனையான லாட்டரி சீட்டை வாங்கியவர்கள் யார் என்பது தெரியாமல் இருந்தது.
    • பெண் துப்புரவு பணியாளர்கள் குழு, இதற்கு முன் ஓணம் பம்பர் லாட்டரியில் 7,500 ரூபாய் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலத்தில் அந்த மாநில அரசு சார்பில் லாட்டரி விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் விற்பனை செய்யப்படும் லாட்டரி சீட்டுகளுக்கு பம்பர் பரிசு கோடிகள் மற்றும் லட்சங்களில் வழங்கப்படும்.

    இதனால் கேரள மாநில மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா செல்லக்கூடிய தமிழக மற்றும் பிற மாநில சுற்றுலா பயணிகளும் கேரள லாட்டரி சீட்டுகளை வாங்குவார்கள். இந்நிலையில் பருவமழைக்கால லாட்டரி சீட்டுகள் விற்பனை நடந்து வந்தது.

    அதில் பம்பர் பரிசாக ரூ.10 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இரண்டாம் பரிசு பெறுபவர்களுக்கும் கோடிக்கணக்கில் பரிசு அறிவிக்கப்பட்டது. பருவமழைக்கால லாட்டரி விற்பனை திட்டத்தில் விற்பனைக்காக 27 லட்சம் லாட்டரி டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டன.

    ஒரு டிக்கெட் ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது. பம்பம் பரிசு 10 கோடி ரூபாய் என்பதால் லாட்டரி சீட்டுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் பருவ மழைக்கால லாட்டரி சீட்டு குலுக்கல் முடிவுகள் நேற்றுமுன்தினம் (26-ந்தேதி) வெளியிடப்பட்டது.

    அதில் எம்.பி. 200261 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு பம்பர் பரிசான ரூ.10 கோடி விழுந்தது. பாலக்காட்டில் விற்பனையான அந்த லாட்டரி சீட்டை வாங்கியவர்கள் யார் என்பது தெரியாமல்இருந்தது. இந்நிலையில் அந்த லாட்டரி சீட்டை பெண் துப்புரவு பணியாளர்கள் 11 பேர் சேர்ந்து வாங்கியது தெரியவந்தது.

    மலப்புரம் மாவட்டம் பரப்பனகாடி நகராட்சியில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிந்து வரும் அவர்கள், சம்பவத்தன்று ஒரு இடத்தில் குழுவாக நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர், லாட்டரி சீட்டு வாங்குமாறு கூறியிருக்கிறார். ஆனால் ஒரு டிக்கெட்டின் விலை 250 ரூபாய் என்று கூறினார்.

    இதனைக்கேட்ட துப்புரவு பணியாளர்கள் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் அனைவரும் இணைந்து ஒரே ஒரு லாட்டரி டிக்கெட் வாங்க முடிவு செய்தனர். அதன்படி 9 பேர் தலா 25 ரூபாயும், ஒருவர் மட்டும் 50 ரூபாயும் போட்டு லாட்டரி டிக்கெட் வாங்கினர்.

    இறுதியில் அவர்களுக்கே பம்பர் பரிசான 10கோடி ரூபாய் விழுந்துவிட்டதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். பம்பர் பரிசை வென்ற அவர்களுக்கு, நகராட்சி அதிகாரிகள் மற்றும் சக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்த பெண் துப்புரவு பணியாளர்கள் குழு, இதற்கு முன் ஓணம் பம்பர் லாட்டரியில் 7,500 ரூபாய் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சப்ளையராக வேலை பார்த்து வருபவர் செல்வராஜ் (50).
    • கேரள மாநில லாட்டரி சீட்டுகள் 4- ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம், பவானி புது பஸ் நிலையம் அருகில் உள்ள ஓட்டல் ஒன்றில் சப்ளையராக வேலை பார்த்து வருபவர் செல்வராஜ் (50). இவரிடம் பவானி, கல் தொழிலாளர் வீதியை சேர்ந்த குமார் (36) என்பவர் வெள்ளைத்தாளில் எண்களை எழுதி, கேரள மாநில லாட்டரிச் சீட்டு என கூறி செல்வராஜிடம் பல முறை விற்பனை செய்துள்ளார்.

