search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைக்கிள்"

    • இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி செஞ்சி பிற்படுத்தப்ப ட்டோர் மாணவர்கள் விடுதியில் நடைபெற்றது.
    • 8 நபர்களுக்கு ரூ.59 ஆயிரம் மதிப்பில் சலவைப் பெட்டிகளையும் வழங்கினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மசூதிகளில் பணிபுரியும் உலமாக்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி செஞ்சி பிற்படுத்தப்ப ட்டோர் மாணவர்கள் விடுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் நல அலுவலர் முகுந்தன் வரவேற்றார்.

    சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 35 உலமா க்களுக்கு ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் இலவச சைக்கிள்களை வழங்கினார். மேலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 8 நபர்களுக்கு ரூ.59 ஆயிரம் மதிப்பில் சலவைப் பெட்டிகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை,பேரூராட்சி கவுன்சிலர் நூர்ஜகான் பெரும்புகை ரவி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், விடுதி காப்பாளர்கள் சங்கர், ரவி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் 

    • பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்களை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • இதில் தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகரிலுள்ள பி.ஏ.சி.எம் மேல்நிலைப் பள்ளி பி.ஏ.சி.ஆர் அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சேத்தூர் சேவுக பாண்டியன் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    பள்ளி தாளாளர் ஸ்ரீகண்டராஜா அரசு பள்ளி தலைமை ஆசிரி யர்கள் சிவக்குமாரி, காளி யப்பன் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தங்க பாண்டியன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினர்.

    பின்னர் எம்.எல்.ஏ. கூறுகையில், முதல்-அமைச்சர் மாணவ மாண விகளுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன்மூலம் தமிழ்நாட்டில் கல்வியின் தரம் மேலும் வளர்ச்சி அடையும். இந்த திட்டங்கள் அனைத்தையும் மாணவ மாணவியர்கள் சிறப்பாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றியடைந்து பள்ளிக்கும் ராஜபாளையம் தொகுதிக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து ராஜ பாளையம் எஸ்.எஸ்.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எம்.எல்.ஏ. நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தில் மேசை, பெஞ்சுகளை எம்.எல்.ஏ. வழங்கினார். இதில் தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தலைமை ஆசிரியா் யோகேஸ்வரி தலைமை தாங்கினார்.

    ஊட்டி,

    கூடலூரை அடுத்த ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியா் யோகேஸ்வரி தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கீா்த்தனா, ஸ்ரீமதுரை ஊராட்சி மன்ற தலைவா் சுனில், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் கங்காதரன், மேலாண்மை குழுத் தலைவா் மஞ்சு, துணைத் தலைவா் ரசாக் ஆகியோர் கலந்து கொண்டு, தமிழக அரசின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    • கந்தர்வகோட்டையில் 732 பள்ளி மாணவ, மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
    • ரூ.36 லட்சம் மதிப்பிலான சைக்கிள்களை சின்னத்துரை எம்.எல்.ஏ. வழங்கினார்

    கந்தர்வகோட்டை, 

    கந்தர்வகோட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கும் விழா மாவட்ட கல்வி அதிகாரி ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. கந்தர்வகோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ,பெண்கள் மேல்நிலைப்பள்ளி ,கல்லாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, தச்சங்குறிச்சி தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 732 மாணவ ,மாணவிகளுக்கு ரூ.36 லட்சம் மதிப்பிலான மிதிவண்டிகளை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னத்துரை வழங்கி, பேசினார்.விழாவில் தி.மு.க. மாவட்ட கழக செயலாளர் கே.கே. செல்ல பாண்டியன், ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், தி.மு.க. நகரச் செயலாளர் ராஜா, ஆத்மா சேர்மன் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி, சிவரஞ்சனி சசிகுமார், கவிதா மணிகண்டன், துணைத் தலைவர் வெங்கடேசன், தாமரை பழனிவேலு, பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் அமிர்தம் மாலதி, பழனிவேல், செல்வராசு, ராணி புஷ்பம், இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.முன்னதாக பள்ளியின் முகப்பில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளியின் நுழைவு வாயிலை எம்எல்ஏ சின்னத்துரை திறந்து வைத்தார்.

    • மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை தி.மு.க. மாவட்ட செயலாளர் மணிமாறன் வழங்கினார்.
    • மேல்நிலைப் பள்ளிக்கு காம்பவுண்ட் சுவர் தேவை என பள்ளி சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அரசுமேல் நிலைப்பள்ளியில் அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. பள்ளியின் தலைமை யாசிரியர் பாஸ்கரன் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக மதுரை தெற்குமாவட்ட தி.மு.க. செயலாளர் சேட பட்டி மணிமாறன் கலந்து கொண்டு 79 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் களை வழங்கினார். அப்போது அவர் பேசுகை யில், அரசு பள்ளியில் படிக்கும் நீங்கள் நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறீர்கள். நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து போராடி வருகிறார்.

