search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயற்கை"

    • செஞ்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலையில் பனிமூட்டம் புகை மண்டலம் போல காட்சி அளித்தது.
    • இது குறித்து ஒருவர் கூறுகையில் தற்போது எல்லாம் தலை கீழாக மாறுகிறது.

    விழுப்புரம்:

    மழை பெய்ய வேண்டிய இந்த சமயத்தில் செஞ்சி பகுதியில் நேற்று திடீரென கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டது. செஞ்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலையில் பனிமூட்டம் புகை மண்டலம் போல காட்சி அளித்தது. இதனால் வாகனங்களில் செல்வோர் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ஓட்டி சென்றனர். இந்த பனி மூட்டம் காலை 7மணி வரை நீடித்தது. கார்த்திகை, மார்கழி மாதங்களில் தான் பனிமூட்டம் இருக்கும். தற்போது மழை காலம். எனேவ பனிமூட்டம் இருப்பது இல்லை. இது குறித்து ஒருவர் கூறுகையில் தற்போது எல்லாம் தலை கீழாக மாறுகிறது. அது போல் இயற்கையும் மாறுகிறது என்றார்.

    • வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை மற்றும் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி வள்ளிபுரம் கிராமத்தில் நடைபெற்றது.
    • வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா தலைமை வகித்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை மற்றும் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி வள்ளிபுரம் கிராமத்தில் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா தலைமை வகித்தார். பயிற்சியில் மோகனூர் வட்டார அங்கக வேளாண்மை சான்று பெற்ற விவசாயி வேலுசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அங்கக வேளாண் சான்று பெறும் முறைகளை விளக்கினார். விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விரிவாகப் பதிலளித்தார்.இதில் வள்ளிபுரம் இயற்கை விவசாயி கலைவாணி அங்கக வேளாண்மையில் தனது பண்ணை அனுபவங்களை விவசாயிகளிடம் பகிர்ந்து கொண்டார்.பயிற்சியில் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் கவிசங்கர், உதவி வேளாண்மை அலுவலர் சதீஸ்குமார் ஆகியோர் அட்மா திட்ட பணிகள் குறித்தும் அதன் செயல்பாடுகள், உழவன் செயலின் பதிவிறக்கம் அதன் பயன்கள், பிரதமரின் கவுரவ நிதி தொகை பற்றி விளக்கமளித்து வருகை புரிந்த விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி நன்றி கூறினர்.

    • காலிமனையில் மரங்கள் இருந்ததால் அதனை அகற்றும் நிலை ஏற்பட்டது.
    • ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியின் மரத்தை மறு நடவு செய்தனர்.

    தென்காசி:

    தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சக்திநகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மருத்துவர்கள் தங்கள் காலிமனையில் வீடு கட்டும் பணி தொடங்க இருந்தனர். அந்த காலி மனையில் மரங்கள் இருந்ததால் அதனை அகற்றும் நிலை ஏற்பட்டது. மரங்களை விறகிற்காக வெட்டுவதற்கு மனமின்றி அதனை வேருடன் அகற்றி மறு நடவு செய்வதற்கு முடிவு செய்தனர்.

    இதற்காக ஆலங்குளத்தில் உள்ள பசுமை இயக்கம் தன்னார்வலர்களை தொடர்பு கொண்டனர். இதனையடுத்து தென்காசி சென்ற தன்னார்வலர்கள் அங்கிருந்த வேம்பு, புங்கை என காலிமனையில் இருந்த 3 மரத்தை வேருடன் எடுத்து ஆலங்குளம் கொண்டு வந்தனர். ஆலங்குளம் தீயணைப்பு நிலையம் முன்பு ஆலங்குளம் மருத்துவர் புஷ்பலதா ஜான் ஏற்பாட்டில் ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியின் மரத்தை மறு நடவு செய்தனர். மரம் நடும் நிகழ்வில் பசுமை இயக்கம் தன்னார்வலர்கள், தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    • செங்கோட்டை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவை உள்ளன.
    • வருங்காலத்தில் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் காணாமல் போய்விடும்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, இலஞ்சி, தேன்பொத்தை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவை உள்ளன. இவர்கள் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா காலத்தில் களிமண்ணால் விநாயகர் சிலை தயாரித்து விற்பனை செய்து அதன் மூலம் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    இதில் செங்கோட்டை நகர் பகுதியில் மட்டும் சுமார் 50 முதல் 60 விநாயகர் சிலைகளை பல்வேறு வடிவங்களில் வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப 1 அடி முதல் 7 அடி வரை சுத்த களிமண்ணால் விநாயகர் சிலைகளை வடிவமைத்து விற்பனை செய்வார்கள். இவற்றை செங்கோட்டை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவிற்கும் ரூ. 1,000 முதல் ரூ.7,000 வரை விற்பனை செய்து லாபம் ஈட்டி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில வருடங்களாவே விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்காக ஆந்திரா, புதுச்சேரி, விஜயவாடா, திருப்பதி ஆகிய பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் தயாரிக்க தேவையான கிழங்குமாவு, காகித கூழ், ரசா யனங்கள் உள்ளிட்ட வை கொண்டு வரப்பட்டு அதன் மூலம் சிலைகள் தயாரித்து சிலர் விற்பனை செய்கின்றனர்.

    இதனால் அந்த சிலைகள் பல வண்ணங்களில் மக்களை ஈர்க்கும் வகையில் உள்ளதால், செங்கோட்டை மக்கள் களிமண்ணால் தயாரிக்கும் சிலைகளுக்கு மவுசு குறைந்துவிட்டது. நாகரீக வளர்ச்சி என்று கூறிக்கொண்டு, நீர்நிலைக ளை மாசுபடுத்தும் ரசா யனங்கள் கலந்த சிலைகளையே மக்கள் அதிகம் விரும்புவதால், களிமண் சிலை விற்பனை குறைந்து விட்டதாகவும், இதனால் வாழ்வாதாரம் பாதிப்ப டைந்துள்ளதாகவும் செங்கோட்டை சிலை தயாரிப்பாளர்கள் குமுறு கின்றனர்.

