search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கோட்டை"

    • செங்கோட்டை, சுற்று வட்டார கோவில்களில் நவராத்திரி விழா நடைபெறுகிறது.
    • தினமும் அம்பாளுக்கு மங்கள ஆரத்தி, தீபாராதனை நடத்தப்பட்டு வருகிறது.

    செங்கோட்டை:

    நவராத்திரி திருவிழா நாடுமுழுவதும் 9 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் துர்க்கா பூஜையாகவும், தென் மாநிலங்களில் விஜயதசமி, ஆயுத பூஜை என்றும், புரட்டாசி அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் இந்த பூஜை தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெறுகிறது.

    செங்கோட்டை கோவில்கள்

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் நவராத்திரி விழாவையொட்டி செங்கோட்டை அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகரநாத சுவாமி கோவில், முப்புடாதி அம்மன் கோவில், வண்டிமலச்சி அம்மன் கோவில், நித்திய கல்யாணி அம்பாள் கோவில், பிரானூர் பார்டரில் பிரசித்தி பெற்று விளங்கும் தீப்பாய்ச்சி மாரியம்மன் கோவில், முப்புடாதி அம்மன் கோவில், ஸ்ரீவிநாயகர், அரசநங்கை, முப்பிடாதி அம்மன் உட்பட செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார அனைத்து கோவில்களிலும் நவராத்திரி விழா நடைபெறுகிறது.

    இதை முன்னிட்டு தினமும் அம்பாளுக்கு ஒவ்வொரு அலங்காரம், சிறப்பு தீபாராதனை, விசேஷ நிகழ்ச்சிகள் மற்றும் தினமும் மங்கள ஆரத்தி தீபாராதனை நடத்தப்பட்டு வருகிறது. அதனை போன்று வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளிலும் கொலு பொம்மைகள் வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது.

    கொலு பொம்மைகள்

    இப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான வீடுகளிலும் கொலு பொம்மைகள் வைத்து வழிபட்டு வருகின்றனர். கொலு பொம்மைகளாக தெய்வ அவதாரங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையிலான பொம்மை செட்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் சரித்திர நிகழ்வுகளை பறைசாற்றும் விதமாக கிருஷ்ணன் லீலைகள், விநாயகர் திருவிளையாடல், வள்ளி, தெய்வானை, முருகன் திருவுருவ காட்சிகள், முளைப்பாரி செட், கல்யாண கார் ஊர்வலம், கிராம செட், பொங்கல் செட், ஐஸ்வரேஸ்வரர் செட், கல்யாண செட், அழகர் செட் உள்ளிட்டவைகளும், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், குபேரன் பொம்மைகள், காவலர்கள், கிரிக்கெட் செட், விளையாட்டு, உயிரினங்கள் சாதன செட்களுடன் 5, 7, 9, 11 என அவரவர் விருப்பத்திற்கிணங்க படிகள் அமைக்கப்பட்டு அவற்றில் பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.

    • சங்கரன்கோவில் தொகுதியில் நடைபெற உள்ள ஆண்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்ற உள்ளார்.
    • பூத் கமிட்டி ஆய்வுக்காக தலைமை நிலைய பொறுப்பா ளரை நியமனம் செய்து உள்ளனர்.

    செங்கோட்டை:

    தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் செங்கோட்டையில் உள்ள அக்கட்சியின் மாவட்ட அலு வலகத்தில் நடந்தது.

    தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    அ.தி.மு.க.வின் ஆண்டு விழா தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு மகிழ்ச்சி திருவிழா. 52-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி கிளை என அனைத்து பகுதிகளிலும் உள்ள அ.தி.மு.க. கொடி கம்பத்திற்கும் வண்ணம் பூசி கொடி ஏற்றி பொதுமக்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்க வேண்டும்.

    அதேபோல அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சங்கரன்கோவில் தொகுதி யில் வருகிற 18-ந் தேதி ஜெயலலிதா திடலில் நடைபெற உள்ள ஆண்டு விழாவில் சிறப்புரையாற்ற உள்ளார். அவரை வரவேற்பதற்காக மாவட்டத்தின் 3 தொகுதிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள், இளைஞர், மகளிரணியினர் தயாராக உள்ளனர்.

