என் மலர்
நீங்கள் தேடியது "Government Servant"
- சோதனையில் 24 வீடுகள், 6 மனைகள், 40 ஏக்கர் விவசாய நிலம் தொடர்பான பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன.
- ரூ.41 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் விலை உயர்ந்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
கர்நாடகாவில் மாதம் ரூ.15,000 சம்பளம் வாங்கி வந்த அரசு ஊழியரிடம் இருந்து, ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் முன்னாள் எழுத்தராக பணியாற்றிய கலக்கப்பா நிடகுண்டியின் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது கணக்கில் வராத ரூ.30 கோடி மதிப்பிலான சொத்துக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுவரையிலான சோதனையில் 24 வீடுகள், 6 மனைகள், 40 ஏக்கர் விவசாய நிலம், 1 கிலோ தங்கம், மூன்றுக்கும் மேற்பட்ட கார், பைக், ரூ.41 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் விலை உயர்ந்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
அரசு ஊழியரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக என லோக் ஆயுக்தா அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்திட வேண்டும்.
- காலை சிற்றுண்டி உணவை அந்தத் துறையில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்கள் மூலமாகவே சமைத்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூர், நவ.24-
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் 15-வது மாவட்ட பேரவை கூட்டம் இன்று தஞ்சை இந்திரா நகரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்தி ரன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் தமிழ்வாணன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட இணை செயலாளர் அறிவழகன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் அம்சராஜ் தொடக்க உரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் ரெங்கசாமி வேலை அறிக்கையும், மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் வரவு செலவு அறிக்கையும், மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் செல்வி மகளிர் அறிக்கையும் தாக்கல் செய்து பேசினர்.
மாநில செயலாளர் கோதண்டபாணி சிறப்புரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட இணை செயலாளர்கள் மகேஷ், செந்தில்குமார், தமிழ்வாணன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர் .
இந்த பேரவை கூட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் , சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
பள்ளி சத்துணவு மையங்களில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி உணவை அந்தத் துறையில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்கள் மூலமாகவே சமைத்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலை பணியாளர்களில் 41 மாத பணி நீக்க காலத்தினை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.
கொரோனா காலத்தில் முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பை திரும்ப வழங்கிட வேண்டும், கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் முன்னாள் மாநில செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, அகில இந்திய இன்சூரன்ஸ் சங்கம் கோட்டத் தலைவர் செல்வராசு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில செயலாளர் ஹேமலதா, மாவட்ட துணை தலைவர் முருகன் ஆகியோர் நன்றி கூறினர்.
- பள்ளி அலுவலக (எஸ்.எஸ்.ஏ) பணியாளராக அடையாள அட்டை மற்றும் பணி ஆணையும் வழங்கியுள்ளாா்.
- முதன்மைக் கல்வி அலுவலரின் பெயருக்குகளங்கம் விளைவிக்கும் விதமாகவும் செயல்பட்டுள்ளாா்.
திருப்பூர் :
திருப்பூரில் அரசு அலுவலரின் பெயரில் போலிச் சான்று வழங்கியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி தரப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ள புகாா் கடிதத்தில் கூறியுள்ளதாவது :- திருப்பூா் மாவட்டம் உடுமலை வட்டம் போடிப்பட்டி கிராமம் காமராஜா் நகரில் வசித்து வருபவா் சரவணகுமாா். இவா் அரசு வேலையில் இருப்பதாக கூறி உடுமலையைச் சோ்ந்த தமிழ்செல்வன், ஜெயந்தி, இமானு பிரதீப், சுகுமனோன், பொள்ளாச்சியை சோ்ந்த கோகுல் ஆகிய 5 பேரிடம் ரூ.50 ஆயிரம், ரூ.60 ஆயிரம் என வசூல் செய்து, அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பள்ளி அலுவலக (எஸ்.எஸ்.ஏ) பணியாளராக அடையாள அட்டை மற்றும் பணி ஆணையும் வழங்கியுள்ளாா்.மேலும் அரசு அலுவலரின் பெயரில் போலி சான்றிதழ்களை தயாா் செய்து முதன்மைக் கல்வி அலுவலரின் பெயருக்குகளங்கம் விளைவிக்கும் விதமாகவும் செயல்பட்டுள்ளாா். ஆகவே, அவா் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசு ஊழியர் மர்மமான முறையில் இறந்தார்.
- இதுகுறித்து சாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஊத்துப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் நாராயணபெருமாள். இவரது மகன் செல்வகுமார்(வயது33). இவர் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விவசாய துறை அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மாதவி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மனைவி, குழந்தைகள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வசித்து வருகின்றனர். அவர்களை விடுமுறை நாட்களில் செல்வகுமார் பார்க்க செல்வதுண்டு. இவருக்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு செல்வ குமார் மோட்டார் சைக்கி ளில் ஊருக்கு புறப்பட்டார். அப்போது மது குடித்திருந்த தாக தெரிகிறது. சாத்தூர் அருகே உள்ள உப்பத்தூர் விலக்கு பகுதியில் சென்ற போது செல்வகுமார் சாலை யோரத்தில் மோ ட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவரது தந்தை நாராயண பெருமாளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்சு மூலம் செல்வகுமார் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் செல்வகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமார் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரையில் அரசு ஊழியர் திடீரென இறந்தார்.
- தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 50). இவர் மதுரை பாலிடெக்னிக் கல்லூரி அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வேலை பார்த்தார்.
அவர் நேற்று இரவு முழுவதும் அலுவலகத்தில் தங்கி வேலை பார்த்ததாக தெரிகிறது. இன்று காலை அலுவலகத்துக்கு வந்து பணிகளை தொடங்கிய போது சண்முகவேலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
வலியால் துடித்த அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ''கருவூலத்துறை சர்வரில் கோளாறு இருப்பதால் பில் எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இது குறித்து கருவூலத்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
ஆனாலும் சர்வர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. இதன் காரணமாக சண்முகவேல் இரவு முழுவதும் வேலை செய்ய நேரிட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு காரண மாக அவர் மாரடைப்பால் உயிர் இழக்க நேரிட்டது என்றனர்.
- ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநாடு நடந்தது.
- மானாமதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கிளை மாநாடு துணைத்தலைவர் பொன் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் காந்தி முன்னிலை வகித்தார்.
துணைத்தலைவர் மோகனசுந்தரம் வர வேற்றார். செயலாளர் முத்துமாடன் அறிக்கை வாசித்தார். பொருளா ளர் திருமாவளவன் வரவு,செலவு அறிக்கை வாசித்தார். மாவட்ட தலைவர் திரவியம், மாவட்ட தணிக்கையாளர் வாழவந்தான், செயலாளர் கணேசன், இணைச் செயலாளர் தங்கவேலு ஆகியோர் பேசினர். மாநில செயலாளர் முத்துராமலிங்கம் சிறப்புரையாற்றினார்.
கணேசன் செயலாளராகவும், ஞானசேகரன் மாவட்ட பிரதிநி தியாகவும் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில், சென்னையில் இருந்து மானாமதுரை வழியாக செங்கோட்டை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ெரயிலை தினசரி இயக்கவேண்டும்.
ராமேசுவரம் மார்கத்தில் இருந்து பகலில் ெரயில் வசதி இல்லாத நிலையில் காரைக்குடி வரை வரும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ெரயிலை மானாமதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பிரபாகரன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.
- புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் உள்ள அண்ணா நகரைச் சேர்ந்தவர் 33 வயது பெண். இவர் அரசு பணிக்காக போட்டி தேர்வு எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருந்தார்.
அதேபகுதியைச் சேர்ந்த தனசீலன் மகன் பிரபாகரன் (35). இவர் சேலம் மாவட்டத்தில் லேபர் கோர்ட்டில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சிலமாதங்களுக்கு முன்பு அந்த பெண், பிரபாகரனும் போட்டி தேர்வுகளுக்காக படித்து வந்தபோது, அதற்காக விண்ணப்பிப்பதற்காக தனது படிப்பு சான்றிதழ் மற்றும் சுயவிவரங்களை அவரிடம் கொடுத்தார். அப்போது அதில் இருந்த பெண்ணின் செல்போன் எண்ணை வைத்து கொண்டு தினமும் பிரபாகரன் அவரிடம் பேசிவந்தார்.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து இருவரும் பலஇடங்களில் காதலர்களாக சுற்றி வந்ததாக தெரிகிறது. அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பிரபாகரன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.
இதில் அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். அதன்பின்னர் இந்த விவரம் குறித்து பெற்றோர்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக தனியார் மருத்துவமனையில் கர்ப்பத்தையும் கலைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து பிரபாகரனுக்கு அரசு வேலை கிடைத்தது. இதனால் அவர் அந்த பெண்ணிடம் பேசாமல் இருந்து வந்தார். அவர் பலமுறை பிரபாகரனை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது போனை எடுக்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பிரபாகரன் கற்பழித்து விட்டதாக கூறி புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.
- திருவாடானை அருகே நடந்த விபத்தில் அரசு ஊழியர் பலியானார்.
- மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா வடக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நரேந்திரகுமார்(வயது37). இவர் திருவாடானை பாரதி நகர் பகுதியில் தங்கி, ராமநாதபுரம் சார்நிலை கருவூல அலுவலகத்தில் அலுவ லராக பணிபுரிந்து வருகிறார்.
பணி முடித்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். திருச்சி-ராமேசுவரம் நெடுஞ்சாலையில் கற்காத்த குடி அருகே வந்த போது, ஒரு நாய் குறுக்கே வந்துள்ளது. அவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக பிரேக் பிடித்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் பலத்த காயம டைந்த நரேந்திரகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாடானை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது.
