search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala lottery ticket"

    • லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவு
    • போலீசார் சாய்ராம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்

    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.

    அதன் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த சில நாட்க ளுக்கு முன்பு பவானியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 11 பேர் கொண்ட கும்பல் பிடிபட்டது.

    அதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கருங்கல்பாளையத்தில் ஆன்லைன் லாட்டரி விற்ப னையில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேர் கைது செய்ய ப்பட்டனர். இதை தொட ர்ந்து மாவட்டம் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனை நடை பெறுகிறதா? என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று ஈரோடு மாணிக்கம் பாளை யம் ஹவுசிங் யூனிட் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ப னை நடைபெறுவதாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்திய போது சாய்ராம் (35) என்பவர் கேரளா லாட்டரி சீட்டுகளை வெள்ளை தாளில் எழுதி பரிசு விழும் என்று ஆசை வார்த்தை கூறி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடு பட்டது தெரிய வந்தது.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் சாய்ராம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • கவின் கருங்கல்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை விற்பனை செய்த சிவகுமாரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம், வினாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கவின் (33).

    இவர் கிருஷ்ணம்பாளையம், மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் (52) என்பவர் வெள்ளைத் தாளில் எண்களை எழுதி தடை செய்யப்பட்டுள்ள கேரள லாட்டரி சீட்டு என கூறி ஏமாற்றி விற்பனை செய்துள்ளார்.

    இது குறித்து கவின் கருங்கல்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை விற்பனை செய்த சிவகுமாரை கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து ரூ.400 மதிப்பிலான கேரள லாட்டரிகள் 10-ஐ பறிமுதல் செய்தனர்.

    ×