

விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மசூதிகளில் பணிபுரியும் உலமாக்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி செஞ்சி பிற்படுத்தப்ப ட்டோர் மாணவர்கள் விடுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் நல அலுவலர் முகுந்தன் வரவேற்றார்.
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 35 உலமா க்களுக்கு ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் இலவச சைக்கிள்களை வழங்கினார். மேலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 8 நபர்களுக்கு ரூ.59 ஆயிரம் மதிப்பில் சலவைப் பெட்டிகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை,பேரூராட்சி கவுன்சிலர் நூர்ஜகான் பெரும்புகை ரவி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், விடுதி காப்பாளர்கள் சங்கர், ரவி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்