    இந்த மேல்நிலைப் பள்ளிக்கு காம்பவுண்ட் சுவர் தேவை என பள்ளி சார்பில் மனு கொடுக்கப் பட்டுள்ளது. இதனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் எடுத்துரைத்து உரிய தீர்வு காணப்படும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துணைத்தலைவர் ஆதவன், நகராட்சி கவுன்சி லர்கள் சின்னசாமி, வீரக்கு மார், திருக்குமார், ஜஸ்டின் திரவியம், பெல்ட்முருகன், ரம்ஜான்பேகம் ஜாகீர்உசேன், ஜெய்லானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜகிரி ஊராட்சி தலைவர் சமீமா பர்வீன் முபாரக் உசேன் வரவேற்றார்.
    • முடிவில் ஆசிரியர் முத்தழகன் நன்றி கூறினார்.

    பாபநாசம்:

    பாபநாசம் ஒன்றியம் ராஜகிரி ஊராட்சியில் காசிமியா மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைப்பெற்றது. ராஜகிரி ஊராட்சி மன்ற தலைவர் சமீமா பர்வீன் முபாரக் உசேன் வரவேற்றார்.

    பள்ளி மேலாண்மை குழு தலைவரும், சக்கராப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவரும், பாபநாசம் தெற்கு ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளருமான நாசர் தலைமையேற்று சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்கி விழாவினை தொடங்கி வைத்தார்.

    சட்ட மன்ற உறுப்பினர் நேர்முக உதவியாளர் முகமது ரிபாயி, பள்ளியின் தலைமை ஆசிரியர் சம்பந்தம், மாவட்ட கவுன்சிலர் பாத்திமாஜான் ராயல் அலி, தஞ்சை வடக்கு மாவட்ட சிறுபாண்மை நல உரிமைப் பிரிவு தலைவர் யூசுப் அலி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் கலியமூர்த்தி , முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அஷ்ரப் அலி, மூத்த உறுப்பினர் இராஜகிரி பாலு, ம.ம.க தொகுதி தலைவர் கலீல், தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், ராஜகிரி திமுக நிர்வாகிகள் அண்ணாதுரை, ஆனந்தன், சிவமுதலி, முகம்மது உசேன், ராஜேஷ், ஷாஜஹான் , ஹாஜாமைதீன், மஸர்ரத் சாதிக், அப்துல் மாலிக், சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சிக்கந்தர் பாட்சா கௌஸ்மைதீன், சித்ரா சுப்ரமணியன், ஊராட்சி செயலர் ஜெயக்கு மார், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஆசிரியர் முத்தழகன் நன்றி கூறினார்.

    விழா ஏற்பாட்டினை ஜே.ஆர்.சி கவுன்சிலர் மணிகண்டன் செய்திருந்தார்.

    • மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.
    • முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியை வள்ளியம்மை நன்றி கூறினார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கீழச்செவபட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரே சுவரர் மேல்நிலைப் பள்ளி யில் தமிழக அரசின் விலை யில்லா சைக்கிள்கள் வழங் கும் நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் வெள்ளையன் செட்டியார் தலைமை வகித் தார். முன்னதாக பள்ளி செயலர் வெங்கடாசலம் செட்டியார் வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பா ளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் களை வழங்கினார். பள்ளி யின் பொருளாளர் அம்மை யப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சி யர் செல்லமுத்து, நெற் குப்பை சேர்மன் பழனியப் பன், ஒன்றிய செயலாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், பள்ளிக்கு சைக்கிள் நிறுத்தும் நிழல் கூடம் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து அமைத்து தருவதாக உறுதி அளித்தார். அதற்கு பள்ளியின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    இவ்விழாவில் கிளைச் செயலாளர் சுந்தரம் செந் தில் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடி வில் பள்ளியின் தலைமை ஆசிரியை வள்ளியம்மை நன்றி கூறினார்.

    • அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா மூலனூரில் நடைபெற்றது.
    • இந்த விழாவில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டார்.

    மூலனூர்:

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் பேரூராட்சி கன்னிவாடி பேரூராட்சி,வடுகபட்டி ,புதுப்பை ,தலையூர் ,ஆகிய பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா மூலனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    மாவட்ட வருவாய்துறை அலுவலர் ஜெய் பீம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு அரசின் நலத்திட்டங்களை விளக்கி கூறி வரும் காலங்களில் மாணவ மாணவிகள் இந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளை வழங்கினார்.

