search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உதயகிரி கோட்டையில் உலக சுற்றுச்சூழல் தின விழா
    X

    உதயகிரி கோட்டையில் உலக சுற்றுச்சூழல் தின விழா

    • இயற்கையுடன் இணைந்து நிலையாக வாழ்தல் என்ற மையக்கருத்தில் மரக்கன்றை நட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள் சோபன் வனசரகர் ரவீந்திரன், உள்பட வன ஊழியர்கள் மற்றும் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் தேசிய பசுமைப்படை கன்னியாகுமரி மாவட்டம் இணைந்து 'ஒரே ஒரு பூமி' என்ற சிந்தனையில் புலியூர்குறிச்சி உயிரின பன்மய பூங்காவில் வைத்து உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமை தாங்கினார். தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோபிரகாஷ் வரவேற்றார்.

    சுற்றுச்சூழல் உறுதி மொழியை தக்கலை கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சோபா வாசித்தார். துண்டு பிரசுரங்களை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட அதை வன அலுவலர் பெற்றுக்கொண்டார்‌. தொடர்ந்து மஞ்சள் பைகளை அனைவருக்கும் வழங்கினார்.

    பின் இயற்கையுடன் இணைந்து நிலையாக வாழ்தல் என்ற மையக்கருத்தில் மரக்கன்றை நட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள் சோபன் வனசரகர் ரவீந்திரன், உள்பட வன ஊழியர்கள் மற்றும் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எட்வின் கிளாட்சன் நன்றி கூறினார்.

    Next Story
    ×