search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்
    X

    மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்

    • மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை தி.மு.க. மாவட்ட செயலாளர் மணிமாறன் வழங்கினார்.
    • மேல்நிலைப் பள்ளிக்கு காம்பவுண்ட் சுவர் தேவை என பள்ளி சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அரசுமேல் நிலைப்பள்ளியில் அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. பள்ளியின் தலைமை யாசிரியர் பாஸ்கரன் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக மதுரை தெற்குமாவட்ட தி.மு.க. செயலாளர் சேட பட்டி மணிமாறன் கலந்து கொண்டு 79 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் களை வழங்கினார். அப்போது அவர் பேசுகை யில், அரசு பள்ளியில் படிக்கும் நீங்கள் நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறீர்கள். நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து போராடி வருகிறார்.

    இந்த மேல்நிலைப் பள்ளிக்கு காம்பவுண்ட் சுவர் தேவை என பள்ளி சார்பில் மனு கொடுக்கப் பட்டுள்ளது. இதனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் எடுத்துரைத்து உரிய தீர்வு காணப்படும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துணைத்தலைவர் ஆதவன், நகராட்சி கவுன்சி லர்கள் சின்னசாமி, வீரக்கு மார், திருக்குமார், ஜஸ்டின் திரவியம், பெல்ட்முருகன், ரம்ஜான்பேகம் ஜாகீர்உசேன், ஜெய்லானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×