    அதே போல் சங்கரன் கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் பிரசாதத்து டன் மகளிர் அணி நிர்வாகிகள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்கவும், 5 வகையான மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்படும். ஏற்கனவே நாம் செய்து வந்துள்ள பூத் கமிட்டி மகளிர் குழு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை குழு அமைத்து வரும் பணிகளை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும்.

    பூத் கமிட்டி ஆய்வுக்காக தலைமை நிலைய பொறுப்பா ளரை நியமனம் செய்து உள்ளனர். பொறுப்பாளர் வரும் போது நம்முடைய மாவட்டத்தில் அனைத்து பூத் கமிட்டி பணிகளை முடித்து அவர் ஆய்வுக்காக வைத்திட வேண்டும். சங்கரன்கோவில் தொகுதிக்கு வருகை தரும் தென்காசி தனி மாவட்டம் தந்த எடப்பாடி பழனிசாமிக்கு தென்காசி மாவட்டத்தின் செயல்பாடு, சிறப்புகளை காட்டும் வண்ணம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் வி.பி.மூர்த்தி, மாவட்ட இணை செயலாளர் சண்முகப்ரியா, துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், மாவட்ட பொருளாளர் சண்முகையா, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவஆனந்த், மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், தலைமை நிலைய பேச்சாளர் தீக்கணல் லெட்சுமணன், அமுதா பாலசுப்பிரமணியன், சந்திரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள், மாணவ- மாணவிகள் இந்த வழிதடத்தில் அதிக அளவில் பயணித்து வருகின்றனர்.
    • தெரு விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை தாலுக்கா விற்குட்பட்ட பெரியகுளம் 210 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தின் மூலம் 600 ஏக்கர் நேரடி பாசன வசதி பெற்று கார், பிசான, பூமகசூல் என 3 சாகுபடிக்கும் இந்த குளத்தின் தண்ணீரை பெற்று மட்டுமே விவசாயிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    இந்த குளத்து கரையின் வழியாக கிராமங்களை இணைக்கும் இணைப்பு சாலையில் குளத்து கரை மட்டுமே ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்டது. தென்காசியில் இருந்து இலத்தூர், திருவெட்டியூர், நெடுவயல், அச்சன்புதூர், வடகரை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

    விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வழிதடத்தில் அதிக அளவில் பயணித்து வருகின்றனர். அவ்வாறு வரும் வாகனங்கள் முழுவதும் இலத்தூர் குளத்துகரை வழியாகத் தான் வந்து செல்ல முடியும். ஏற்கனவே இலத்தூர் குளம் முதல் அச்சன்புதூர் வரையிலான வழி தடங்களில் தெருவிளக்குகள் இல்லாத நிலையில் இரவு நேரங்களில் அதிகளவில் பாம்பு மற்றும் தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் செல்வோர் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் இலத்தூர் குளத்து கரையை ஒட்டிய சாலையை விரிவுபடுத்தி தார்ச்சாலை அமைத்து கொடுத்துள்ளனர். தற்போது அந்த சாலையின் மைய பகுதியில் மேடு-பள்ளங்கள் காணப்படுகிறது. மேலும் ஜல்லிகள் பெயர்ந்தும் உள்ளது. சாலைகள் சேதம் மற்றும் தெரு விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இலத்தூர் கரையிலிருந்து அச்சன்புதூர் வரையிலான சாலையில் மின் விளக்கு அமைப்பதுடன், சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நவராத்திரிக்காக சித்தூர் பகுதிகளில் இருந்து கொலு பொம்மைகள் கொண்டு வரபட்டுள்ளது.
    • பொம்மைகளின் வேலைப்பாடு மற்றும் வடிவத்துக்கு ஏற்ப ரூ.4ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    செங்கோட்டை:

    நவராத்திரி விழாவை முன்னிட்டு செங்கோட்டை அருகே, களி மண்ணால் ஆன கொலு பொம்மைகளை விற்பனைக்காக ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கொண்டு வந்துள்ளனர்.

    இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளிகள் கூறியதாவது:-

    நவராத்திரிக்காக புதிய வரவாக ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதிகளில் இருந்து அதிகளவில் கொலு பொம்மைகள் கொண்டு வரபட்டுள்ளது. இந்த பொம்மைகள் அனைத்தும், களி மண்ணால் தயாரிக்கப்பள்ளது.