    அதன் பின்னர் மூலனூர் பேரூராட்சி, கன்னிவாடி பேரூராட்சி, வடுகபட்டி, புதுப்பை, புஞ்சை தலையூர் ஆகிய பகுதிகளில் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளான மொத்தம் 269 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இந்த விழாவில் மாவட்ட கல்வித்துறை அதிகாரி கீதா, மூலனூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுமதி கார்த்திக், மூலனூர் பேரூராட்சி மன்ற தலைவர் தண்டபாணி, கன்னிவாடி பேரூராட்சி மன்ற தலைவர் ரேவதி சுரேஷ் மற்றும் மூலனூர் ஒன்றிய கிழக்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி , மேற்கு ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு மற்றும் கன்னிவாடி பேரூர் செயலாளர் சுரேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாணவ மாணவிகள், பள்ளி ஆசிரிய, ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தி நன்றி கூறினார்.

    • சேலம் சித்தர்கோவில் அருகே உள்ள நாகியம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (50), தொழிலாளியான இவர் நேற்றிரவு சில்லி சிக்கன் வாங்குவதற்காக அங்குள்ள சாலையை கடக்க முயன்றார்.
    • அந்த வழியாக வந்த சத்யமூர்த்தி (32) என்பவரின் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    சேலம் சித்தர்கோவில் அருகே உள்ள நாகியம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (50), தொழிலாளியான இவர் நேற்றிரவு சில்லி சிக்கன் வாங்குவதற்காக அங்குள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த சத்யமூர்த்தி (32) என்பவரின் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவ ரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கணேசன் இன்று அதிகாலை 2 மணியளவில் பரிதாபமாக இறந்தார். சத்யமூர்த்தி லேசான காயத்துடன் தப்பினார். இது குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
    • பாடப் பகுதிகளை அன்றைய தினமே புரிந்து படித்து எழுதி பார்த்தல் வேண்டும்

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்படும் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பாலமுருகன் தலைமை வகித்தார்.

    ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், நகரமன்ற தலைவர் கவிதா பாண்டியன் முன்னிலை வகித்தனர்.முன்னாள் மாணவர் நல் நூலகர் ஆசைத்தம்பி வரவேற்றார்.

    பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை மாரிமுத்து எம்.எல்.ஏ. வழங்கி பேசுகையில்:-தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.

    இன்றைய சூழ்நிலையில் பல்வேறு விதமான ஊடகங்களை பயன்படுத்தி கல்வியில் மட்டுமல்லாது சமுதாய சேவைகள் சமுதாயத்தோடு பொறுப்புணர்வை உணர்ந்து செயல்படுதல் தலைமை பண்பை வளர்த்துக் கொள்ளுதல் அன்றைய தினம் நடத்தப்படும் பாடப் பகுதிகளை அன்றைய தினமே புரிந்து படித்து எழுதி பார்த்தல் வேண்டும்.பெற்றோர்கள் ஆசிரியர்களின் அறிவுரைகளை கேட்டு தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் .

    விளையாட்டு, கலை இலக்கியம் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு கலந்து கொண்டு தேர்வில் வெற்றி பெறும் வகையில் தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    முறையான பயிற்சி கடுமையான முயற்சியின் மூலம் அனைவருமே அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்ற உத்வேகத்தோடு இருக்க வேண்டும் என்றார். முடிவில் ஆசிரியர் நடராஜன் நன்றி கூறினார்.

    • 907 மாணவ -மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • ஆயங்குடி பள்ளி தலைமைஆசிரியர் நாராயணன் நன்றி கூறினார்.

    சீர்காழி:

    சீர்காழி ச.மு.இ. மேல்நிலைப்பள்ளி, சியாமளா பெண்கள் , எல்.எம்.சி , ஆயங்குடிபள்ளம் வேங்கடேசா , கோதண்ட புரம் ராமகிருஷ்ணா , திருவெண்காடு சு.சு.தி.ஆண்கள் ஆகிய 6 அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா ச.மு.இ. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். ச.மு.இ. பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி வரவேற்றார். நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன், தி.மு.க ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகர்மன்ற உறுப்பினர் நித்தியாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைஆசிரியை கீதா வரவேற்றார். விழாவில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பங்கேற்று மாணவ -மாணவிகள் 907 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புறையாற்றினார்.

    இதில் பள்ளி தலைமைஆசிரியர்கள் செல்வகுமாரி (எல்.எம்.சி பள்ளி), அருளரசன் (இராம கிருஷ்ணா), நடராஜன் (சு.சு.தி.பள்ளி) மற்றும் உதவி தலைமை ஆசிரியர்கள் துளசிரெங்கன், முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    முடிவில் ஆயங்குடிபள்ளி பள்ளி தலைமைஆசிரியர் நாராயணன் நன்றி கூறினார்.

    • கண்ணனூர் அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது
    • மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்

    திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கண்ணனூர் அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் விலையில்லா மிதிவண்டிகளை  மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.ஸ்டாலின்குமார், ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×