search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சில்லி சிக்கன் வாங்க சென்ற தொழிலாளி  மோட்டார் சைக்கிள் மோதி பலி
    X

    சில்லி சிக்கன் வாங்க சென்ற தொழிலாளி மோட்டார் சைக்கிள் மோதி பலி

    • சேலம் சித்தர்கோவில் அருகே உள்ள நாகியம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (50), தொழிலாளியான இவர் நேற்றிரவு சில்லி சிக்கன் வாங்குவதற்காக அங்குள்ள சாலையை கடக்க முயன்றார்.
    • அந்த வழியாக வந்த சத்யமூர்த்தி (32) என்பவரின் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    சேலம் சித்தர்கோவில் அருகே உள்ள நாகியம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (50), தொழிலாளியான இவர் நேற்றிரவு சில்லி சிக்கன் வாங்குவதற்காக அங்குள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த சத்யமூர்த்தி (32) என்பவரின் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவ ரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கணேசன் இன்று அதிகாலை 2 மணியளவில் பரிதாபமாக இறந்தார். சத்யமூர்த்தி லேசான காயத்துடன் தப்பினார். இது குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×