    இதில் தசாவதாரம், திருவிளையாடல் புராணம், ராமர் பட்டாபிஷேகம், கள்ளழகர் திருமண கோலம் மதுரை மீனாட்சி கோவில் திருப்பதி பிரமோத்சவம், போன் பொம்மைகள் செட், சுவாமி சிலைகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் அடியார்களின் சிலைகளும், பல்வேறு கலாசார நிகழ்வுகளை வெளிப்படுத்தும் கல்யாண செட், தறி நெய்தல், மண்பாண்டம் செய்தல், குறவன், குறத்தி, அஷ்ட லட்சுமி செட், வளைகாப்பு, கல்யாண செட், அம்மன் சிலைகள், ராமர் திருமண நிகழ்வு, யோகா செட், கிரிக்கெட் வீரர் செட், தலைவர்களின் பொம்மைகள் என பல வகைகளில் அரை அடி முதல் இரண்டரை அடி வரை தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளன.

    இது தவிர, கொலுவில் வரிசைப்படுத்துவதற்காக, பறவைகள், விலங்குகள் மற்றும் பழங்களின் பொம்மைகளும் அதிகளவில் புதிய வரவாக நடப்பாண்டில் வாங்கி வந்துள்ளோம்.

    பொம்மைகளின் வேலைப்பாடு மற்றும் வடிவத்துக்கு ஏற்ப ரூ.50 முதல், ரூ.4ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    நடப்பாண்டில் தொழிலாளர்கள் பொம்மைகள் தயாரிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஈடுபட்டுள்ளனர். அதன் காரண மாக புதிதாக அதிகளவில் பொம்மைகள் வந்துள்ளன. வருகிற 15-ந்தேதி விழா தொடங்க உள்ளதையடுத்து எதிர்பார்த்த விற்பனை நடைபெற்று வருகிறது.

    இந்த பொம்மைகளை செங்கோட்டை சுற்றுப்புற பகுதி மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் அதிகளவில் ஆர்டர் கொடுத்து, வாங்கி செல்கின்றனர். இதனால் 2 ஆண்டுகளுக்கு பின் நடப்பாண்டில் அதிக களாக ஆர்டர்கள் கிடைத்துள்ளது. இதனால் இத்தொழிலை நம்பிய எங்களுக்கு வருவாய் ஈட்டிய உள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்றார்.

    • விஜயன் கேரள மாநிலம் கொல்லத்தில் சலூன் கடை நடத்தி வந்தார்.
    • திருவிழாவில் பங்கேற்க விஜயன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள கணக்கப்பிள்ளை வலசையை சேர்ந்தவர் விஜயன்(வயது 28). இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு ராதிகா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் கணக்கப்பிள்ளை வலசையில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக விஜயன் நேற்று மாலையில் கொல்லத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அவர் தென்மலை அருகே வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த பஸ்சை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

    அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று விஜயன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த விஜயன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தென்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

    • கலைவாணிக்கு அஜித்குமார் என்பவருடன் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
    • குடும்ப பிரச்சினை காரணமாக கலைவாணி பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டர் பஞ்சாயத்து ரோட்டை சேர்ந்தவர் கலைவாணி என்ற அம்மு(வயது 21). இவருக்கு ஆலங்குளம் அருகே உள்ள வீராணம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கலைவாணி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அங்கு ஒரு மாதத்திற்கும் மேலாக மனவேதனையில் இருந்த கலைவாணி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆர்.டி.ஓ. விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கல்லடா ஆற்றின் குறுக்கே தென்மலை அணை உள்ளது.
    • தென்மலை அணையின் அடிவாரத்தில் புகழ்பெற்ற வன சுற்றுச்சூழல் பூங்கா அமைந்துள்ளது.

    செங்கோட்டை:

    தமிழக-கேரள எல்லையான ஆரியங்காவு பகுதியில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கல்லடா ஆற்றின் குறுக்கே தென்மலை அணை உள்ளது.

