என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர் மாசு"

    • சர்க்கரை ஆலைகளிலிருந்து இரசாயனக் கழிவுகள் நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது.
    • அனைவரும் நீண்டகால நோயாளிகள் என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பட் மாவட்டம், புத்பூர் கிராமத்தில் கடந்த 15 நாட்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அருகிலுள்ள வடிகாலில் வெளியேற்றப்படும் நச்சு கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதே இதற்குக் காரணம் என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சர்க்கரை ஆலைகளிலிருந்து வெளியேறும் இரசாயனக் கழிவுகளும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரும் நிலத்தடி நீரை மாசுபடுத்துவதாகக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் குடிநீர் அசுத்தமாகி, கால்நடைகள் மற்றும் பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

    இந்த விவகாரம் குறித்து 9 மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அனைவரும் நீண்டகால நோயாளிகள் என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    ராஷ்டிரிய லோக் தல் கட்சியை சேர்ந்த பாக்பட் எம்.பி. ராஜ்குமார் சங்வான், இது ஒரு தீவிரமான பிரச்சினை என்றும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், பாக்பட்டில் போதுமான சுகாதார வசதிகள் இல்லாததும் ஒரு பெரிய கவலை என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • செங்கோட்டை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவை உள்ளன.
    • வருங்காலத்தில் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் காணாமல் போய்விடும்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, இலஞ்சி, தேன்பொத்தை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவை உள்ளன. இவர்கள் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா காலத்தில் களிமண்ணால் விநாயகர் சிலை தயாரித்து விற்பனை செய்து அதன் மூலம் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    இதில் செங்கோட்டை நகர் பகுதியில் மட்டும் சுமார் 50 முதல் 60 விநாயகர் சிலைகளை பல்வேறு வடிவங்களில் வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப 1 அடி முதல் 7 அடி வரை சுத்த களிமண்ணால் விநாயகர் சிலைகளை வடிவமைத்து விற்பனை செய்வார்கள். இவற்றை செங்கோட்டை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவிற்கும் ரூ. 1,000 முதல் ரூ.7,000 வரை விற்பனை செய்து லாபம் ஈட்டி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில வருடங்களாவே விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்காக ஆந்திரா, புதுச்சேரி, விஜயவாடா, திருப்பதி ஆகிய பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் தயாரிக்க தேவையான கிழங்குமாவு, காகித கூழ், ரசா யனங்கள் உள்ளிட்ட வை கொண்டு வரப்பட்டு அதன் மூலம் சிலைகள் தயாரித்து சிலர் விற்பனை செய்கின்றனர்.

    இதனால் அந்த சிலைகள் பல வண்ணங்களில் மக்களை ஈர்க்கும் வகையில் உள்ளதால், செங்கோட்டை மக்கள் களிமண்ணால் தயாரிக்கும் சிலைகளுக்கு மவுசு குறைந்துவிட்டது. நாகரீக வளர்ச்சி என்று கூறிக்கொண்டு, நீர்நிலைக ளை மாசுபடுத்தும் ரசா யனங்கள் கலந்த சிலைகளையே மக்கள் அதிகம் விரும்புவதால், களிமண் சிலை விற்பனை குறைந்து விட்டதாகவும், இதனால் வாழ்வாதாரம் பாதிப்ப டைந்துள்ளதாகவும் செங்கோட்டை சிலை தயாரிப்பாளர்கள் குமுறு கின்றனர்.

    இதே நிலை நீடித்தால் வருங்காலத்தில் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் காணாமல் போய்விடும். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×