search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
    X

    மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

    • ராஜகிரி ஊராட்சி தலைவர் சமீமா பர்வீன் முபாரக் உசேன் வரவேற்றார்.
    • முடிவில் ஆசிரியர் முத்தழகன் நன்றி கூறினார்.

    பாபநாசம்:

    பாபநாசம் ஒன்றியம் ராஜகிரி ஊராட்சியில் காசிமியா மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைப்பெற்றது. ராஜகிரி ஊராட்சி மன்ற தலைவர் சமீமா பர்வீன் முபாரக் உசேன் வரவேற்றார்.

    பள்ளி மேலாண்மை குழு தலைவரும், சக்கராப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவரும், பாபநாசம் தெற்கு ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளருமான நாசர் தலைமையேற்று சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்கி விழாவினை தொடங்கி வைத்தார்.

    சட்ட மன்ற உறுப்பினர் நேர்முக உதவியாளர் முகமது ரிபாயி, பள்ளியின் தலைமை ஆசிரியர் சம்பந்தம், மாவட்ட கவுன்சிலர் பாத்திமாஜான் ராயல் அலி, தஞ்சை வடக்கு மாவட்ட சிறுபாண்மை நல உரிமைப் பிரிவு தலைவர் யூசுப் அலி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் கலியமூர்த்தி , முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அஷ்ரப் அலி, மூத்த உறுப்பினர் இராஜகிரி பாலு, ம.ம.க தொகுதி தலைவர் கலீல், தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், ராஜகிரி திமுக நிர்வாகிகள் அண்ணாதுரை, ஆனந்தன், சிவமுதலி, முகம்மது உசேன், ராஜேஷ், ஷாஜஹான் , ஹாஜாமைதீன், மஸர்ரத் சாதிக், அப்துல் மாலிக், சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சிக்கந்தர் பாட்சா கௌஸ்மைதீன், சித்ரா சுப்ரமணியன், ஊராட்சி செயலர் ஜெயக்கு மார், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஆசிரியர் முத்தழகன் நன்றி கூறினார்.

    விழா ஏற்பாட்டினை ஜே.ஆர்.சி கவுன்சிலர் மணிகண்டன் செய்திருந்தார்.

    Next Story
    ×