    இதே நிலை நீடித்தால் வருங்காலத்தில் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் காணாமல் போய்விடும். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஓவிய போட்டி நடந்து சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    • பின்னர், பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியர் வசந்தா தலைமை தாங்கி, மாணவர்களுக்கு இயற்கை வளங்களை பாதுகாப்பதின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

    இதில் பள்ளி செயலாளர் ஆறுமுகம், பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன், ஆசிரியர்கள் சந்திரசேகரன், சரண்யா, இலக்கியா, விஜயலக்ஷ்மி, ஆனந்தன் உள்ளிட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, ஓவியப்போட்டி நடந்தது. அதில் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர், பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.

    • விவசாய நடைமுறைகளை ஊக்குவிப்பதில் தென்னை நார் கழிவு முக்கிய பங்கு வகிக்கிறது.
    • சுற்றுச்சூழலில் நிலைத்திருக்கும் செயற்கை பொருட்கள் போன்று இல்லாமல் தென்னை நார் இயற்கையானது.

    உடுமலை :

    இயற்கையை பாதுகாப்பதில் தென்னை நார் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என கயிறு வாரிய தலைவர் குப்புராமு தெரிவித்தார். இது குறித்து கயிறு வாரிய தலைவர் குப்புராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்னை நார் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பல்துறை பயன்பாடுகளுடன் கைகொடுக்கிறது. பல ஆண்டுகளாக சுற்றுச்சூழலில் நிலைத்திருக்கும் செயற்கை பொருட்கள் போன்று இல்லாமல் தென்னை நார் இயற்கையானது.நீடித்த விவசாய நடைமுறைகளை ஊக்குவிப்பதில் தென்னை நார் கழிவு முக்கிய பங்கு வகிக்கிறது. தென்னை நார் கழிவு ஈரப்பதத்தை தக்க வைத்து காற்றோட்ட பண்புகளை வழங்குகிறது. ஆரோக்கியமான தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

    மண்ணில் ஈரப்பதம், ஊட்டசத்தை தக்க வைக்கவும், திறன் மேம்படுத்தவும் தென்னை நார் கழிவை கரிம திருத்தமாக சேர்க்கலாம். இது தாவரங்களில் சிறந்த காற்றோட்டம் வேர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.தோட்டக்கலையில் பிளாஸ்டிக் பூந்தொட்டிகளு க்கு மாற்றாக தென்னை நார் பூந்தொட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. மண் அரிமானம், மண் சரிவுகளை கட்டுப்படுத்த தென்னை நார் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் பயன்படுத்த ப்படுகின்றன. தென்னை நார் பொருட்களை பயன்படுத்து வதால் சுற்றுச்சூழல் மாசுபடுத்தும் கழிவுகளின் அளவை குறைக்க முடியும்.இதன் உற்பத்தி குறைந்த சுற்றுச்சூழல் தாக்கத்தை கொண்டுள்ளது. தென்னை நார்களை பிரித்தெடுப்பதில் மிக குறைந்தபட்ச ரசாயன சிகிச்சைகள் மட்டுமே உள்ளது.கழிவு என கருதி ஒதுக்கிய இந்த பொருட்களை கயிறு வாரியம் ஆராய்ச்சி வாயிலாக செல்வமாகவும், அனைத்து சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு மாற்றாகவும் மாற்றியதன் வாயிலாக குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இயற்கை வேளாண்மையில் அசத்தும் மதுரை விவசாயிக்கு மாநில விருது வழங்க கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.
    மதுரை

    திருமங்கலத்தை அடுத்த சவுடார்பட்டியை சேர்ந்த இயற்கை விவசாயி சுப்புராஜ் என்பவர் தோட்டத்தில் நெல்லி 6 ஏக்கர், சப்போட்டா 4 ஏக்கர், கொய்யா 7 ஏக்கர், கொடிக்காய்புளி 2.5 ஏக்கர், அத்தி 3 ஏக்கர் போன்ற பழப்பயிர்களை 10 ஆண்டுகளாக பயிரிட்டு வருகிறார். 

    இதற்காக அவர் ரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை வேளாண் இடு பொருட்களான பஞ்சகாவ்யா, தசகாவ்யா, அமிர்த கரைசல், மீன் அமிலம் ஆகியவற்றை  பயன்படுத்துகிறார். இதன் காரணமாக அவருக்கு ஆண்டு தோறும் 125 டன் பழங்கள் வரை விளைச்சல் கிடைக்கிறது.

    விவசாயி சுப்புராஜ் கூறுகையில், இயற்கை வேளாண் இடுபொருட்களை மட்டுமே விவசாயத்திற்கு பயன்படுத்துவதால், உடலுக்கு கெடுதி இல்லை. மண் வளமும் மேம்படுத்தப்பட்டு உள்ளது  என்றார்.

    விவசாயி சுப்புராஜின் இயற்கை வேளாண்மை குறித்து பாராட்டு தெரிவித்த கலெக்டர் அனிஷ் சேகர்,  தமிழகத்தில் இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு, மாநில அளவில் விருது வழங்கப்படுகிறது. இதற்காக சுப்புராஜின் பெயரை பரிந்துரைத்து உள்ளோம்” என்று தெரிவித்தார்.

    அப்போது அவருடன் வேளாண்மை இணை இயக்குநர் விவேகானந்தன், தோட்டக்கலை துணை இயக்குநர் ரேவதி உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    ×