search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேரள லாட்டரி சீட்டு விற்றவர் கைது
    X

    கேரள லாட்டரி சீட்டு விற்றவர் கைது

    • கவின் கருங்கல்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை விற்பனை செய்த சிவகுமாரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம், வினாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கவின் (33).

    இவர் கிருஷ்ணம்பாளையம், மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் (52) என்பவர் வெள்ளைத் தாளில் எண்களை எழுதி தடை செய்யப்பட்டுள்ள கேரள லாட்டரி சீட்டு என கூறி ஏமாற்றி விற்பனை செய்துள்ளார்.

    இது குறித்து கவின் கருங்கல்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை விற்பனை செய்த சிவகுமாரை கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து ரூ.400 மதிப்பிலான கேரள லாட்டரிகள் 10-ஐ பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×