    தென்மலையில் இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியில் கடந்த 1962-ம் ஆண்டு கொல்லம், திருவனந்தபுரம், ஆலப்புழை, பத்தினம் திட்டா ஆகிய 4 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை கருத்தில் கொண்டு இந்த அணை கட்டப்பட்டது. இது 24 கிலோ மீட்டர் நீளமும், சுமார் 2 கிலோ மீட்டர் அகலமும், 116 மீட்டர் உயரமும் கொண்டது. இந்த அணையின் அடிவாரத்தில் புகழ்பெற்ற வன சுற்றுச்சூழல் பூங்கா அமைந்துள்ளது.

    தென்காசி மாவட்டத்திற்கு மிக அருகாமையில் இருப்பதால் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இந்த பூங்காவை வந்து பார்த்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் தென்மலை அணையையும் பார்வையிட்டு செல்வது வழக்கம். கடந்த ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக அணை முழு கொள்ளளவான 116 மீட்டரை 2 முறை எட்டியது. இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைக்கு அதிகளவு நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது அணையின் கொள்ளளவு 113 மீட்டராக உயர்ந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி நிமிடத்திற்கு 115.8 மீட்டர் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்த அணையில்ருந்து 7.5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் 2 யூனிட்டுகள் மூலம் மின் உற்பத்தியும் செய்யப்பட்டு வருகிறது. தென்மலை அணை இந்த ஆண்டு குறிப்பிட்ட நேரத்தில் நிரம்ப உள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் பெரிதும் மகிழ்ச்சி யடைந்துள்ளனர். இதற்கிடையே அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் வெளியேற்ற திட்டமிடப்பட்டு வெளி யேற்றப்படுகிறது. அதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

    • பரிசளிப்பு விழாவுக்கு நகர வாணியா் சமுதாயம் கல்வி நிதி தலைவா் குமரேசன் தலைமை தாங்கினார்.
    • விழாவில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, பரிசு வழங்கப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் நகர வாணியா் சமுதாயம் சார்பில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான 25-ம் ஆண்டு கல்வி நிதி மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. நகர வாணியா் சமுதாயம் கல்வி நிதி தலைவா் குமரேசன் தலைமை தாங்கினார். சமுதாய தலைவா்கள் மாரியப்பன், மோகன்ராஜ், முருகன், சுடலையாண்டி, துரைராஜ், லெட்சுமியம்மாள், நாராயணன், முருகையா ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

    நகர வாணியா் சமுதாய (கல்வி நிதி) துணைத்தலைவா் ராமகிருஷ்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளா் முருகன் வரவு-செலவு கணக்கு வாசித்தார். கல்வி நிதி செயலாளா் செண்பக குற்றாலம் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து சுப்பையா, ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வா் மீனாட்சிசுந்தரம், நகர வாணியா் சமுதாய துணைச்செயலாளா் திருமலை, முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் செந்தில்ஆறுமுகம், குருசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, பரிசு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சமுதாய நிர்வாகிகள், விழா கமிட்டியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் நகர வாணியா் கல்வி நிதி துணைச்செயலாளா் கருப்பசாமி நன்றி கூறினார்.

    • சங்கர் விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
    • விழாவையொட்டி விநாயகர் தேங்காய் மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கணக்கபிள்ளைவலசை வாரியர் சமுகத்திற்கு பாத்தியப்பட்ட சங்கர் விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி விநாயகர் தேங்காய் மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனர். ஏற்பாடுகளை சமுதாய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    இதேபோல் செங்கோட்டை அருகே உள்ள வல்லம், இலஞ்சி, பிரானூர் புளியரை, புதூர், கேசவபுரம், கட்டளைகுடியிருப்பு உள்ளிட்ட பகுதிகயில் உள்ள சிவபிள்ளையார் கோவில், செல்வவிநாயகர் கோவில், சந்திவிநாயகர், முக்தி விநாயகர், வீரகேரள விநாயகர் உள்ளிட்ட கோயில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. செங்கோட்டை பால விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சுந்தரராஜபெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
    • விழாவையொட்டி சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் வழிபாடு நடந்தது.

    செங்கோட்டை:

    புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு நேற்று செங்கோட்டை அழகிய மனவாள பெருமாள் கோவில், அறம்வளர்த்த நாயகி அம்மன் கோவிலில்களில் கருட சேவை மற்றும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. செங்கோட்டை சுந்தரராஜபெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, மாலையில் கொட்டும் மழையிலும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதைமுன்னிட்டு கோவிலின் வீற்றிருக்கும் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் வழிபாடு நடந்தது. தொடர்ந்து மாலையில் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன.

    இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். மாலை அலங்காரம், தீபாராதனை பிரார்த்தனை, பஜனை நடைபெற்றது. பிரானுர் பார்டர்ஆஞ்சநேயர், செங்கோட்டை சிவன் கோவில், இலத்தூர் சனிஸ்வரர் கோவில் உள்பட பல கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    • செங்கோட்டை நகரில் மட்டும் சுமார் 37 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது.
    • ஊர்வலம் வரும் இடங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி, விஜர்சன ஊர்வ லங்கள் ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    37 விநாயகர் சிலைகள்

    கடந்த 30 ஆண்டுகளாக இந்த பகுதியில் விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டும் செங்கோட்டை நகரில் மட்டும் சுமார் 37 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு அவை முறையே பள்ளிமேட்டு பகுதி, காமாட்சி அம்மன் கோவில், வீரகேரள விநாயகர் கோவில், பூதத்தார் கோவில், காளியம்மன் கோவில் திடல், ஓம் காளி திடல், வம்பளந்தான் முக்கு, செல்வவிநாயகர் கோவில், எஸ்.ஆர்.கே. தெரு, மேலூர் அப்பா மாடசாமி, பள்ளத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது.

    இந்த சிலைகள் அனைத்தும் இன்று ஓம்காளி திடலில் இருந்து புறப்பட்டு வம்பளந்தான் முக்கு, செல்வ விநாயகர் கோவில் தெரு, தாலுகா அலுவலக முக்கு, மேலூர், பெரிய பள்ளிவாசல் வழியாக மேலபஜார், பூதத்தார் கோவில், காசுகடை பஜார், கீழ பஜார், காவல்நிலையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு செங்கோட்டை குண்டாறு அணை பகுதியில் விஜர்சனம் செய்யப்பட உள்ளது.

    பாதுகாப்புடன் விஜர்சனம்

    விநாயகர் சிலைகள் விஜர்சனத்திற்காக எந்தவித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின்பேரில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 21 இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் மொத்தம் 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட உள்ள அனைத்து இடங்களிலும் சுமார் 65 சி.சி.டி.வி. காமிராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ட்ரோன் காமிராக்கள் மூலமாகவும் ஊர்வலம் செல்லும் விநாயகர் சிலைகளை கண்காணிக்க ஏற்பாடு தயார் நிலையில் உள்ளது. தொடர்ந்து குண்டாற்றில் அவை விஜர்சனம் செய்யபடுகிறது.

    கிராமப்புற சிலைகள்

    செங்கோட்டையை அடுத்துள்ள வல்லம், பிரானூர், தேன்பொத்தை ஆகிய 3 இடங்களில் வைக்கப்பட்ட சிலைகள் வழிபாடுகளுக்கு பின் விஜர்சனம் செய்யபடுகிறது. புளியரை, கேசவபுரம், லாலா குடியிருப்பில், தெற்கு தெரு மற்றும் வடக்குதெரு ஆகிய 5 இடங்களிலும், பண்பொழியில் தைக்கா தெரு, தெற்கு தெரு, தெற்கு ரதவீதி, பேட்டை தெரு, தர்மர் கோவில், அரசமர தெரு, திட்டு தெரு உள்ளிட்ட 11 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இன்று போலீஸ் பாதுகாப்புடன் அரிகரா நதியில் விஜர்சனம் செய்யப்பட உள்ளது.

    இதேபோன்று தென்காசி யில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் அனைத்தும் இன்று மாலை ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.

    கடையநல்லூரில் 31 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப ட்டுள்ளது. மேல கடையநல்லூர் கண்ணார் தெரு, கிருஷ்ணா புரத்தில் மகாராஜ கணபதி, மறுகால் தெரு, வடக்குவா செல்வி அம்மன் கோவில், மாவடிக்கால், முத்து கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்ப ட்டுள்ளது. புளியங்குடியில் 35 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ள்ளது.

    நெல்லை-தூத்துக்குடி

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 222 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் 5 சிலைகள் கரைக்கப்பட்டு விட்டன. மாநகரில் 76 இடங்களில் சிலைகள் பிர திஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வருகிற 24-ந்தேதி கரைக்கப்படுகிறது.

