search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழி பகுதி பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
    X

    மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

    சீர்காழி பகுதி பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

    • 907 மாணவ -மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • ஆயங்குடி பள்ளி தலைமைஆசிரியர் நாராயணன் நன்றி கூறினார்.

    சீர்காழி:

    சீர்காழி ச.மு.இ. மேல்நிலைப்பள்ளி, சியாமளா பெண்கள் , எல்.எம்.சி , ஆயங்குடிபள்ளம் வேங்கடேசா , கோதண்ட புரம் ராமகிருஷ்ணா , திருவெண்காடு சு.சு.தி.ஆண்கள் ஆகிய 6 அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா ச.மு.இ. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். ச.மு.இ. பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி வரவேற்றார். நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன், தி.மு.க ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகர்மன்ற உறுப்பினர் நித்தியாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைஆசிரியை கீதா வரவேற்றார். விழாவில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பங்கேற்று மாணவ -மாணவிகள் 907 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புறையாற்றினார்.

    இதில் பள்ளி தலைமைஆசிரியர்கள் செல்வகுமாரி (எல்.எம்.சி பள்ளி), அருளரசன் (இராம கிருஷ்ணா), நடராஜன் (சு.சு.தி.பள்ளி) மற்றும் உதவி தலைமை ஆசிரியர்கள் துளசிரெங்கன், முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    முடிவில் ஆயங்குடிபள்ளி பள்ளி தலைமைஆசிரியர் நாராயணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×