    இதுகுறித்து, செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் பவானி போலீசார் வழக்குப் பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.மேலும் அவரிடமிருந்து கேரள மாநில லாட்டரி சீட்டுகள் 4- ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு லாட்டரி சீட்டு விற்க வந்த போது சுமை தூக்கும் தொழிலாளி பாபுலால் இருந்தார்.
    • முதல் பரிசான ரூ.75 லட்சம் சுமை தூக்கும் தொழிலாளி பாபுலால் கடனாக வாங்கிய சீட்டுக்கு கிடைத்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாபுலால் (வயது 55).

    சுமை தூக்கும் தொழிலாளியான இவர் ஆற்றின் குழியில் உள்ள சி.ஐ.டி.யூ. சங்க அலுவலகத்தில் உறுப்பினராக உள்ளார்.

    அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்கும் பெண் ஒருவர் ஒவ்வொரு நாளும் இங்கு லாட்டரி சீட்டு விற்பனை செய்ய வருவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுபோல லாட்டரி சீட்டு விற்க வந்த போது அங்கு சுமை தூக்கும் தொழிலாளி பாபுலால் இருந்தார். அவரிடம் 2 லாட்டரி சீட்டு வாங்கும் படி அந்த பெண் கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை எனக்கூறி அந்த சீட்டுக்களை கடனாக வாங்கி கொண்டார்.

    கடனாக வாங்கிய லாட்டரி சீட்டின் குலுக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதல் பரிசான ரூ.75 லட்சம் சுமை தூக்கும் தொழிலாளி பாபுலால் கடனாக வாங்கிய சீட்டுக்கு கிடைத்தது.

    இதனை அறிந்து அவர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார். இந்த பணத்தை கொண்டு குடும்பத்தை காப்பாற்றுவேன் என்றார்.

    • வேலைக்கு செல்லும் வழியில் சோட்டாக் கணிக்கரையில் சாலையோர லாட்டரி கடையில் ஒரு சீட்டு வாங்கியதாக கூறினார்.
    • விபரம் தெரியவந்ததும் தன்னை யாராவது தாக்கி பரிசு விழுந்த சீட்டை பறித்து சென்று விடுவார்களோ என பயப்படுவதாக தொழிலாளி கூறினார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மூவாற்று புழா பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு வடமாநில தொழிலாளி ஒருவர் பதறியபடி ஓடி வந்தார்.

    போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார் அவரை ஆசுவாசப்படுத்தி மூச்சிறைக்க ஓடி வந்ததன் காரணம் பற்றி விசாரித்தனர். அப்போது அவர் தனது பெயர் எஸ்.கே. படேஷ், கொல்கத்தாவில் இருந்து இங்கு கூலி வேலைக்கு வந்ததாக தெரிவித்தார்.

    வேலைக்கு செல்லும் வழியில் சோட்டாக் கணிக்கரையில் சாலையோர லாட்டரி கடையில் ஒரு சீட்டு வாங்கியதாக கூறினார். தான் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசான ரூ.75 லட்சம் விழுந்திருப்பதாக கூறினார்.

    இது பற்றிய விபரம் தெரியவந்ததும் தன்னை யாராவது தாக்கி பரிசு விழுந்த சீட்டை பறித்து சென்று விடுவார்களோ என பயப்படுவதாக கூறினார். இதனால் இன்று இரவு போலீஸ் நிலையத்திலேயே தங்கி கொள்கிறேன் என்றும் கூறினார்.

    அவருக்கு ஆறுதல் கூறிய போலீசார், பரிசு விழுந்த சீட்டை பார்த்தனர். பின்னர் அவருக்கு அந்த சீட்டை வங்கியில் டெபாசிட் செய்வது பற்றிய விபரங்களை எடுத்து கூறினர்.

    அதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர். அதன்பின்பே இயல்பு நிலைக்கு திரும்பிய வடமாநில தொழிலாளி போலீஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பினார்.

    இதுபற்றி அவர் கூறும்போது, பரிசு தொகை கிடைத்ததும் உடனே ஊர் திரும்ப உள்ளதாகவும், அந்த பணத்தை கொண்டு வாழ்க்கையை வளமாக்கி கொள்வேன் எனவும் தெரிவித்தார்.

    ×