    இதனையொட்டி மாவட்டம் முழுவதும் சுமார் 1,000 போலீசாரும், மாநகரில் 500 போலீசாரும் சிலைகளை பாதுகாத்து வருகின்றனர். களக்காட்டில் தோப்புத்தெரு, சாலை புதூர், கீழப்பத்தை, வியாசராஜபுரம், மாவடி, மலையடிபுதூர், பொத்தையடி பகுதியில் 14 சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. சிதம்பரபுரம், மூங்கிலடி உள்ளிட்ட பகுதிகளில் 15 இடங்களிலும், இடையன்குளம், கீழ உப்பூரணி, மஞ்சவிளை, பத்மநேரி உள்ளிட்ட பகுதிகளில் 24 இடங்களிலும் என மொத்தம் 53 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவை உவரி கடல், பாபநாசம் தாமிரபரணி ஆறுகளில் விஜர்சனம் செய்யப்படுகிறது.

    திருச்செந்தூர் நகர இந்து முன்னணி சார்பில் வ.உ.சி. திடலில் 7 அடி உயரம் கொண்ட கல்வி கணபதி சிலையும், சுப்பிரமணியபுரம், ஜீவாநகர், சண்முகபுரம், முத்துநகர், முத்துமாலையம்மன் கோவில் தெரு, அண்ணா காலனி கோவில் தெரு உள்ளிட்ட 8 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

    உடன்குடி சீர்காட்சி, தைக்கா ஊர், பரமன்குறிச்சி, வட்டன்விளை, விஜய நாராயணபுரம், முத்து கிருஷ்ணாபுரம், அம்மன்புரம், முருகேசபுரம், குலசேக ரன்பட்டினம், லட்சுமிபுரம், வேப்பங்காடு, அரசர் பேட்டை கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து குடும்பத்துடன் வழிபாடு செய்து வருகின்றனர்.

    • செங்கோட்டை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவை உள்ளன.
    • வருங்காலத்தில் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் காணாமல் போய்விடும்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, இலஞ்சி, தேன்பொத்தை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவை உள்ளன. இவர்கள் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா காலத்தில் களிமண்ணால் விநாயகர் சிலை தயாரித்து விற்பனை செய்து அதன் மூலம் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    இதில் செங்கோட்டை நகர் பகுதியில் மட்டும் சுமார் 50 முதல் 60 விநாயகர் சிலைகளை பல்வேறு வடிவங்களில் வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப 1 அடி முதல் 7 அடி வரை சுத்த களிமண்ணால் விநாயகர் சிலைகளை வடிவமைத்து விற்பனை செய்வார்கள். இவற்றை செங்கோட்டை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவிற்கும் ரூ. 1,000 முதல் ரூ.7,000 வரை விற்பனை செய்து லாபம் ஈட்டி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில வருடங்களாவே விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்காக ஆந்திரா, புதுச்சேரி, விஜயவாடா, திருப்பதி ஆகிய பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் தயாரிக்க தேவையான கிழங்குமாவு, காகித கூழ், ரசா யனங்கள் உள்ளிட்ட வை கொண்டு வரப்பட்டு அதன் மூலம் சிலைகள் தயாரித்து சிலர் விற்பனை செய்கின்றனர்.

    இதனால் அந்த சிலைகள் பல வண்ணங்களில் மக்களை ஈர்க்கும் வகையில் உள்ளதால், செங்கோட்டை மக்கள் களிமண்ணால் தயாரிக்கும் சிலைகளுக்கு மவுசு குறைந்துவிட்டது. நாகரீக வளர்ச்சி என்று கூறிக்கொண்டு, நீர்நிலைக ளை மாசுபடுத்தும் ரசா யனங்கள் கலந்த சிலைகளையே மக்கள் அதிகம் விரும்புவதால், களிமண் சிலை விற்பனை குறைந்து விட்டதாகவும், இதனால் வாழ்வாதாரம் பாதிப்ப டைந்துள்ளதாகவும் செங்கோட்டை சிலை தயாரிப்பாளர்கள் குமுறு கின்றனர்.

    இதே நிலை நீடித்தால் வருங்காலத்தில் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் காணாமல் போய்விடும். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×