- குடும்பத்தினர் இறப்பின் கீழ் அரசு பணியில் சேரும் ஊழியர்கள் தங்களை சார்ந்தவர்களை பாதுகாக்கும் பொறுப்புக்கு உள்ளவர்கள் ஆவர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் இறப்பின் கீழ் வேலை பெற்ற அரசு ஊழியர்கள், இறந்த ஊழியரை சார்ந்த பிறரை புறக்கணித்தால், அவரது சம்பளத்தில் 25 சதவீதம் பிடிக்க அரசு முடிவு செய்துள்ளது.
முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
குடும்பத்தினர் இறப்பின் கீழ் அரசு பணியில் சேரும் ஊழியர்கள் தங்களை சார்ந்தவர்களை பாதுகாக்கும் பொறுப்புக்கு உள்ளவர்கள் ஆவர். மேலும் அவர்களது தேவைகளான உணவு, சொத்து, தங்குமிடம், சிகிச்சை பராமரிப்பு உள்ளிட்டவைகளை கவனிக்கும் பொறுப்பும் அவர்களுக்கு உண்டு. அதுபோல் கவனிக்காமல் இருக்கும் அரசு ஊழியர் மீது எழுத்துப்பூர்வமான புகாரை நியமன அதிகாரியிடம் பதிவு செய்யலாம்.
அரசு முடிவின்படி அத்தகைய ஊழியர்கள் மீது பெறப்படும் புகார் உண்மை யென நிரூபிக்கப்பட்டால், அவர்களின் அடிப்படை ஊதியத்தில் 25 சதவீதம் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும். அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் பணம் அவர்களைச் சார்ந்தவர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
இவ்வாறு அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- சாலையில் சென்று கொண்டிருந்த வேன் வெற்றிச்செல்வன் மீது மோதியது.
- அவர் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டி காரைநகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வன் (வயது53). இவர் கருங்ண்ணி ஊராட்சியில், ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்தார்.
வழக்கம் போல் பணி முடித்துவிட்டு நேற்று மாலை வீட்டிற்கு வந்த அவர் அங்கிருந்து சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது நாகையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் ஓடாச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த வேன் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயத்தோடு மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய வேனை பறிமுதல் செய்த கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஜெகதீசன் பலமுறை கேட்டும் ரவிக்குமார் சரியான பதில் கூறவில்லை.
- போலீஸ் இணை கமிஷனர் (வடக்கு ) அலுவலகத்தில் புகார் செய்தார்.
பெரம்பூர்:
கொடுங்கையூர் கண்ணதாசன் நகரை சேர்ந்தவர் ஜெகதீசன். ஓய்வு பெற்ற பி. எஸ். என். எல். ஊழியர். இவரிடம் உடன் பணியாற்றிய ஆவடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு தனது மகளின் திருமணத்திற்காக வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.13 லட்சம் வாங்கினார்.
பின்னர் சில மாதங்களுக்கு பிறகு ஜெகதீசனிடம் வீட்டு பத்திரத்தை ரவிக்குமார் திருப்பி கேட்டார். அதனை வங்கியில் அடமானம் வைத்து பணத்தை வட்டியுடன் திருப்பி தருவதாக கூறினார். இதனை நம்பி ஜெகதீசனும் அடமான வீட்டு பத்திரத்தை கொடுத்தார். ஆனால் ரவிக்குமார் கூறியபடி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இது குறித்து ஜெகதீசன் பலமுறை கேட்டும் ரவிக்குமார் சரியான பதில் கூறவில்லை.
இந்நிலையில் சம்பவத்தன்று பணம் குறித்து ஜெகதீசன் கேட்டபோது ரவிக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் ஜெகதீசன் பலத்த காயம் அடைந்தார்.
இதுகுறித்து ஜெகதீசன் போலீஸ் இணை கமிஷனர் (வடக்கு ) அலுவலகத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமார், அவரது மனைவி மீனாட்சி, மகள் பிரேமலதா, அவரது கணவர் நாதன், ரவிக்குமாரின் மகன் பாலாஜி ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
- போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தஞ்சையில் ஒரே நாளில் நடந்த இரண்டு கொள்ளை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் ஒரேநாளில் ஆசிரியை, தபால் ஊழியர் வீடுகளின் கதவை உடைத்து நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன் பற்றிய விவரம் வருமாறு ;-
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி.காலனி கே.எம்.ஏ. உடையார் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 46). இவர் பொய்யுண்டார் கோட்டையில் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று மகேஸ்வரி வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றார். மாலையில் வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து 19 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதேப்போல் தஞ்சை விளார்ரோடு நியுபாத்திமா நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சுமதி (46). இவர் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சிய டைந்தார். பதறியடித்து பார்த்தபோது பீரோவை உடைத்து 12 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் மகேஸ்வரி, கோமதி தனி தனியாக அளித்த புகார்களின் பேரில் தமிழ்பல்கலைக்கழகம் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரது வீடுகளிலும் ஒரே கும்பல் கொள்ளையடித்தனரா ? அல்லது வேறு வேறு கும்பல் கொள்ளையடித்தனரா ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. தஞ்சையில் ஒரே நாளில் நடந்த இரண்டு கொள்ளை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






